Homeசெய்திகள்திருவண்ணாமலையில் தீப்பற்றி எரிந்த கார்கள்

திருவண்ணாமலையில் தீப்பற்றி எரிந்த கார்கள்

திருவண்ணாமலையில் தீப்பற்றி எரிந்த கார்கள்

திருவண்ணாமலை கார் செட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அரசு பணிமனை அருகில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான கார் செட் உள்ளது. இங்கு சிலர் சர்வீஸ்க்காக தங்களது கார்களை அனுப்பி இருந்தனர். நேற்று இரவு அங்கு பணிபுரிந்தவர்கள் கார்களை உள்ளே நிறுத்திவிட்டு செட்டை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டனர். 

திருவண்ணாமலையில் தீப்பற்றி எரிந்த கார்கள்

அப்போது திடீரென அந்த ஷெட்டில் தீ பிடித்ததாக சொல்லப்படுகிறது. தீ மளமளவென பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து கார் செட் மீது ஊற்றினர். 
ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மின்சார துறையினர் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.         
திருவண்ணாமலையில் தீப்பற்றி எரிந்த கார்கள்

  

இந்த தீ விபத்தில் 3 கார்கள் தீயில் கருகி சேதமடைந்தது. கார் செட்டில் இருந்த 5 கார்களின் ஆர்.சி.புக்  உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.கார் செட்டில் கேஸ் லீக் ஆனதால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!