Homeஆன்மீகம்மலையேறும் பாதை தண்டபாணி ஆசிரமத்தின் குருபெயர்ச்சி பலன்

மலையேறும் பாதை தண்டபாணி ஆசிரமத்தின் குருபெயர்ச்சி பலன்

திருவண்ணாமலை தண்டபாணி ஆசிரமம்

சித்தர்கள் வாழும் ஞானபூமி¸ ‘தென்கைலாயம்” என்றழைக்கப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் ‘நெருப்பு” (யாகம்) ஸ்தலமான நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை மலைச்சாரலில்¸ மலைஏறும் வழியில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டபாணி ஆசிரமம் உள்ளது.

இங்கு வருகிற 15ந் தேதி ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர்  திருவுளப்படி ‘ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாக பூஜை”அரசின் கொரானா கால வழிக்காட்டுதலின்படி நடைபெற உள்ளது.

சுபகிரகமான ‘ஸ்ரீ குரு பகவான்” வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ‘தனம்” எனும் செல்வத்தை தருபவர். திருமணம்¸ கல்வி¸ மாங்கல்யம்¸ குழந்தை பாக்கியம்¸ அறிவாற்றல்¸ பொன் போன்றவற்றை தருபவர் ‘ஸ்ரீ குரு பகவானே”.இதனை கருத்தில் கொண்டு திருமணம்¸ கல்வி¸ தொழில்¸ வேலை வாய்ப்பு¸ புத்திரம்¸ ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும்¸ (இந்த குருபெயர்ச்சியால் ‘கொரானா” போன்ற கொடிய வைரஸ்களின் பரவல் அதிகமுள்ளதால்) கிரக தோஷங்களால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறைகள் நீங்கி நிம்மதி ஏற்பட யாக பூஜைகளில் அக்னியே பிரதானமாக விளங்குவதால் அக்னி ஸ்தலமான இந்த அருணாச்சலத்தில் செய்யும் யாக பூஜைகள் முழுபலனை தரும் எனவும்¸ இங்கு பக்தர்கள் இலவசமாக அர்ச்சனை செய்து கொள்ளலாம் எனவும்¸ விருப்பப்பட்டவர்கள் நன்கொடை கொடுக்கலாம் எனவும் இலவச அர்ச்சனைக்கு தண்டபாணி ஆசிரம வெப்சைட்டில் உள்ள மின் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். அல்லது  9894803009¸ 9443492469 என்ற  தொலைபேசி¸ வாட்ஸ் அப் எண்ணுக்கு பெயர்¸ நட்சத்திரம்¸ தொலைபேசி எண்¸ முழு முகவரியை தெரிவிக்கலாம் எனவும் ஆசிரம செயலாளர் சித்தர் மகன். சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் கணித்துள்ள குரு பெயர்ச்சி பொது பலன் மற்றும் 12 ராசிக்கான பலன்கள் வருமாறு¸

குரு பெயர்ச்சி

வரும் 15-11-2020¸ ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.48 மணியளவில் ஸ்ரீ குரு பகவான் மகர ராசிக்கு செல்கிறார். மகர ராசியில் நீசம் பெற்ற நிலையில்  சுமார் ஒரு வருடம் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். மகர ராசியில் ஸ்ரீ குரு பகவான் நீசம் பெறுகிறார் என்று பொதுவாக குறிப்பிட்டாலும்¸ வரும் ஸ்ரீ சனி பெயர்ச்சியால் மகரத்தில் ஆட்சி பெற்ற சனி பகாவானுடன் குரு பகவான் இணைவதால் நீசத்திற்கு பங்கம் ஏற்பட்டு ஸ்ரீ குரு பகவான் உச்ச பலத்தையே பெறுகிறார். இதனால் பலருக்கு நீசபங்க இராஜ யோகத்தை தரவிருக்கிறார். இந்த இணைவானது அரிதாக நிகழக்கூடியதாகும். குருபகவான் சனிபகவானுடன் இணைவதால் குரு சண்டாள யோகமும் பலருக்கு ஏற்படும். இருப்பினும் ஸ்ரீ குரு பகவான் ரிஷபத்தில் நீச நிலையில் உள்ள ஸ்ரீ ராகு பகவானை பார்வையிடுவதால் ஸ்ரீ ராகு பகவானும் பலம் பெறுகிறார். இதனால் தனிப்பட்ட ஜாதக அடிப்படையில் பலருக்கு இராஜ யோகத்தை தந்தாலும்¸ ராகு பகவானின் அம்சமான கொடிய வைரஸ்களின் ஆதிக்கமும்  உலகில் அதிகரிக்கும். உயிர் பலிகளும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட கிரக சஞ்சாரங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருசில முறை அரிதாக நடைபெறுவதாகும். இதனால் சிலரை கோபுரத்திற்கும்¸ சிலரை குப்பை மேட்டிற்கும் அழைத்து செல்லும்.

