Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

 

2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசிக்கான பலன்கள்- பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர். 

இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்
திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள்.  தொடர்பு எண் – 9942911200

சிவபெருமானின் வாகனமான நந்தியின் உருவத்தைக் கொண்ட ரிஷபராசி நேயர்களே! நீண்ட¸ நெடிய தேகம்¸ சதா கலைகளை பற்றிய சிந்தனை¸ அடுத்தவர்களை ஊக்குவிக்கும் தன்மை¸ சுயநலம்¸ பேச்சு திறமையால் மற்றவர்களை கவரும் தன்மை¸ கொஞ்சம் கௌரவம்¸ அதே சமயம் அடுத்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து கொள்ளும் பிடிவாத குணம் கொண்ட¸ அடுத்தவர்களின் யோசனையை ஏற்காத குணம் கொண்ட ரிஷபராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 1¸7ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் 21.3.2022 முதல் 12¸6 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். 
குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 11-ஆம் இடம் பெயர்ந்து 3¸5¸7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 
சனி பகவான் 9ல் அமர்ந்து 11¸3¸6 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் எவ்வித பலன்களை தரும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.
இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வந்த ¸ ராகுபகவான் விலகிவிட்டார். உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் காலமாகும். உடல்¸ மனம்¸ குணம் தெளிவுபெறும் சூழ்நிலை உண்டாகும். சோர்வு தன்மை நீங்கும். நீங்கள் செய்யும் 
காரியங்களில் இருந்து வந்த பலவிதமான சஞ்சலங்கள் நீங்கி சந்தோசம் பிறக்கும் காலமாகும். 
உங்களது தன ஸ்தானத்திற்கு குருபகவான் அருள்புரிய வந்துள்ளார். தன வரவில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் காணும் நிலை உருவாகும். ஒரு சிலருக்கு இதுவரை கிடைக்காத தனப்ராப்தி உண்டாகும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை ஒருவிதமான மரியாதை உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் ராகு 12ல் அமர்ந்து இருப்பதை மறந்துவிடக் கூடாது. நமக்கு கிடைக்கும் மரியாதையை நமது நல்ல செயல்களினால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 
உங்கள் குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கி  சந்தோச சம்பவங்கள் நிகழும் காலமாகும். குடும்பம் எனும் வண்டி தெளிந்த நீரோடை போல்  செல்லும்.
உங்களது தைரிய ஸ்தானத்திற்கு குருபகவான்¸ சனிபகவான் ஆகிய இருவரின் பார்வை  விழுந்துள்ளது. ஆகவே தைரியம் என்பது உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சிலவேளைகளில் செய்யும் காரியங்களில் ஒருவித சஞ்சலம் இருக்கத்தான் செய்யும். பயப்படத்  தேவையில்லை. 
உங்களது சகோதர பாவமானது நல்ல நிலையில் இருந்தாலும் அவர்களின் மனதிற்கு ஏற்றார்போல் உங்களால் நடந்துகொள்ள முடியாது. நீதி¸ நேர்மை என்பதை விட்டுவிட்டு சமயோஜித புத்தி கொண்டு சகோதர உறவு முறைகளை அரவணைத்துக் கொள்ளவும். உங்களது தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். மனநிலை¸ உடல்நிலை நன்றாக இருக்கும். அவரின் ஆயுள் தீர்க்கம் பெறும். தாய்-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தாயாரால் ஒருசிலருக்கு ஆதாயம் கிடைக்க நேரிடும். 
உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை புதிய மனை¸ வீடு வாங்கவோ அல்லது இருக்கும் இடத்தை சீர் செய்யவோ காலம் உகந்ததாக இருக்கும். ஒரு சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயரும் காலமாகவும் இருக்கும். 
உங்களது வண்டி வாகன ஸ்தானத்தை பொருத்தவரை நன்றாக உள்ளது. புதிய வண்டி அல்லது பெரிய  வாகனங்களில் தற்சம்யம் முதலீடு செய்து கொள்ளலாம். வாகன தொழிலை விரிவுபடுத்திக்  கொள்ளலாம். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவானின் அருள் 
விழுந்ததால் தேவையான அளவிற்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். இருந்தபோதிலும் அடிக்கடி சென்று குலதெய்வத்தை ஆராதித்து வரவும்.
உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை நீண்ட  நாட்களாக குழந்தை இல்லாமல் கடன் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு குருவருளால் இனிதே குழந்தை பிறக்கும். புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்துகொள்ளவும். 
