பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் கணித்த மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி  பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_17.html

துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்க...https://www.agnimurasu.com/2021/11/blog-post_22.html

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு. தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 2ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 6¸8¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 5¸11ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம். வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களுக்கு ஜென்மச்சனி காலம் ஆகும். ஜென்மகுரு காலம் முடிந்துவிட்டது. உங்கள் உடம்பில் ஒருவிதமான தெளிவுபெறக் கூடிய சூழ்நிலை உண்டு. ஜென்மச்சனி காலமாக இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் என்பதால் கெடுபலன்களை கொடுக்கமாட்டார். இருந்த போதிலும் சில அசௌகரியங்கள் தென்பட வாய்ப்பு உண்டு. அசதி¸ ஞாபகமறதி¸ உறவினர்களால் மன அமைதி கெடுதல் என சில சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும் பைரவருக்கு ஏற்ற சுபம் உண்டு.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பொருளாதார ரீதியான அமைப்புகள் சற்று உயரும் காலம் ஆகும். வரவேண்டிய தொகைகள் வசூலாகும். கொடுக்க வேண்டியதையும் கொடுத்து பிரச்சினைகளை முடித்து வைப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த உட்பூசல்கள் படிப்படியாக விலகும் காலம் இதுவாகும். குடும்பத்தில் கடந்த காலத்தை விட இக்காலத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்கால சேமிப்பிற்கு இக்காலம் தொட்டே முயற்சி செய்வீர்கள். உங்கள் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அடுத்தவர்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம். நாமும் பிறர் கருத்தை ஏற்க வேண்டாம்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. இது நல்லதல்ல. உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. ஆனால் இரண்டும் இருப்பது போல் வெளியில் காட்டிக் கொள்வீர்கள். தினமும் காலை எழுந்தவுடன் உங்களது இரு உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை கூடும். உள்ளம்¸ உடல் இரண்டும் வலிமை பெறும். உங்கள் சகோதர-சகோதரி பாவம் அவ்வளவு உயர்வாக இல்லை. அவர்கள் பொருட்டு சில விசயங்களில் நீங்கள் கவலை கொள்ள நேரிடும். தேவையில்லாத கவலை. அவர்கள் பாடு அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று விட்டுவிடுங்கள். நல்லதே நடக்கும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் வயிறு¸ இரத்தம்¸ கை¸ கால் சம்பந்தப்பட்ட அமைப்பில் நோய் தாக்கம் உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை மேம்படும் காலமாகும். தாயால் சிலர் ஆதாயம் அடையமுடியும் என்பதால் அவரை அனுசரித்து செல்வது நல்லது. வீடு¸ மனையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு மனை யோகம்¸ வீடு வாங்கும் யோகம் உருவாகும். உங்களது வண்டி வாகனம் ஓரளவு நல்ல லாபம் தரும் சூழ்நிலையில் இருந்தாலும் விரயச் செலவுகள் அதிகமாக தென்படும். கவனம் தேவை.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களது பூர்வ புண்ணிய பலம் குறைந்துள்ளது. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனை அல்லது திருப்பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள். பாவ பலன் குறைந்து புண்ணிய பலம் கூடும். உங்களது புத்திர பாக்யம் ராகுவால் தடைபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை தொடரும். அதன்பின் ராகுப்பெயர்ச்சி ஆகிவிடுவார். புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரம் செய்யவும். நிச்சயம் குருவருள் திருவருள் புரிவார். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மந்தமாக இருந்தாலும் செயல்களில் தீரராக இருப்பார்கள்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக் கொடுக்கும் அல்லவா? அப்படிப் பார்த்தல் கடன் கூடும் போல் தெரிகிறதே? ஆமாம் கூடத்தான் செய்யும். அது நீங்கள் உங்களுக்கு வாங்கியது கிடையாது. அடுத்தவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்ததாகும். கடன் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் வாரம் ஒருமுறை பச்சை காய்கறி உண்ண பழகுங்கள். அல்லது முருங்கைக்கீரை சூப்¸ தினமும் பருகிவர மேற்கண்ட நோய்கள் விலகும்.