இனி அவரவர் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்.

மேஷ ராசி : ராசிக்கு 10-ஆம் இடத்திற்கு வரும் குருபகவானால் தங்களுக்கு சோதனை காலமே. தன நஷ்டம்¸ குடும்பத்தில் பிரச்சனை¸ உடலில் சோர்வு¸ வீண் அலைச்சல்¸ நோய்நொடிகளின் தொல்லை¸ போன்ற பலன்கள் ஏற்படும். இறைவழிபாடும் கிரக வழிபாடும் தங்களுக்கு அவசியம் தேவை.

ரிஷப ராசி : ராசிக்கு 9-ஆம் இடத்திற்கு வரும் தேவகுருவால் இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கும். பல நன்மைகள் தங்களுக்கு குருபகவான் தரவிருக்கிறார். பொன்பொருள் சேரும். தன லாபம்¸ தொழிலில் வெற்றி¸ குடும்பத்தில் சந்தோஷம்¸ திருமணம் கைகூடுதல்¸ புத்திர பாக்கியம்¸ வேலை வாய்ப்பு¸ பதவி உயர்வு¸ ஊதிய உயர்வு¸ கடன் அடைபடுதல் போன்ற நற்பலங்கள் ஏற்படும். இருப்பினும் சில நேரங்களில் தேவையில்லாத பயம்¸ குழப்பம் வரும்.

மிதுன ராசி :ராசிக்கு 8-ஆம் இடம் எனும் அஷ்டமத்திற்கு குரு பகவான் வருகிறார். குரு பகவானுடன் சனி பகவானும் அல்லவா அஷ்டமத்தில் இணைகிறார். எனவே எதிலும் பொருமை¸ ஜாக்கிரதை தேவை. இறைவழிபாடும்¸ கிரக வழிபாடும்¸ தாங்கள் செய்த தானதருமங்களும்தான் உங்களை காப்பாற்றும். மனதில் தைரியத்தை மட்டும் விட்டு விடாதீர்கள். இதுவும் கடந்து போகும் என நினையுங்கள்.

கடக ராசி : ராசிக்கு 7-ஆம் இடத்திற்கு பொன்னவன் குருபகவான் வருகிறார். இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். தன லாபம்¸ பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். இழுபறியில் இருந்த திருமணம் கைகூடும். இருப்பினும் காதல் திருமணம் செய்பவர்களுக்கு ஒராண்டிற்குப்பிறகு பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கவனத்துடன் இருக்கவும். மற்றப்படி கணவன்-மனைவி  ஒற்றுமை¸ குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.

சிம்ம ராசி : ராசிக்கு 6-ஆம் இடமான கடன்¸ நோய்நொடி¸ எதிர்ப்பு ஆகிய ஸ்தானத்திற்கு ஸ்ரீ குருபகவான் வருவதால் கவலை வேண்டாம். அதே 6-ஆம் இடத்திற்கு வரும் ஸ்ரீ சனிபகவானால் அனைத்தையும் சமாளித்து வெல்வீர்கள். ஆனால் புதிதாக கடன் வாங்குவது¸ கோர்ட்டு கேஸ் என அலைவது போன்றவையும் ஏற்படும். வருமானத்தை பொருத்தவரை வரவும் செலவும் சமமாக இருக்கும். நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் வீடுகட்டுதல்¸ வாகனம் வாங்குதல் போன்ற நல்ல செலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி : ராசிக்கு 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பொன்னவன் குருபகவான் சஞ்சரிப்பதால் குருவின் பலத்தையும்¸ பார்வையையும் பெறுகிறீர்கள்.அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி ஏற்படும். தனம்¸ பொன் பொருள் பெருகும். திருமணம் ப்ராப்தம்¸ புத்திர பாக்கியம் ஏற்படும்.காதல் கைகூடும். தொழிலில் முன்னேற்றம்¸ பணி புரியும் இடத்தில் பாராட்டும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

துலாம் ராசி : ராசிக்கு 4-ஆம் இடமமான அர்த்தாஷ்டமத்திற்கு தேவகுருவான பிரகஸ்பதி பகவான் வருவது சாதாரண நிலைதான் என்றாலும்¸  அர்த்தாஷ்டமத்திற்கு சனிபகவானும் வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசியை சனிபகவான்பார்ப்பதாலும்¸ ஏற்கனவே 8-எனும் அஷ்டமத்தில் இருக்கும் ராகு பகவனாலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டமிது. இழப்புகள் பலவகையில் அமையும். தானதர்மங்களுடன் கூடிய இறைவழிபாடும் கிரகவழிபாடும் தாங்கள் மேற்கொண்டால் மட்டுமே உங்களின் துன்பத்தை குறைக்க முடியும்.

