Homeசெய்திகள்சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

சாதி பிரிவினையை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய வேண்டும் என போலீசில் பா.ம.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும்¸ பா.ம.கவுக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. அந்த படத்தில் அந்தோணிசாமி என்ற பெயரை¸ குருமூர்த்தி என்றும்¸ வன்னியர் கலசத்தையும் காட்டியதால் வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரணியிலும் நடிகர் சூர்யா¸ ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசில் பா.ம.கவினர் புகார் அளித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு¸ 

ஆரணி நகர காவல் நிலையத்திற்கு இன்று(20-11-2021) 100க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் வேலாயுதம் சார்பில் ஒரு புகாரும்¸ வன்னிய சங்க மாவட்ட தலைவர் குமார் சார்பில் ஒரு புகாரும் ஆக  2 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ்  புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.  

அந்த மனுக்களில் அவர்கள் கூறியிருப்பதாவது¸ 

சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து அமேசான் நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் 1995-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுப்படுத்தும் வகையில்¸ படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இத்திரைப்படம் கருத்து சுதந்திரம் என்று சொல்லி¸ ஒரு சமூகத்தை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக வில்லனாக இருக்ககூடியவர்¸ பெயர் அந்தோணிசாமி என்ற பெயரை¸ குருமூர்த்தி என்றும்¸ அவரை காட்டும்போது வன்னியர் கலசத்தை காட்டி¸ எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர். அதேபோல் நீதிமன்றத்தில் குருமூர்த்தி என்று அழைக்காமல்¸ குரு¸ குரு என்று அழைப்பது நீதிமன்ற சட்டத்திற்கு புறம்பானது. வேண்டுமென்றே மாவீரன் ஜெ. குருவை இழிவுப்படுத்துவதாகவும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை 2டி நிறுவனம் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர்கள் சூரியா¸ ஜோதிகா¸ படத்தின் இயக்குநர் ஆகியோர்கள் மீது சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ளனா. எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்ய வேண்டும். 

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.

சூர்யா¸ ஜோதிகாவை கைது செய்ய போலீசில் பா.ம.க புகார்

புகார் கொடுத்து விட்டு வந்த பாமக மாவட்ட  செயலாளர் வேலாயுதம் செய்தியாளர்களிடம்  கூறியதாவது¸ 

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் கொச்சைபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதற்காக நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் பட இயக்குநர் ஆகியோர் வன்னியர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நடிகர் சூர்யாவின் படத்தை ஓட விடமாட்டோம். வடமாவட்டத்தில் அதிகம் உள்ள வன்னியர் மக்கள் சூர்யாவின் படத்தை புறக்கணிப்பாளர்கள். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆரணி போலீஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ம.க¸ வன்னியர் சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

See also  வாலிபர் படுகொலை-2 பெண்களுக்கு கத்தி குத்து

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!