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். உங்களுக்கு தற்சமயம் குருபலம் வந்தாலும் சனிபகவானின் பார்வையால் சிற்சில தடங்கல்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. தடைகளை தகர்த்து திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று பரிஹாரம் செய்து வரவும். திருமணங்கள் இனிதே நடைபெறும். திருமணமான தம்பதியருக்கு நடுவில் சில வாய்வார்த்தை பிரச்சினைகள் ஏற்படும். இருவரும் அமைதியாக இருந்துவிடுவது நல்லது. அல்லது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணகோல முருகரை தரிசனம் செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். உங்கள் உடம்பில் சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஜூரம்¸ சளி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலமும் வந்துவிட்டது. உங்களின் சத்ரு ஸ்தானம் பலமாக உள்ளது. மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்படவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக வைக்கவும். பிறர் குறை கூறுவது போல் இருக்கக் கூடாது.

See also  தீப விழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும்- பா.ஜ.க

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானம் மிக நன்றாக இருக்கும். தந்தையின் ஆயுள் தீர்க்கம் உண்டாகும். தந்தையின் உடம்பில் நரம்பு¸ சதை¸ கை¸ கால் மூட்டுவலி போன்றவைகளில் நோய் தாக்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையின் சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். தந்தையை ஒருசிலர் மட்டும் விமர்சித்து தனியாக வாழ்வார்கள். உங்களது கல்வியோகம் குருபகவான் அமைப்பால் சிறந்து விளங்கும். ஒரு சிலருக்கு தடைபட்ட கல்வியை தொடரக்கூடிய மனநிலை ஏற்படும். வேறு சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிப்பை தொடர்வார்கள்.

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுகின்றது. தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் என்பது குறைவாகஇருக்கும். விவசாய தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை மாறுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்டத் துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வுகளும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். கேதுபகவான் லாபத்தில் அமர்ந்தால் மனரீதியான¸ ஞான ரீதியான¸ புத்தி ரீதியான லாபங்களை கொடுப்பார். ஒரு சிலருக்கு தொழில் நன்றாக நடந்து¸ வருமானம் குறைவாக இருந்தாலும் தொழிலில் கண்டிப்பாக மேன்மையை தருவார். கையில் காசை தங்கவிட மாட்டார். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யச் சொல்வார். முதலீடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை செய்தபின் முதலீடு செய்யவும். ஏனெனில் ஜென்மச்சனி காலம் அல்லவா! வரும் காலங்களில் சேமிப்பை ஊக்குவித்து விரயத்தை குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களது இந்த ஸ்தானம் மேடு¸ பள்ளம் நிறைந்ததாக இருக்கும். குரு¸ கேது கிரகங்கள் உங்களுக்கு துணை நிற்கும். என்னதான் ஏழரைச்சனி என்றாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிகளவு விரயபலன்களை செய்யமாட்டார். ஆனால் 5ல் உள்ள ராகு சற்று அளவுக்கதிகமான சோதனைகளை கண்டிப்பாக கொடுத்தே தீருவார். எல்லாக் காலங்களும் நமக்கு சாதகமாக இருப்பது இல்லை. அதே சமயம் நாம் நமது குடும்பம்¸ நாம் செல்லும் பாதை போன்றவற்றின் அடிப்படையிலே நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் இராசி அதிபதி சனிபகவான் இஷ்டதெய்வம் அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் அரணாக இருப்போம்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு பரிஹாரம் செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ முதியோர்களுக்கு உணவு தானியம் வழங்குவதும் நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

