Homeசெய்திகள்திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு

திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு

திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திறம்பட பணியாற்றி கொள்ளையர்களையும்¸ கொளையாளிகளையும் பிடித்த 25 போலீசாருக்கு சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

திருவண்ணாமலை தென்றல் நகரில் கடந்த 20.10.2021 ஆம் தேதி வீட்டை உடைத்து திருடிய வழக்கில் அப்போதைய கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் தற்போது கடலாடி இன்ஸ்பெக்டர் சு.லட்சுமிபதி தலைமையிலான போலீசார் சிறப்பாக புலன் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான 1)ஜெயக்குமார் (வயது 39) தாங்கல் கிராமம்¸ ராணிப்பேட்டை தாலுகா 2)வேலு¸ (37)¸ கீழையூர் கிராமம்¸ காட்பாடி தாலுகா ஆகியோர்களை கைதுசெய்து திருடு போன 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

கடலாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மாக்கில் வழிப்பறி செய்த வழக்கில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யாநந்தன் தலைமையிலான போலீசார் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட வழக்கில் எதிரிகளான 1)மணிகண்டன் (21)¸ ஆலத்தூர் கிராமம்¸ செங்கம் தாலுக்கா 2)இசக்கி பாண்டி¸ (23) சேரன்குளம்¸ தூத்துக்குடி மாவட்டம் என்பவர்களை கைது செய்தனர்.

ஜமுனாமரத்தூர் தாலுக்கா வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி¸(40) என்பவர் கடந்த 12.07.2018 ஆம் தேதி காணாமல் போனதாக ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஜமுனாமரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சிறப்பாக புலன் விசாரணை செய்து காணாமல் போன திருப்பதியை கொலை செய்த மணி என்கிற ராமசாமி¸(32)¸ பலாக்கானூர் கிராமம்¸ ஜமுனாமரத்தூர் தாலுக்கா என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செங்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 3 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அப்போதைய கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் தற்போது ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சிறப்பாக புலன் விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்ட எதிரிகளான 1)அங்கையா¸(18¸)¸ கௌத்திபுரம்¸ நகரி தாலுக்கா¸ சித்தூர் மாவட்டம். 2)கோவிந்தராஜலு (18)¸ ஓ.ஜி குப்பம்¸ நகரி தாலுக்கா¸ சித்தூர் மாவட்டம் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு
திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு

திருவண்ணாமலை போலீசாரை பாராட்டிய சைலேந்திரபாபு

இவர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மொத்தம் 25 போலீசாருக்கு சான்று வழங்கப்பட்டது. 

அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா¸ திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!