Homeசெய்திகள்கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்


பச்சையப்பாஸ் சில்க்ஸ் நடத்திய கோலப் போட்டியில் பிரிட்ஜ்¸ டி.வி¸ வாஷிங் மெஷின் போன்ற பரிசுகளை பெண்கள் தட்டிச் சென்றனர். 

1926ம் ஆண்டு முதல் பட்டு¸ ஜவுளி விற்பனையில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தனது 7வது புதிய கிளையை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் துவக்கியுள்ளது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை பச்சையப்பாஸ் சில்க்ஸ்சில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தும் வகையில் தரமான ஆடைகள் நியாயமான விலையில் கிடைத்து வருவதால் மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது. 

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

இந்நிறுவனத்தின் தலைவர் சுந்தர்கணேஷ்¸ நிர்வாக இயக்குநர் பச்சையப்பன் பிரபு¸ இயக்குநர்கள் எஸ்.வசந்தராஜ்¸ எஸ்.முருகேஷ்¸ பி.ஜெகன்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் மகளிர் தினத்தையொட்டி “கோலம் கோலாகலம்” என்ற பிரம்மாண்டமான கோலப் போட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று காலை நடைபெற்றது. 

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

இந்த கோலப் போட்டியில் கலந்து கொள்ள திருவண்ணாமலை நகரத்திலிருந்தும்¸ சுற்றுப்புற பகுதியிலிருந்தும் அதிகாலை முதலே பெண்கள் கிரிவலப்பாதையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகிலிருந்து திருநேர் அண்ணாமலை கோயில் வரை விதவிதமான கோலங்களை முன்பதிவு செய்திருந்த 580 பெண்கள் வரைந்து தள்ளினர். பெரும்பாலான பெண்கள் வரைந்திருந்த கோலங்களில் சாமி உருவங்கள் மற்றும் பெண்களை போற்றும் வாசகங்கள்¸ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய வாசங்கள் இடம் பெற்றிருந்தன.  

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நடுவர்கள் மூலம் கோலங்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. இதில் முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ்¸ 2வது பரிசாக 4 பேருக்கு எல்.இ.டி. டி.வி¸ 3வது பரிசாக 4 பேருக்கு வாஷிங் மெஷின் ஆகியவை வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 200 பேர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிப்ட் வழங்கப்பட்டது. 

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்
கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

முதல் பரிசான பிரிட்ஜ் பெற்றவர்கள்

1)ஆனந்த லஷ்மி 2)சரண்யா சரவணன் வடமாத்தாதி தெரு. 3)கஸ்தூரி சுப்புராயன்¸ அகிலா ஜவகர்¸ வேட்டவலம் ரோடு¸ திருவண்ணாமலை.

இரண்டாவது பரிசான எல்.இ.டி. டி.வி பெற்றவர்கள்

1)பவித்ரா பெருமாள்¸ அக்னிலிங்கம்¸ 2)ஷிபா கார்த்திகேயன்¸ வடவீதி¸ 3)சங்கீதா¸ வ.ஊ.சி நகர்¸ திருவண்ணாமலை. 4)தீபா புகழேந்தி¸ கிளியாப்பட்டு¸ திருவண்ணாமலை வட்டம்.

மூன்றாவது பரிசான வாஷிங் மெஷின் பெற்றவர்கள்

1)பார்வதி ராஜதுரை¸ வேட்வலம் ரோடு¸ 2)மகாலஷ்மி¸ வேங்கிக்கால் குறிஞ்சி நகர்¸ 3)வரலஷ்மி கோபு¸ வேங்கிக்கால் ஓம்சக்தி நகர்¸ திருவண்ணாமலை. 4) ஆனந்த பைரவி¸ அண்டம்பள்ளம்¸ திருவண்ணாமலை ஒன்றியம். 

கோலப் போட்டியை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி துவக்கி வைத்தார். சிவா எலட்ரானிக்ஸ் உரிமையாளர் விமல்¸ தொழிலதிபர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்
கிரிவலப்பாதையில் கோலம் வரைந்து அசத்திய 580 பெண்கள்

இதற்கான ஏற்பாடுகளை பச்சையப்பாஸ் மேலாளர்கள் கந்தவேல்¸ மணிகண்டன்¸ விற்பனை பிரிவை சேர்ந்த வாசு மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை அம்மு தொகுத்து வழங்கினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!