கோபுரத்திற்கு மதிப்பே அதன்மேல் உள்ள கும்பங்களே! அத்தகைய கும்பத்தை அடையாளமாக கொண்ட கும்பராசி நேயர்களே! நடுத்தரமான வட்ட வடிவமான முக அமைப்பு¸ பருத்த உருவம்¸ வசீகரம்¸ தர்ம சிந்தனை¸ வெற்றி தோல்விகளை சமமாக கருதும் தன்மை¸ எடுத்த காரியத்தில் சாதிக்கும் திறமை¸ பிறருக்கு உதவி செய்வதில் சுயநல பாங்கு¸ பல யுக்திகளை கையாண்டு வெற்றி அடைய கூடிய கும்பராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் உங்கள் ராசியில் அமர்ந்து¸ அங்கிருந்து அவர் 5¸7¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 12ல் அமர்ந்து 2¸6¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 4¸10ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஜென்ம குருவாக வலம் வர உள்ளார். ஆக உங்களது உடல் அமைப்பானது சற்று பின் தங்கும் சூழ்நிலை உண்டு. ஏற்கனவே ஏழரைச்சனியில் விரயச்சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அதிக உளைச்சல்களால் அவதிப்பட நேரிடும். இதனால் நாம் பார்க்கும் வேலை அல்லது செய்தொழிலில் ஒருவித தயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மன அழுத்தம் தான் காரணம். எல்லோருக்கும் புத்திகூறும் நீங்கள் இந்த காலத்தில் அடிசறுக்குவது உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமே.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே தனவரவில் தடை ஏற்படும் காலமாகும். நாம் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைப்பார். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் ஒரு காசு மிச்சம் பிடிப்பது என்பது சிரமமானதாக இருக்கும். இதனால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் தோன்றும். மனைவி உங்களுக்கு அடங்கியவர் என்றால் உங்களை ஏளனமாக பார்ப்பார். மிஞ்சியவர் என்றால் கண்களை உருட்டி பார்ப்பார். எச்சரிக்கை தேவை. உங்கள் வாக்கு ஸ்தானம் பலவீனமாக உள்ளதால் தேவையின்றி பேசுவதை தவிர்க்கவும். பேசினால் பிரச்சினை ஏற்படும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு வலுப்பெற்று உள்ளது. இயற்கையிலேயே உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தை உங்களது மன தைரியத்தால் தான் ஓட்ட முடியும். மேலும் உங்களுக்கு குருபகவானின் 5¸7¸9 பார்வை பலம் அருமையான பலன்களைத் தரும். உங்களின் சகோதர சகோதரி ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதேசமயம் உங்களை ஒருவழி உண்டு பண்ணாமல் விடமாட்டார்கள். அவரவர்கள் அவர்கள் இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு பொதுப் பிரச்சினைக்கு மட்டும் உங்களை நாடுவார். மிக கவனமுடன் செயல்படவும். அதே சமயம் அவர்களை பகைக்கவும் வேண்டாம்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இந்த இடம் சுகஸ்தானம் ஆகும். சுகத்தில் ஒரு அலைக்கழிப்பு நிச்சயம் உண்டு. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் அவரின் மன இயல்புக்கு ஏற்ப உங்களால் நடக்க முடியாது. தாய்-மக்கள் உறவுமுறை அவ்வளவு சரியில்லாத நிலை தென்படுகிறது. அனுசரித்து செல்லவும். உங்களது வீடு¸ மனை சம்பந்தப்பட்ட அமைப்பானது இருப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு வீடுமாற்றம்¸ இடமாற்றம் ஏற்படலாம். வண்டி-வாகனயோகம் தற்சமயம் உங்களுக்கு இல்லை. சற்றுகாலம் பொறுக்கவும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. மிக நல்ல அமைப்பு ஆகும். ஜென்ம குரு¸ ஏழரைச்சனி காலத்தில் இந்த மாதிரியான குருவின் 5ம்பார்வை விழுவது உங்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றும். உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிசேக ஆராதனை செய்து வரவும். புண்ணியம் கூடும்.உங்களது புத்திரபாக்ய ஸ்தானம் நன்றாக உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்யம் நிச்சயம் கிட்டும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மிக அருமையாக உள்ளது.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே ஒருபுறம் கடன்களுக்கான தீர்வு வழி கிடைக்கும். மறுபுறம் உடல்நலம் கெடும். உங்கள் கடன் ஸ்தானமானது சிக்கல்கள் இன்றி பைசல் செய்யப்படும். நீங்கள் கொடுத்த கடனும் தாமதமின்றி வரப்பெறும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல்நிலையில் நீரால்¸ மனதால்¸ பயத்தால் சில நோய்கள் வந்தே தீரும்¸ நீரால் வருவதை மருத்துவரிடம் சென்று தீர்க்க முடியும். மற்றவைகளை நாம் நமது தன்னம்பிக்கை கொண்டே  தீர்க்க முடியும். தினமும் காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை பிறக்கும்.

