Homeசெய்திகள்போலீஸ்காரர் மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆசிரியர்

போலீஸ்காரர் மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆசிரியர்

போலீஸ்காரர் மகளை கர்ப்பமாக்கிய ஆசிரியர்
வெங்கடேசன் 

திருவண்ணாமலையில் போலீஸ்காரர் மகளை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் வெங்கடேசன் (வயது 31). எம்.ஏ.பி.எட் படித்துள்ள வெங்கடேசன்¸ திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டில் உள்ள கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 2018ம் ஆண்டு அந்த பள்ளியில் திருவண்ணாமலை அருணகிரிபுரத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் மகள் 9ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை வெங்கடேசன் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அந்த மாணவி மறுத்து விட்டார். 

இதனால் மாணவியை மசிய வைக்க முடிவு செய்த வெங்கடேசன் மதிப்பெண்ணை குறைத்து பெயிலாக்கி விடுவேன் என மிரட்டியதால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்த அவர் ஆசிரியரின் மிரட்டலுக்கு பணிந்தார். வெங்கடேசனின் லீலைகள் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததால் அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

போலீஸ்காரர் மகளை கர்ப்பமாக்கிய ஆசிரியர்
கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளி

இதைத் தொடர்ந்து அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்¸ மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும்¸ நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விரட்டிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால் இதுபற்றி தனது பெற்றோர்களிடம் சொல்லாமல் அந்த மாணவி மறைத்து விட்டார். ஆசிரியருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவர் 6 மாதம் கர்ப்பிணி ஆனார். நாளுக்கு நாள் பெரிதான அவரது வயிறு காட்டிக் கொடுத்து விட்டது. இதையடுத்து நடந்தவற்றை பெற்றோர்களிடம் மாணவி தெரிவித்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வெங்கடேசன் குறித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்தது. 

தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வெங்கடேசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள்¸ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிற நிலையில் திருவண்ணாமலையிலும் மாணவிக்கு நடந்துள்ள கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!