Homeசெய்திகள்திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்


திருவண்ணாமலை அருகே அதி வேகமாக வந்த கார் மோதி 2 வாலிபர்கள் துடிதுடித்து இறந்தனர்.

காரின் முன்பகுதி நொறுங்குகிற அளவிற்கு நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

இறந்தவர்கள் பெயர் :-

1)தினேஷ் (வயது 26) தந்தை பெயர் ராமன். வெளுகனந்தல் கிராமம். 

2)முத்துக்குமரன் (37) தந்தை பெயர் ரேணு. சொரகொளத்தூர் கிராமம். 2 பேரும் விவசாயிகள்.

இன்று காலை இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தங்கள் நிலத்தில் விளைந்திருக்கும் தர்பூசணிக்கு தெளிப்பதற்காக கீழ்பென்னாத்தூரில் உள்ள உரக்கடை ஒன்றில் மருந்து வாங்கிக் கொண்டு திருவண்ணாமலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு பகுதியில் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டாட்டா சபாரி கார் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது¸ இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மோட்டார் சைக்கிளின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட தினேஷ்¸ முத்துக்குமரன் ஆகியோர் படுகாயம் அடைந்து  சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

திருவண்ணாமலை: வாலிபர்களின் உயிரை குடித்த அதிவேகம்

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை அடுத்த கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் உஸ்மானை வலைவீசி தேடி வருகின்றனர்.

பயிருக்கு பூச்சி மருந்து வாங்கச் சென்ற விவசாயிகள் விபத்தில் இறந்தது அவர்களது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!