See also  தனது நிலத்திற்கு சென்றார் அண்ணாமலையார்

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே உங்களுக்கு குருபலம் இல்லையென்றாலும் குருபார்வை பலத்தால் சில திருமணங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. இருந்த போதிலும் ஜெனன ஜாதகத்தில் சரியான திசா புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கே இது பொருந்தும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையில் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் களைவதற்கான நேரம் இதுவாகும். எவ்வித செயல்களிலும் கடைசியில் விட்டுக்கொடுத்து போகும் நீங்கள் இதிலும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள திருமணக்கோல ஸ்ரீநாராயணபெருமாளை தரிசிக்க நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் உங்கள் ராசிநாதன் அமைப்பால் சரியாக உள்ளது. உங்கள் ஆயுள்பாவம் சனியருளால் தீர்க்கம் பெறுகிறது. உடல் நிலையில் அவ்வப்போது சில இடர்பாடுகள் காணப்பட்டாலும் அவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மன அழுத்தமே உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் குருவருளால் தீர்க்கமாக உள்ளது. கணவன்-மனைவி இடையே சில விரிசல்கள் இருந்தாலும் அவற்றை பேசி சரிசெய்து விடுவீர்கள். உங்கள் சத்ரு ஸ்தானம் உங்களது எதிரிகளால் ஏற்படுவது இல்லை. நீங்கள் நம்பிக்கை வைக்கும் சிலரால் ஏற்படும் விரோதமானது உங்களை மலைக்க வைக்கும்.

தந்தை¸ கல்விஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. இந்த ஸ்தானத்திற்கு ஏற்ற¸ இறக்கமான பலன்களே நடைபெறும். உங்கள் தந்தையின் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருந்தாலும் வயதானவர்கள் இருந்தால் சற்று கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உண்டு. தந்தைக்கும் உங்களுக்கும் போதிய மன ஒற்றுமை இருக்காது. இதனால் இருவருக்கும் இடையில் சில உரசல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்களது கல்வி ஸ்தானம் குருபார்வையால் புனிதம் பெறும். விடுபட்ட கல்வியை தொடர வாய்ப்புக்கள் உண்டு. உங்களின் உயர்கல்வி அமைப்பானது விருப்பமான பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப அமையும் என்பதில் ஐயமில்லை.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகையால் இந்த ஸ்தானத்திற்கு சற்று தடைகள் உருவாகும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தடங்கல்களான அமைப்பும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானம் சஞ்சலம் உள்ளதாக இருக்கும். குருவின் பார்வையால் வருமானம் சரிவர இருந்தாலும் விரயங்கள் தொடர்ந்து வந்து கொண்டே வரும். எதை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் எதையும் விட்டு வைக்க முடியாது அல்லவா? சந்தித்துதான் ஆகவேண்டும். சாதிக்க வேண்டுமென்றால் உங்கள் மனது ஒருநிலைப்பட வேண்டும். உங்கள் மனது ஒருநிலைப்பட உங்கள் சுற்றமும் நட்பும் விடாது. பின் என்ன செய்ய? நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று முதலில் நம்புங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானம் இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கும். எந்த ஒரு பெரிய கிரகங்களும் சாதகமான சூழ்நிலையில் இல்லை. இருந்தாலும் குரு பார்வை ஒன்றே இத்தருணத்தில் உங்களை காப்பாற்றும். எந்த சமயத்திலும் நீங்கள் கலங்க வேண்டாம். உங்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பம் ஆகாது. ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏதாவது ஒரு இன்னல் வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். இதனைத் தவிர்க்க முயல வேண்டும். உங்கள் ராசி அதிபதி சனிபகவான் இஷ்டதேவதை விநாயகர் இவர்களை வழிபட்டு வர விக்னங்கள் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குருபகவானை தரிசனம் செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு-கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ பொன்னிறம்¸ மஞ்சள். அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல் பரிகார யந்திரங்கள் : கும்ப ராசி யந்திரம். ஸ்ரீஅனுமன் யந்திரம். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் வசிக்கும் சமுத்திர ராஜனின் அடையாளமான மீனின் அடையாளம் கொண்ட மீன ராசி நேயர்களே! நீண்டு நெடிய தேகம் கொண்ட நீதி¸ நேர்மை தவறாத¸ சாஸ்திர சம்பிரதாயங்களில் விருப்பம் கொண்ட¸ மதப்பற்று அதிகம் உள்ள¸ உழைப்பை நம்பிய¸ பெண்ணாசை கொண்ட உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்ட¸ தியாக மனப்பான்மை கொண்ட மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 12ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து – அவர் 4¸6¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 11ல் அமர்ந்து 1¸5¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 3¸9ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. ஆகவே உடம்பு விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த அமைப்பானது குறைந்த காலத்திற்குத்தான். அதன்பின் சரியாகிவிடும். உள்ளுக்குள் ஒருவிதமான மனபயம் இருந்துகொண்டே இருக்கும். எடுக்கும் காரியங்களில் பதற்றம் ஏற்படும். இது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கி¸ நீங்களும்¸ உங்கள் குடும்பத்தையும் அல்லாட வைப்பீர்கள். உங்களிடம் உள்ள சுய தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்தால் அனைத்தும் சுபமாகவே நடக்கும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் 11ல் இருக்கும்வரை தனவரவில் தடை ஏதும் ஏற்படாது. ஏதாவது ஒருவகையில் பொருளாதாரம் சீர்  செய்யப்படும். ஆனால் குருபகவான் விரயஸ்தானத்தில் அமர்வதால் சற்று சுபவிரயங்களுக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் சுபீட்சமான சூழ்நிலை தென்படும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் அனைவரின் உள்ளங்களில் ஒருவிதமான மிரட்சி தென்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்துடன் “சிவகுடும்பம்” தரிசனம் செய்து வரவும். உங்கள் வாக்குஸ்தானம் பலமிழந்து உள்ளது. எதைப் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். கவனம் தேவை.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஏதோ ஒரு குருட்டு தைரியம் உங்களை வழிநடத்திக் கொண்டுள்ளது. சுய தைரியத்திற்கு நீங்கள் முயல வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அடுத்தவர்களின் சொற்களை நம்பி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் சகோதர சகோதரி ஸ்தானம் மிக பலமாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயல்வார்கள். ஆனால் இடையில் பேச்சால் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது. அவர்களால் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

