Homeசெய்திகள்வியாபாரி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை

வியாபாரி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை

வியாபாரி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை

திருவண்ணாமலை அருகே கோழி வியாபாரியை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்தவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். 

கோழி  வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அந்தோணியாபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 40)  மீன் மற்றும் கோழி மொத்த வியாபாரி. கோழி பண்ணையும் வைத்திருந்தார். கிறிஸ்துராஜிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்துராஜியின் மனைவி சென்னையில் உள்ள தந்தை வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டதால் வீட்டில் கறிஸ்துராஜ் மட்டும் தனியாக இருந்தார். 

ரத்த வெள்ளத்தில்

இன்று காலை அவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மீன் வாங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தச்சம்பட்டு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வியாபாரி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை

பணம்¸நகை திருட்டு 

இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பரை கைது செய்தனர். நேற்று இரவு பிரவீனும்¸ கிறிஸ்துராஜிம் ஒன்றாக மது அருந்தினார்களாம். அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தனது குடும்பத்தாரை கிறிஸ்துராஜ் அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த பிரவீன்¸ கிறிஸ்துராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்த பணம் ரூ.15ஆயிரத்தையும்¸ 2 மோதிரங்களையும் பிரவீன் திருடிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. 

சீர்திருத்தப்பள்ளி

இதையடுத்து இன்று போலீசார் விரித்த வலையில் பிரவீன் சிக்கினார். அவர் மைனர் என்பதால் கடலூர் சிறுவர்¸ சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். 

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கேற்ப தன்னை விட வயதில் குறைந்தவருடன் கொண்ட சவகாசம் கிறிஸ்துராஜின் உயிரை பறித்துள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!