Homeஆன்மீகம்ஆன்மீக பணியாற்றி ஜீவசமாதியான எம்.பி.பி.எஸ் டாக்டர்

ஆன்மீக பணியாற்றி ஜீவசமாதியான எம்.பி.பி.எஸ் டாக்டர்

விழப்புரம் மாவட்டத்தில் ஆன்மீக சேவை செய்து ஜீவசமாதியான எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம்¸திருவெண்ணைநல்லூரில் 10ஆம் வகுப்பு வரை படித்து பண்ருட்டியில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து மருத்துவ ஆராய்ச்சிக்காக லண்டன் சென்று எப்ஆர்சிஎஸ் பட்டம் பெற்றவர் மதிவாணன். மழையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர்களுக்கு பிறந்த 8 குழந்தைகளும் இறந்து விட்டனர். 1934ம் ஆண்டு 9வது மகனாக பிறந்தவர் மதிவாணன்.இந்த குழந்தைக்கும் ஏதாவது ஆகி விடப்போகிறது என்ற அச்ச உணர்வோடு அவரது பெற்றோர்கள் மதிவாணனை பூமி தாய்க்கு அர்ப்பணித்து விட்டனர். 

மதிவாணன், புதுச்சேரி¸ விழுப்புரம் திருவண்ணாமலை பகுதிகளில் மருத்துவ சேவை செய்து வந்தார். படிப்படியாக அவர் ஆன்மீக பணியில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். இதையடுத்து 1987ம் ஆண்டு துறவரம் பூண்டார். திண்டிவனம் அடுத்து கூட்டேரிபட்டில் 15 வருடங்கள் தியானத்தில் ஈடுபட்டு  இறையருள் பெற்றார். அதன்பின் அதன்பின் மதிவாணன் என்ற பெயரை பாலஞான சுவாமிகள் என மாற்றி ஆன்மீக சேவையாற்றி வந்தார். பாலஞான சுவாமிகள் படித்தது எம்.பி.பி.எஸ் என்றாலும் பொதுமக்களின் நோய்களை இயற்கை மருத்துவத்தால் தீர்த்து வைத்தார். மேலும் அங்கேயே ஆசிரமம் அமைத்து  ஏழை மாணவர்களுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து படிக்க வைத்தார்.

See also  ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

இந்நிலையில் மவுன சாது பாலஞான சுவாமிகள் 2003ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். தற்போது அங்கு உலகக் கடவுள் ஆசிரமம் என்ற பெயரில் அவரது மகன் மவுன சத்திய சொரூபன் ஆன்மீக பணியாற்றி வருகிறார். தந்தையின் ஜீவ சமாதி அமைந்த இடத்தில் அவரது சிலையை அமைத்து கோயில் கட்டும் பணியை துவக்கியுள்ளார். இது குறித்து மவுன சத்திய சொரூபன் நம்மிடம் கூறியதாவது¸ 

தந்தை பாலஞான சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடத்தில் சதுர வடிவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இத்திருப்பணிக்கு உதவுபவர்கள் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளலாம். தந்தை பாலஞான சுவாமிகள் மூலிகை¸ கடவுளின் உபதேசங்கள்¸ மகான்களின் தத்துவங்கள் என பல்வேறு புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார். மேலும் எண்ணற்ற உண்மைகளையும்¸ பயனுள்ள நல்ல செய்திகளையும் தமது கையேட்டில் எழுதி வைத்துள்ளார்.

தந்தையின் வழியில் இந்த ஆசிரமத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.  இங்கு மருத்துவர்களால் தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை மருத்துவத்தால் தீர்த்து வைத்திருக்கிறோம். சமீபத்தில் மட்டும் எங்களது வைத்தியத்தால் 50 பேருக்கும் மேல் விஷ காய்ச்சலில் இருந்து குணமடைந்திருக்கின்றனர். 

See also  தி.மலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

மேலும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு¸ கல்வியில் தேர்ச்சியின்மை¸ கடன் பிரச்சனை¸ கோர்ட்டு வழக்குகளில் இழுபறி என பல்வேறு பிரச்சனைகளுக்கு இங்கு தீர்வு காணப்படுகிறது. முக்கியமாக இங்கு வழங்கப்படும் மகா பஸ்பத்தை வாங்கி உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்¸ இந்த மகா பஸ்பம் சக்தி வாய்ந்த 9 முலிகைகளை கொண்டு தயார் செய்யப்பட்டதாகும். 

இந்த மகா பஸ்பத்தை சாம்பிராணியுடன் கலந்து வீடுகளில் புகையிட்டால் கெட்ட சக்திகள் விலகி¸ தெய்வ சக்தி கூடும். நெற்றியில் வைத்துக் கொண்டால் காரியம் கை கூடும். எலுமிச்சை பழத்தில் வைத்து சூடம் ஏற்றினால் திருஷ்டி விலகும். 

இவ்வாறு அவர் கூறினார்.   

தொடர்புக்கு:- மவுன சத்திய சொரூபன்¸ திருப்பணிக்குழு தலைவர். செல்- 9842679674 

உலக கடவுள் ஆசிரமம்¸ சின்னநெற்குணம் கிழக்கு¸ கூட்டேரிபட்டு வழி¸ திண்டிவனம் வட்டம்¸ விழுப்புரம் மாவட்டம். 

ப.பரசுராமன்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!