Homeஅரசியல்9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் 15ந் தேதி டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும்¸ காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும்¸ டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் சசிகலாவின் ஒப்புதலின்படி திருமண நிச்சயதார்த்தம்¸ 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமிமலை அருகில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.

2021 ஜனவரி மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி விடுவார்¸ எனவே தை மாதம் திருமணத்தை நடத்துவது என அப்போது முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சசிகலா விடுதலை ஆவதில் ஏற்பட்ட காலதாமதத்தாலும்¸ சட்டமன்ற தேர்தல் நெருங்கியதாலும் திருமணம் தள்ளி போனது. சசிகலா ஜனவரி 27ந் தேதி பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி பிப்ரவரி 9ந் தேதி சென்னை வந்தடைந்தார். 

மகள் திருமணத்தை நடத்துவது குறித்து சசிகலாவிடம் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்ததால்  குழந்தை வரம் கேட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டி.டி.வி. தினகரன் தனது மனைவியோடு வந்து வேண்டிக் கொண்டார். அதன்பிறகு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண் குழந்தைக்கு ஜெயஹரிணி என ஜெயலலிதா பெயர் சூட்டினார். அதன்பிறகு ஜெயஹரிணியின் காது குத்தல் நிகழ்ச்சியும் அண்ணாமலையார் கோயிலில் ஜெயலலிதா தலைமையில்¸ சசிகலா முன்னிலையில் கடந்த 2000ம் ஆண்டு நடந்தது. இதைத் தொடர்ந்து ஜெயஹரிணியின் திருமணத்தையும் அண்ணாமலையார் கோயிலில்தான் நடத்திட வேண்டும் என தினகரனிடம்¸ சசிகலா தெரிவித்து விட்டாராம். 

9 மாதமாக தள்ளி போன டி.டி.வி தினகரன் மகள் திருமணம்

இதையடுத்து ராமநாதன் துளசி அய்யா வாண்டையார்- ஜெயஹரிணியின் திருமணத்தை கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி நடத்த தேதி குறிக்கப்பட்டது. இந்த திருமணத்தை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண முன்னேற்பாடுகளை செய்வதற்காக டி.டி.வி.தினகரனும்¸ அவரது மனைவியும் திருவண்ணாமலக்கு வந்தனர். கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். ஆனால் மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் மறைவு காரணமாகவும்¸ கொரோனா தொற்று அதிகரித்தன் காரணமாகவும் குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்த முடியவில்லை. இதனால் திருமணம் மீண்டும் தள்ளி போனது. 

ஆனாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்தான் திருமணம் நடைபெற வேண்டும் என சசிகலா உறுதியாக சொல்லி விட்டதால் வருகிற செப்டம்பர் மாதம் 15ந் தேதி திருமணத்தை நடத்தலாம் எனவும்¸ மறுநாள் திருமண வரவேற்பை திருவண்ணாமலை- வேலூர் ரோட்டில் உள்ள ஏ.எஸ்.மகாலில் நடத்திக் கொள்வது எனவும் தற்போது முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த மண்டபம் 3 நாட்களுக்கு புக் செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனம் சில நாட்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். திருமணம் நடத்திட அனுமதி கேட்டு கோயில் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். 

நிச்சயதார்த்தம் முடிந்து 9 மாதங்கள் ஆகி விட்டதால் செப்டம்பர் மாதத்திலேயே  திருமணத்தை நடத்தி முடித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த முறையாவது திருமணம் தள்ளி போகாமல் இருக்க வேண்டும் என அண்ணாமலையாரை டி.டி.வி.தரப்பும்¸ அமமுகவினரும் வேண்டி வருகின்றனர். 

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ந் தேதி திருமண விழாவை நடத்திட சசிகலா முடிவு செய்திருப்பதால் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!