Homeசுகாதாரம்மூளைக்காய்ச்சலை தடுக்க குழந்தைக்கு புதிய தடுப்பூசி

மூளைக்காய்ச்சலை தடுக்க குழந்தைக்கு புதிய தடுப்பூசி

மூளைக்காய்ச்சலை தடுக்க குழந்தைக்கு புதிய தடுப்பூசி

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜுகேட் (Pneumococcal conjugate) எனும் தடுப்பூசி திட்டம் துவக்கம் 

திருவண்ணாமலை மாவட்டதில் 32¸837 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்¸ வேங்கிக்கால் ஊராட்சி¸ துணை சுகாதார நிலையத்தில்¸ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வத் துறை சார்பில் இன்று (23.07.2021) தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில்¸ திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் அஜிதா¸ காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி¸ ரமணன் மற்றும் மருத்துவர்கள்¸ மருத்துவ பணியாளர்கள்¸ பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ்¸ ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிசிஜி (BCG) தடுப்பூசி காசநோயைத் தடுக்கவும்¸ ஹெபிடைடிஸ்-பி (Hepatitis-B) தடுப்பூசி மஞ்சள் காமாலை¸ கல்லீரல் புற்றுநோயிலிருந்து காக்கவும்¸ ஓ.பி.வி (OPV) சொட்டு மருந்து போலியோ நோய் வராமல் காக்கவும்¸ பென்டாவாலன்ட் தடுப்பூசி (Pentavalent) கக்குவான் இருமல்¸ ஜன்னி;¸ எச்.ஐ.பி எனப்படும் இடுப்பு நோய்¸ இன்புளுயன்ஸா தொற்று மற்றும் கல்லீரல் தொற்று உள்ளிட்ட 5 நோய்கள் வராமல் தடுக்கவும்¸ ரோட்டா வைரஸ் தடுப்பூசி வயிற்றுப் போக்கு நோயிலிருந்து தடுக்கவும்¸ மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி (Measles Rubella) அம்மை நோய் வராமல் தடுக்கவும்¸ ஜே.இ (JE) தடுப்பூசி ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் வராமல் காக்கவும் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும்¸ 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.பி.வி சொட்டு மருந்து (OPV)¸ டிபிடி தடுப்பூசி (DPT)¸ ஜே.ஈ. (JE) தடுப்பூசி மற்றும் மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது¸ 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நுரையீரல் அழற்சி எனப்படும் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து தடுக்கும் பொருட்டு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (PCV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி¸ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடந்த 13.07.2021 அன்று சென்னையில் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரால் இன்று (23.07.2021) நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மூளைக்காய்ச்சலை தடுக்க குழந்தைக்கு புதிய தடுப்பூசி

நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியோடு சேர்த்து மேலும் 2 தடுப்பூசிகளும்¸ 2 சொட்டு மருந்துகளும் இன்று குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியானது குழந்தைகளுக்கு 6-வது வாரம்¸ 14-வது வாரம் மற்றும் ஊக்கத் தவணையாக 9-வது மாதங்களில்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை¸ அரசு மருத்துவமனைகள்¸ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்¸ துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (PCV) திட்டத்தின்படி¸ ஆண்டு தோறும் 32¸837 குழந்தைகள் பயனடைய உள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்தி நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் நோயிலிருந்து குழந்தைகளை காக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!