Homeசெய்திகள்டி.டி.வி.தினகரன் மகள் திருமண பத்திரிகை வெளியீடு

டி.டி.வி.தினகரன் மகள் திருமண பத்திரிகை வெளியீடு

டி.டி.வி.தினகரன் மகள் திருமண பத்திரிகை வெளியீடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செப்டம்பர் 16ந் தேதி டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் நடக்கிறது. இதற்கான பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது.  

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்- அனுராதா தம்பதியினர்¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேண்டிக் கொண்டதால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்தது. அந்த பெண் குழந்தைக்கு ஜெயஹரணி என பெயர் சூட்டப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜெயலலிதா தலைமையில் காதுகுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து ஜெயஹரணியின் திருமணத்தையும் அண்ணாமலையார் கோயிலிலேயே நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும்¸ காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும்¸ டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் திருமண நிச்சயதார்த்தம்¸ 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமிமலை அருகில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.

சசிகலா¸ சிறையிலிருந்து ரிலீஸ் ஆவது தள்ளி போனதாலும்¸ மணமகனின் தாத்தா மறைவினாலும் 2 முறை திருமணம் தள்ளி போனது. இதையடுத்து ராமநாதன் – ஜெயஹரிணி திருமணத்தை வருகிற செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. 

இந்நிலையில் இதற்காக அச்சடிக்கப்பட்டுள்ள திருமண பத்திரிகை வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு¸

டி.டி.வி.தினகரன் மகள் திருமண பத்திரிகை வெளியீடு

தஞ்சாவூர் மாவட்டம்¸ பாபநாசம் தாலுக்கா¸ பூண்டி எஸ்டேட் தெய்வத்திரு. கே.துளசி ஐயா வாண்டையார் – நலமுடன் பத்மாவதி அம்மாள் இவர்களின் மகன்வழிப் பேரனும்¸ தஞ்சாவூர் மாவட்டம்¸ ஒரத்தநாடு தாலுக்கா¸ பாப்பாநாடு ஜமீன்தார் தெய்வத்திரு. K.துரைராஜ் விஜயதேவர்- நலமுடன் திருமதி.தாமசம்வர்தனி அம்மாள் இவர்களின் மகன்வழிப் பேத்தியும்¸ பூண்டி¸ உயர்திரு.T கிருஷ்ணசாமி வாண்டையார் – திருமதி. K.ராஜேஸ்வரி அம்மாள் இவர்களின் செல்வக்குமாரன் திருநிறைச்செல்வன் K.ராமநாத துளசி ஐயா வாண்டையார்¸ B.E¸ அவர்களுக்கும்¸ திருவாரூர் மாவட்டம்¸ மன்னார்குடி தாலுக்கா¸ சேரன்குளம்¸ உயர்திரு.T.விவேகானந்தம் முனையரையர்-தெய்வத்திரு வினிதாமணி அம்மாள் இவர்களின் மகன்வழிப் பேத்தியும்¸ திருவாரூர் மாவட்டம்¸ திருத்துறைப்பூண்டி¸ தெய்வத்திருவாளர்கள் T.V.சுந்தரவதனம் சாளுவர் – சந்தானலெட்சுமி அம்மாள் இவர்களின் மகள்வழிப் பேத்தியும்¸ உயர்திரு.T.T.V.தினகரன் – திருமதி அனுராதா தினகரன் இவர்களின் செல்வக்குமாரத்தி திருநிறைச்செல்வி ஜெயஹரிணி தினகரன் அவர்களுக்கும் திருமணம் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் 16-09-2021 வியாழக்கிழமை காலை 8-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடைபெறும் என கல்யாண பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தாலும்¸ திருமணத்திற்கு முதல்நாள் 15-09-2021 புதன்கிழமை மாலை 6-50லிருந்து 7-50க்குள் நிச்சயதார்த்தம் திருவண்ணாமலை போளுர் ரோடு வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15-09-2021 புதன்கிழமை இரவு 7-30 மணியளவில் ஹோட்டல் அர்ப்பணாவில் இருந்து ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை மாப்பிள்ளை அழைப்பும் நடக்கிறது. சசிகலா தலைமையில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!