விருட்சிக ராசி : ராசிக்கு 3-ஆம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பது நல்லது அல்ல என்றாலும்¸ 3-ஆம் இடமான தைரிய ஸ்தானத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சஞ்சரிப்பது எதையும் துணிவுடன் எதிர் கொள்ளும் வல்லமையை  தருவார். வரவும் செலவும் சமமாக இருக்கும். திருமணம் தள்ளி போகுதல்¸ கூட்டு தொழிலில் பிரச்சனை¸ கணவன்-மனைவி பிரச்சனை¸ நண்பர்களிடையே பிரச்சனை போன்றவை ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. இறைவழிபாடும் கிரகவழிபாடும் அவசியம் வேண்டும்.

தனுசு ராசி : ராசிக்கு அதிபதியான குருபகவான் 2-ஆம் இடமான தனம்¸ வாக்கு¸ குடும்ப ஸ்தானத்திற்கு வந்து குருபலத்தைதருவதால் நன்மைகளையே தரும். ஏழரை ஆண்டு சனிபகவானின் துன்பங்களை குறைக்கும். தனம்¸ பொன்பொருள் பெருகும். வெற்றி வாய்ப்புகள்¸ தெய்வ தரிசனம்¸ குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்ல நிகழ்வுகளும் ஏற்படும்.  நீண்ட காலமாக இருந்த நோய்நொடி விலகும். நாக்கில் சனிபகவான் இருப்பதால் நாவடக்கம் அவசியம் தேவை.

மகர ராசி : ராசியில் குருபகவான்¸ ஏழரை ஆண்டு சனிபகவானுடன் இணைந்து சஞ்சரிப்பது பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இருப்பினும் தெய்வபலத்தை தரும் ஸ்ரீ கேது பகவானால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். கூட இருப்பவர்களினால் துரோகம்¸ கோர்டு கேஸ்களில் தோல்வி¸ சிறைவாசம்¸ நோய்களினால் பாதிப்பு¸ கடன் தொல்லை ஏற்படும். எனவே எதிலும் பொருமை¸ கவனம் தேவை. இறைவழிபாடும்¸ கிரக வழிபாடும்¸ தாங்கள் செய்ததான தருமங்களும் உங்களை காப்பாற்றும்.

கும்ப ராசி : ராசிக்கு விரைய ஸ்தனாமான 12-ல் தனக்காரகன் ஏழரை ஆண்டு சனிபகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதும்¸ ராகு-கேது பகவான்களின் சஞ்சாரமும் தீமைகளை தருவதாகவே அமைந்துள்ளது. எதிலும் பொருமை¸ ஜாக்கிரதை தேவை. நோய் நொடிகளால் தொல்லை¸ வீட்டில் பெரியோர்களை இழப்பது போன்ற வேண்டாத பலன்கள் ஏற்படும். சிலருக்கு தீர்த்த யாத்திரையால் இறைவழிபாடும் அமையும். இறைவழிபாடும்¸ கிரக வழிபாடும்¸ தாங்கள் செய்த தானதருமங்களும்தான் உங்களை காப்பாற்றும்.

மீன ராசி : ராசிநாதன் பொன்னவன் தேவகுரு இலாபம் எனும் 11-ஆம் இடத்தில் சனீஸ்வர பகவானுடன் இணைந்து சஞ்சரிக்க வருகிறார். அவரை சிவப்பு கம்பளம் போட்டு மேளதாளத்துடன் வரவேற்க தயாராகுங்கள். 12-ராசிகளில் உச்ச நற்பலங்களை அடையப்போவது இந்த ராசிகாரர்களே. இறைவனை வணங்கி துணிவுடன் எதை செய்தாலும் வெற்றிமேல் வெற்றிதான். எந்த வாய்ப்பையும் முயற்சி செய்யாமல் விட்டு விடாதீர்கள்.

திருவண்ணாமலை தண்டபாணி ஆசிரமம்

தொகுப்பு:  சித்தர் மகன். சீனிவாசன் 

செயலாளர்- ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை¸ திருவண்ணாமலை.

👉   இந்த குரு பெயர்ச்சி பலனானது அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தசாபுத்தியை பொருத்து மாறுபடும் என்பதை வாசகர்கள் அறியவும்.

 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!