உங்கள் குழந்தைகளின் கல்வி உடல்நிலை சிறப்பாக இருக்க கேதுபகவான் அமர சனிபகவான்  பார்வையிடுகிறார். ஆகவே உங்கள் கடன்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இருந்தபோதிலும் உங்களுக்கு பொருளாதார ஞானம் என்பது சற்று குறைவாகவே இருப்பதால் கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உங்கள் உடம்பில் சூடு¸ சளி¸ மறைவிட உறுப்புகள் சம்பந்தமான நோய்கள் தோன்றும். தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவான் அருளால் தடைபட்ட திருமணங்கள் அனைத்தும் நன்றாக நடக்கும் காலமாகும். திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை மிக விரைவில் செய்துகொண்டால் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் திருமணம் தடங்கலின்றி நடக்கும்.
எதிர்பார்த்தபடி வரன்கள் அமையும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் களையப்படும் காலமாகும். கணவனும் மனைவியும் இணைந்து குடும்பத்தை சீரான பாதையில் சிறப்புடன் நடத்தி செல்வார்கள். 
உங்களது மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை எந்த விதமான தோஷங்களும்¸ தடங்கல்களும்¸ இந்த குருபெயர்ச்சி காலத்தில் இல்லை. உங்களது சத்ரு பாவமானது பலமிழந்து காணப்படுவதால் எதிரிகளை அடக்கி ஒடுக்க இது சரியான காலமாகும். இருந்தபோதிலும் ஒரு சில எதிரிகள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள்¸ சனிப்பெயர்ச்சி வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். 
உங்களது பாக்கிய தானத்தை பொருத்தவரை இந்த இடத்தில்  சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே நீங்கள் உங்களது தந்தையார் சொல்படி கேட்டு நடப்பது  மிகவும் நல்லது. மேலும் தந்தையாரின் சொத்துக்கள் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.  சொத்துக்களின் பேரில் இருந்து வந்த வில்லங்கங்கள் தீரும் காலமாகும். தந்தை-மக்கள் உறவுமுறை 
சீர்பெறும் காலமாகும். 
உங்களது கல்வி ஸ்தானமானது ஓரளவு பரவாயில்லை என்றே சொல்ல  முடியும். இருந்தாலும் சோம்பேறித்தனம்¸ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை உங்கள்  மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். கல்வியில் ஒருமித்த கவனத்துடன் பார்வைகளை  செலுத்தினால் நிச்சயம் கல்வி ஸ்தானம் நன்றாக இருக்கும். 
உங்களது தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மிக நல்ல அமைப்பு தென்படுகிறது. விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு விவசாயம் செழிப்பாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஏற்றம் தரும் காலமாகவும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கலகங்கள் பிறப்பதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளுவுடன் கூடிய ஊதிய உயர்வும் கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே ஓரளவு உங்களது வருமானம் என்பது சேமிப்பிற்கு இடமாக இருக்கும். இருந்தபோதிலும் உங்களது தாராளமான பண கொள்கையை சற்று நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். ஆடம்பரம் மற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் பெயரில் இருக்கும் சேமிப்பை மனைவி மற்றும் தாய்¸ தந்தை பெயரில் மாற்றிவிடுங்கள். சேமிப்பு என்பது நிலையாகவே இருக்கும். 
உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். உங்களுக்கு சனிபகவானும் ராகுபகவானும் தேவையற்ற சஞ்சலத்தை கொடுத்தாலும் கேது¸ குரு ஆகிய கிரகங்கள் ஓரளவிற்கு சாதகமான பலன்களை தரக்கூடிய நேரமாகும். மேலும் கேது 6ல் அமர்வது உடல்நிலையில் சற்று இடைஞ்சல்களை ஏற்படுத்தினாலும் குருபகவான் 11ல் இருக்க பயம் தேவையில்லை. 
எல்லாம் வல்ல உங்கள் ராசி  அதிபதி சுக்கிரனின் அதிதேவதையான மகாலட்சுமியை வழிபட்டு மங்கலம் பெறுவோம்!
2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- ரிஷப ராசிக்கான பலன்கள்

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ திருநாகேஸ்வரம் ஊர்களிலுள்ள ஸ்ரீராகு பகவானை வழிபட்டு வருவதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனீஸ்வரரை பிரார்த்தனை செய்வதும்¸ நூல்களில் துர்கா கவசத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு கருவி தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண் : 5¸6¸8
அதிர்ஷ் கல் : வைரம்
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை¸ வெளிர்நீலம்¸ வெளிர்பச்சை
பரிகார யந்திரங்கள் : ரிஷபராசி யந்திரம்¸ ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம்.
(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும்
வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!