See also  யாக குண்ட அக்னியில் அம்மன் உருவம்-பக்தர்கள் பரவசம்

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். ஆனால் உடல்நிலையில்¸ நரம்பு¸ இடுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் ஏதாவது நோய்கள் ஏற்படும் காலமாகும். உங்கள் வீடு¸ மனை அமைப்பில் பெரிய நன்மைகள் ஏற்படும் காலமாகும். குருவால் விரயச் செலவுகள் உண்டு என்றாலும் அதை வீடு வாங்குவதற்கான சுபவிரயச் செலவாக மாற்ற வேண்டும் அல்லது தொழிலில் மூலதனமாக போட வேண்டும். உங்களது வண்டி வாகன ஸ்தானம் ஓரளவுதான் சுபபலம் ஏற்படும். விரயச் செலவுகள் ஏற்படும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. இது நல்லதல்ல. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது ஏதாவது திருப்பணி வேலைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் புண்ணிய பலம் கூடி பாவபலன்கள் குறைவாகும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சுமாரான காலம் ஆகும். குழந்தை இல்லாதவர்கள் ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால் தக்க பரிஹாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக்கொடுக்கும் அல்லவா! ஆகவே உங்களுக்கு கடன் ஸ்தானமும்¸ உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வலுப்பெறும் காலமாகும். ஆகவே கடன் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஒருமுறைக்கு இருமுறை யோசித்தபின் எந்த ஒரு செயலையும் செய்யவும். உங்கள் உடல்நிலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். சூடு சம்பந்தமாக தோல் நோய்களும்¸ இரத்தம்¸ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை தக்க நேரத்தில் எடுக்கவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவற்றதாக உள்ளது. உங்களுக்கு போதிய குருபலம் கிடையாது. மேலும் உங்களுக்கு சுப விரய குருபலம் வந்துள்ளதால் சிலருக்கு திருமணம் நடைபெறும் சூழ்நிலை உண்டு. ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொண்டால் திருமண வேலைகளை வரும் சித்திரை முதல் பார்த்துக் கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் சில பிரச்சினைகள் குடும்ப ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. உற்றார்¸ உறவினர்¸ நண்பர்கள் போன்றவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநாராயணனை நம்புங்கள்¸ நல்லதே நடக்கும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இரண்டும் கெட்டான் சூழ்நிலை இந்த ஸ்தானத்திற்கு விழுந்துள்ளது. குரு பார்வையால் உங்களது ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். உடலில் சிற்சில நோய்களின் தாக்கம் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் கணவனோ¸ மனைவியோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் சத்ரு பாவமானது உயர்ந்து பின் தாழும். உங்களுக்கு ஏற்படும் அனுபவம் மூலம் யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்பதை உணருவீர்கள்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டிய திருக்கும். ஆயுள் பாவம் பரவாயில்லை. தந்தை-மக்கள் உறவுமுறை சீராக அமையாது. உங்களது கருத்துக்களையும்¸ செய்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே சமயம் அவர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தங்களுக்கு வரும் பங்கினை உறுதி செய்வார். உங்களது கல்வியோகம் சுமாராக உள்ளது. தடைபட்ட கல்வியை தொடர்வதற்கு சற்று அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். உயர்கல்வி யோகம் ஒரு சிலருக்கு மட்டுமே உருவாகும். மற்றவர்கள் ஏதாவது தொழிலை செய்து கொண்டே கல்வியறிவு பெறுவர்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானமானது ராகுவின் அமைப்பால் மட்டுமே சிறப்பு பெறும். விவசாயத் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மந்தம் நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு புதிய மூலதன முதலீடுகளும்¸ கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு தனியார் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பிட மாற்றமும்¸ வேலையில்லாதவர்களுக்கு சிரமமான வேலைகளும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் லாபஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். மிக நல்ல அமைப்பு ஆகும். வருமானத்திற்கு ஏதும் பஞ்சம் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத இனங்களால் நமக்கு தேவையான நேரத்திற்கு பொருளாதாரம் புரட்ட முடியும். உங்களின் இருக்கும் ஒரே பலவீனம் என்னவெனில் கைதூக்கி விட்டவர்களை நீங்கள் நம்ப மறுப்பதுதான். கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதை எப்படி? இப்போது எப்படி இருக்கிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் குணம் என்றுமே மாறாது. நிறை குடம் தளும்பாது.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். அவர் உங்கள் ராசி அதிபதி ஆவார். ஆகவே உங்களுக்கு அசுப விரய பலன்களை நிச்சயம் கொடுக்க மாட்டார். சுப விரயங்கள் நிச்சயம் உண்டு. இக்காலத்தில் நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு சமயோஜிதமாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாத கற்பனைகளை செய்யக்கூடாது. அவரவர் விதிகளை ஆண்டவன் நிர்ணயிப்பார். இந்த உலகமும்¸ காலமும் நிலையானது அல்ல. உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெற்றே ஆகும். உங்கள் ராசி அதிபதி குரு அதிதேவதை தட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் எல்லாம் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ முதியோர்களுக்கு அன்னதானம்¸ கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும்¸ நூல்களில் துர்க்கா அஷ்டகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸2¸9. பரிகார யந்திரங்கள் : மீன ராசி யந்திரம்¸ ஸ்ரீகுருபகவான் யந்திரம். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸ பொன்னிறம்¸ இளம்சிவப்பு¸ வயலட். அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் கனகபுஷ்பராகம்

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்.

Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

 

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ 

கடக ராசிக்கான பலன்கள் – 

பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர். 
இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்


