Homeஅரசு அறிவிப்புகள்10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும்

10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும்

திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும் என கலெக்டர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும் என கலெக்டர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று(15-08-2021) இரவு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசின் வழிகாட்டுகளின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும்¸ கடந்த சில நாட்களில் நோய் தொற்று எண்ணிக்கை மற்றும் சதவீதம் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை மற்றும் சதவீதம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடித்தல் குறித்து 14.08.2021 தேதி அன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எனது(மாவட்ட ஆட்சித்தலைவர்) தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்¸ மாவட்ட வருவாய் அலுவலர்¸ திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம்¸ உணவக உரிமையாளர்கள் சங்கம்¸ பூக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தின் முடிவில் திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் மட்டும் 16.08.2021 முதல் 25.08.2021 வரை 10 நாட்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து கடைகளும் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் மாலை 05.00 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் அரசின் இதர வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமர்ந்து உணவருந்தவும்¸ தேநீர் சாப்பிடவும் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 05.00 மணிக்கு மேல் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். கடை¸ உணவக உரிமையாளர்கள் றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 

ஆய்வின் போது கடை¸ உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அணியாதது கீழ் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடைகள்¸ உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

பொது மக்கள்¸ அனைத்து வியாபாரிகள்¸ மளிகை கடை நடத்துபவர்கள்¸ உணவகம் நடத்துபவர்கள்¸ சிறு விவசாயிகள்¸ சாலை ஓரம் கடை வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வேங்கிக்கால்¸ நொச்சிமலை¸ கரிப்பூர்¸ மதுராம்பட்டு¸ பெருமணம்¸ பழையனூர் சின்னபாலிப்பட்டு என கட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரம் விரிந்துள்ளது. காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் 64 ஊராட்சிகளில் உள்ள 134 கிராமங்கள் அடங்கியுள்ளன.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!