Homeசெய்திகள்மருது பாண்டியர்களுக்கு சிலை- புல்லட் சுரேஷ் அறிவிப்பு

மருது பாண்டியர்களுக்கு சிலை- புல்லட் சுரேஷ் அறிவிப்பு

மருது பாண்டியர்களுக்கு சிலை- புல்லட் சுரேஷ் அறிவிப்பு

திருவண்ணாமலையில் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று புல்லட் சுரேஷ் கூறினார். 

சித்தூரில் தனது சொந்த செலவில் சிலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புல்லட் சுரேஷ். சித்தூரில் செட்டில் ஆகி அப்பகுதியில் பல்வேறு தொழில்களை செய்து தொழிலதிபராக திகழந்து வருகிறார். தற்போது ஆந்திர மாநில முதலியார் நல வாரிய தலைவராக உள்ளார். 

திருவண்ணாமலையில் இன்று அகமுடையர்- துளுவ வேளாளர் சமூக அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் பொறியாளர் திரிசூல் நாராயணனின் படத்திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இதற்காக வருகை தந்த அவரையும்¸ புதிய நீதி கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜாராமையும்¸ நாயுடுமங்கலம் கிராமத்திலிருந்து அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும்¸ இளைஞரணியினரும் சிறப்பான வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர். 

திருவண்ணாமலை உண்ணாமலைம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணனின்  திருவுருவ படத்தை திறந்து வைத்து புல்லட் சுரேஷ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பாரதிய ஜனமா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ம.சதீஷ்குமார் வரவேற்றார். ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் வழக்கறிஞர் ப.கி.தனஞ்செயன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் வாரிய தலைவர் புல்லட் சுரேஷ் பேசியதாவது¸ 

அகமுடையர் சமுதாயத்துக்கு கல்வி¸ வேலைவாய்ப்பு¸ சட்ட பாதுகாப்பு மகளிர் மேம்பாடு¸ மருத்துவ உதவி போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்து வந்த நாராயணனுடைய பணி அனைவரும் நினைவு கூர்ந்து போற்றதக்கதாகும். அகமுடையர் சமுதாயத்தின் வரலாற்றை பறைசாற்றக் கூடியது மாமன்னர் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரும் அவர்கள் நினைவுச் சின்னமாக கட்டிய காளையார் கோவிலும் ஆகும். 

ஜம்பு தீவு பிரகடனம் அறிவித்து முதல் இந்திய சுதந்திர போராளியாக இருந்து வெள்ளையர்கள் உடைய சூழ்ச்சியால் தூக்கு கயிற்றை முத்தமிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு திருவண்ணாமலையில் சிலை அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்படும். இதே போல் ஆந்திர மாநிலம் சித்தூரிலும் மருது பாண்டியருக்கு என்னுடைய சொந்த செலவில் சிலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மருது பாண்டியர்களுக்கு சிலை- புல்லட் சுரேஷ் அறிவிப்பு

நிகழ்ச்சியில் மகளிரணியைச் சேர்ந்த சந்திரகலாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரத்தை புல்லட் சுரேஷ் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்டியின் இளைஞரணி மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

திரிசூல் நாராயணனின் நினைவை போற்றுகின்ற வகையில் தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 இடங்களில் பிடிக்கும் அகமுடைய சமுதாய மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் வேலைவாய்ப்புக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறக்கூடிய சுயதொழில் தனியார் வேலை வாய்ப்பு மற்றும் அரசுப் பணிக்காக தேர்வு பயிற்சிகள் அளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று நிகழ்ச்சியில் தலைமை வகித்த வழக்கறிஞர் தனஞ்செயன் பேசினார்.

காஞ்சிபுரம் அகமுடையர் அரணைச் சேர்ந்த கு.செந்தில்நாதன்¸ மகளிரணி மலர்கொடி¸ பரிமளா¸ சந்திரகலா¸ சுமதி¸ சரஸ்வதி பாபு ஆகியோரும் இமயன் பிரதர்ஸ் டாஸ் இளைஞரணி நிர்வாகிகள் வழக்கறிஞர் காசி¸ நயம்பாடி சிவலிங்கம்¸ எஸ்எம்ஜி பிரபு ஆரணி அகமுடையர் சங்கம் அஜீத் கடலாடி¸ வினோத் ஆதமங்கலம்¸ அருண்பார்த்திபன் மருதுசேனை¸ மகேந்திரன்¸ ஓம்சக்தி சிவா¸ நார்த்தாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்¸ ஓரவந்தவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிராஜ்¸ செங்கம் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் சங்கர்¸ சரவணன்¸ பி.கே.சேட்டு¸ தரணிதரன்¸ பரமனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன்¸ அசுவநாதசுரணை ஊராட்சி மன்ற தலைவர் மணி¸ புதிய நீதிக்கடசியின் மாவட்ட தலைவர் டாக்டர் கஜேந்திரன்¸ நல்லவன்பாளையம் பிரகாஷ்¸ பூக்கடை சீனிவாசன்¸ ராஜந்தாங்கல் ராஜபாண்டியன்¸ இளங்கோவன்¸ கணபதி¸ நந்தினி பதிப்பகம் சண்முகம் ஆகியோர் பேசினர்.

சீடு தொண்டு நிறுவன இயக்குநர் ப.கி.ஏழுமலை நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு அகமுடையர் அமைப்புகளின் மாவட்ட மாநில நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் தனஞ்செயன்¸ வேளாண்மைத்துறை அலுவலர்(ஓய்வு) அக்ரி ஆறுமுகம்¸ டிஎம்எஸ் பொறுப்பாளர்¸ செங்கம் ராஜா¸ பிஜேபி சதீஷ்குமார்¸ பத்திரிகையாளர் சாய்செந்தில்¸ ஹை டிஜிட்டல் இமயன்¸ செங்கம் மகாபிரதோஷ அறக்கட்டளை தலைவர் திருமால் ஆகியோர் செய்திருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!