மிதுன ராசிக்கான பலன்கள்- பரிகாரங்கள் வருமாறு:-

👉 மிதுன ராசியினர் குருவருள் திருவருள் புரிய வியாழ பகவானை வழிபடுவது அவசியம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கேற்ப புதனை ராசியதிபதியாக கொண்ட மிதுன ராசி நேயர்களே! பேச்சு சாமர்த்தியம்¸ ஆண்¸ பெண் கலந்த முகம் கொண்டவரும்¸ மனதில் வலிமை கொண்டு செயலில் பலவீனம் கொண்டவரும்¸ கல்வியில் தேர்ச்சியும்¸ அனுபவ பாடங்கள்  கற்ற வரும்¸ சுற்றத்தார்களுக்காக தன் நிலையை மாற்றிக் கொள்பவரும்¸ சுயநலம் கொண்டவரும்¸ இரண்டுபட்ட மனதுடைய மிதுனராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12¸6ல் சஞ்சரித்து வந்த ஸ்ரீராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 11¸5 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான்  வரும் 13-14.4.2022 முதல் 10ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 2¸4¸6 ஆகிய இடங்களை பார்வை யிடுகிறார். சனி பகவான் 8ல் அமர்ந்து 12¸2¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை குருபகவான் 10ல் அமர்வது அவ்வளவு சிறப்பு பெறாது. உங்கள் ராசிக்கு ராகுபகவான் ஒருவரே சிறப்பான சூழ்நிலையில் உள்ளார். மற்ற கிரகங்கள் எவரும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. ஆகவே உடல்- நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பலவீனம்¸ தடுமாற்றம்¸ தடங்கல்கள் நிச்சயம் நிகழும். இது தற்காலிகமானதே தவிர பயப்படத் தேவையில்லை. 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு மற்றும் சனி ஆகியோரின் பார்வை சேர்ந்து  விழுகின்றது. ஆகவே உங்கள் பொருளாதார சூழ்நிலையானது அந்தரத்தில் ஆடும் காலமாகும். நீங்கள் அஷ்டம சனி காலத்தில் உள்ளதால் தனவரவில் நிறைவு பெற இயலாது. உங்களது வாக்கு  ஸ்தானம் பலவீனப்பட்டுள்ளது. எதற்காகவும்¸ எந்த சமயத்திலும் பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். தவளை தன் வாயால் கெடும் என்பதை நினைவில் கொள்ளவும். 

உங்களது குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை குடும்பம் சற்று சஞ்சலங்களை சந்தித்தாலும் குரு பார்வை என்பது சஞ்சலங்களிலிருந்து நிச்சயம் மீள உதவும். ஆகவே குருவருள் திருவருள் புரிய வியாழ பகவானை வேண்டிக் கொள்வோம். உங்களது தைரியமானது உடலளவில் இல்லா விட்டாலும்¸ மனதளவில் வைரம் பாய்ந்த நெஞ்சுறுதி¸ மனோதிடம் நிச்சயம் இருக்கும். அதை வைத்து இந்த குருப்பெயர்ச்சி காலத்தை கடந்துவிட முடியும். உங்களது சகோதர பாவமானது பலமிழந்து  இருப்பதால் அவர்கள் வழியில் ஏதாவது பிரச்சனைகளோ அல்லது விரயச் செலவுகளோ வரும் காலமாகும். மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களை எதிர்க்காமல் அரவணைத்துச் செல்வது மிகவும் நல்லது.

உங்கள் தாய் ஸ்தானமானது குருவின் அருளால் பலம் பொருந்தியதாக இருக்கும். தாயின் ஆயுளுக்கு தீர்க்கம் உண்டு. தாயின் உடல்நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிணி பீடைகள் வந்து  வந்து செல்லும். தாய்-மக்கள் உறவு சீராக இருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை  இப்போது இருப்பதை அப்படியே தொடர்வது நல்லது. ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் இடம் விட்டு  இடம் பெயர்ந்து செல்வதற்கு வாய்ப்பு உண்டு. வீடு கட்டக்கூடிய அமைப்பு இன்னும் ஒரு வருட காலத்திற்கு கிடையாது. உங்கள் வண்டி வாகன ஸ்தானம் சுமாராக இருப்பதால் பழுது செலவுகளும் விரக்தியான சூழ்நிலையும் தென்படும். இன்னும் ஒரு வருட காலம் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின் சரியாகும்.

See also  2668 அடி உயர மலை உச்சிக்கு சென்ற கொப்பரை

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். உங்களது குலதெய்வ வழிபாட்டை விருத்தி செய்வதன் மூலமாக பாவ பலத்தை குறைத்து புண்ணிய பலத்தை அதிகமாக்கிக் கொள்ள முடியும். 

உங்களது புத்திர ஸ்தானமானது வலுவிழந்த  சூழ்நிலையில் உள்ளதால் புத்திரப்பேறு இல்லாதவர்கள் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.  ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள்  குழந்தைகளின் உடல்¸ கல்விநிலை சுமாராகவே உள்ளது. உங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.

