Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம்

வேலை தேடும் இளைஞர்களுக்கான அறிவிப்பு

திருவண்ணாமலையில் வருகிற 25ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் செய்யாறில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமினால் புதியதாக 843 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம் இணைந்து  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாம் வருகிற 25ந் தேதி நடக்க உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

வேலை தேடும் இளைஞர்களுக்கான அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 25.09.2021 (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும். எனவே¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை¸ ஐ.டி.ஐ.¸ பாலிடெக்னிக்  கல்வித் தகுதியுடையவர்கள்  கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ்  புகைப்படம்¸ குடும்ப அட்டை¸ சாதிச்சான்று¸ கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு  04175 – 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு¸ விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!