Homeசெய்திகள்கொலையாளிகள் தப்பியோடிய காட்சி வெளியீடு

கொலையாளிகள் தப்பியோடிய காட்சி வெளியீடு

முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வெட்டி படுகொலை

திருவண்ணாமலையில் கொலை செய்யப்பட்ட பங்க் பாபு
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலை 3வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு. பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

திருவண்ணாமலை சன்னதி தெருவில் வசித்து வந்தவர் அதிமுக நகர செயலாளர் கனகராஜ். பங்க் பாபுவிற்கும் கனகராஜிற்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் கனகராஜை பங்க் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து பங்க் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பங்க் பாபு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இன்று காலை 11 மணி அளவில் வழக்கமாக டீ குடிக்கும் காந்தி நகர் பைபாஸ் ரோட்டில் உள்ள டீ கடைக்கு பங்க் பாபு சென்றார். 
சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பங்க் பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் பங்க் பாபு கழுத்து துண்டாகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு மர்ம நபர்கள் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளதா? வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது சம்மந்தமாக சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!