Homeசெய்திகள்விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு

விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு

விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு


திருவண்ணாமலை அருகே விவசாயி மீது மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவர் மின்சாரம் தாக்கி பலியானார். தடுக்க முயன்றவரும் மின்சாரம் தாக்கி இறந்தார். 

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு¸

திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமம் பாட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சரண்ராஜ்(வயது 26)¸ அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஏழுமலை(45). 2 பேரும் விவசாயிகள். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதத்தில் சரண்ராஜை கொலை செய்ய ஏழுமலை முடிவு செய்தார். 

விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு

இதையடுத்து நடு இரவு 12 மணிக்கு சரண்ராஜின் நிலத்திற்கு சென்ற ஏழுமலை¸ இரும்பு கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொல்வதற்காக அருகில் முருகேசன் என்பவரது நிலத்தின் மேல் சென்ற மின்சார கம்பியில் கொக்கியில் ஒயரை மாட்டி எடுத்து வந்தார். அந்த ஒயரை வைக்க முயன்ற போது ஏதோ ஒரு பகுதி கண்ணில் பட்டதால் திடுக்கிட்டு எழுந்த சரண்ராஜ்¸ ஏழுமலையை தள்ளி விட்டு கூச்சலிட்டபடியே தப்பி ஓடினார். 

சத்தத்தை கேட்டு அங்கு வந்த பக்கத்து நிலத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின்  வீட்டில் இருந்த ரேணுகோபால் என்பவர் ஓடி வந்து ஏழுமலையின் கையை பிடிக்கவே அவர் மீதும்¸ ஏழுமலை மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். 

விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு

விவசாயியை கொல்ல முயன்றவர் மின்சாரம் பாய்ந்து சாவு

தகவல் கிடைத்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப சரண்ராஜை கொலை செய்ய எடுத்து வந்த மின்சார ஒயரே ஏழுமலையை காவு வாங்கியுள்ளது. மேலும் இந்த தகராறில் எந்தவித சம்பந்தமுமின்றி காப்பாற்ற சென்றவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!