Homeசெய்திகள்வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்


திருவண்ணாமலை அருகே வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் பெண் ஒருவர் கழுத்தில் தூக்கு மாட்டி தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்அணைக்கரை கிராமத்தில் இருளர் இன மக்கள் வசிப்பதற்காக 1997ம் வருடம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் தமிழ்நீதி என்கிற ராஜாவின் மனைவி வரலட்சுமி(வயது 39)யும் ஒருவர். வரலட்சுமி கூலி வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அரசு கணக்கில் பட்டாவை பதிவு செய்ய வேண்டும் என கூறி அசல் பட்டாவை பெற்றுச் சென்று  முறைகேடாக வேறு நபர்களின் பெயருக்கு பட்டா வாங்கித் தந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வரலட்சுமியும்¸ குடியிருப்புவாசிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். 

வரலட்சுமி குடியிருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என கூறி ராஜா என்பவரது மனைவி அமுதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை அமுதா வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி இடத்திற்கு நேற்று சென்றனர். தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையில் அதிரடிப்படையும் குவிக்கப்பட்டது. 

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் நியூட்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து வீட்டை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். வரலட்சுமியின் மனை எண்-119. ஆனால் மனை எண்-116ல் உள்ள ஆக்கிரமிப்பைத்தான் அகற்றும்படி கோர்ட்டு உத்தரவில் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். ஊராட்சி மன்றத் தலைவரும் இதே கருத்தை வலியுறுத்தினார். 

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்
வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்-தூக்கில் தொங்கிய பெண்

அப்போது தனது வீட்டிற்குள் வரலட்சுமி ஓடிச் சென்று சேலையால் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வரலட்சுமி தரப்பையும்¸ அமுதா தரப்பையும் அழைத்து பேச்சு வார்தை நடத்தி தீர்வு காணலாம் என தாசில்தார் சுரேஷ் தெரிவித்ததை அடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!