 உங்களது கடன் ஸ்தானத்திற்கு குருபார்வை விழுந்துள்ளது. குரு பார்வை  என்பது கூட்டிக் கொடுக்கும் என்பதால் கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் நிலையான அமைப்பு தென்படுவதற்கு அஷ்டமத்து சனி முடியவேண்டும். உங்களது உடல்நிலையில் தோல்¸ ரத்தம் மற்றும் சதை சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதால் தகுந்த  மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்களது தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவான் அமர்ந்துள்ளார். “ஈசனொரு பத்திலே தலையோட்டிலே இரந்து ண்டதும்” என்ற கவி நிச்சயம் உங்களுக்கும் பொருந்தும். விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்த நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் ஏற்படுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் ஏற்படுதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளுவுடன் கூடிய ஊதிய உயர்வும் கிடைக்கும். 

உங்களது லாப ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் உங்கள் தேவைக்கேற்ப பணவரவு என்பது ஏதாவது ஒரு  விதத்தில் வந்துகொண்டே இருக்கும். அதற்காக அடுத்தவர்கள் பணத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்  தேவைகளுக்கு எடுக்க வேண்டாம். இது மிகவும் எச்சரிக்கையான காலமாகும்.

உங்களது அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை ராகுபகவானை தவிர மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாமல் இருக்கிறது. இருப்பினும் குருபார்வை உங்களது தன¸ குடும்ப ஸ்தானத்திற்கும்¸ சுக ஸ்தானத்திற்கும் விழுவதால் ஓரளவு இந்த குருப்பெயர்ச்சியில் நிலைமையை சீர்செய்துகொள்ள முடியும். கடந்த ஐந்து வருட காலமாக நீங்கள் தவிக்கும் தவிப்பு எங்களுக்கு புரிகிறது. சிறிது காலம் பொறுத்திருங்கள்¸ காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி புதனின் அதிதேவதையான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி வந்தால் நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை தற்போது தற்சமயம் குருபலம் இல்லை. ஆதலால் திருமண நிகழ்வுகள் என்பது தள்ளிப்போகும் காலமாகும். ஜாதகத்தில் ஏதாவது திருமண தோஷம் இருப்பின் தக்க பரிகாரங்களை செய்து தயாராக இருக்கவும். அடுத்த குருப்பெயர்ச்சியில் திருமணம் நிச்சயம் நடைபெறும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். இந்த அஷ்டமத்து சனி காலத்தில் இவ்வளவு காலம் வாழ்க்கையை  நடத்தி வந்ததே பெரிய விஷயம்தான். சற்று பொறுத்திருக்கவும். காலம் கனியட்டும். உங்களது  மாங்கல்ய ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பதால் கணவனோ¸ மனைவியோ யாராவது ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். வாய்ப்பேச்சில் எச்சரிக்கை தேவை. மற்றபடி மாங்கல்யத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. உங்கள் சத்ரு பாவம் பலவீனப்பட்டுள்ளதால் ஒரு வருட காலம் பதுங்கிதான் ஆகவேண்டும். பாய்வதற்கு சற்று காலம் தேவைப்படும். 

உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை தகப்பனாரின் ஆயுள் நன்றாக இருக்கும். தந்தை  மக்களிடையே ஒருமித்த கருத்து நிலவாது. இருவருக்கும் இடையில் சற்று கசப்புணர்வுகள் இருக்கத்தான் செய்யும். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் தீர அனுமன்  வழிபாடு செய்யவும். 

உங்களது கல்வி ஸ்தானம் சுமாராக உள்ளது. மிகுந்த கவனம் தேவை.  அனுதினமும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதி தேவி காயத்ரியை பாராயணம் செய்துவர படிப்பு நன்றாக இருக்கும்.

பரிகாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும்¸திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பம் ஊர்களிலுள்ள சனிபகவானுக்கு தல தீபம் ஏற்றுவதும்¸திருப்பாம்புரம்¸ கீழப்பெரும்பள்ளம்¸ காளகஸ்தி தலங்களில் உள்ள கேது பகவானை வழிபட்டுவருவதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் அளிப்பதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

See also  அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் மாணவன்

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6. 

அதிர்ஷ்ட ராசிக்கல் : மரகத பச்சை¸ வைரம் 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை¸ வெளிர்நீல நிறம்¸ வெளிர்நிறங்கள். 

பரிகார யந்திரங்கள் : மிதுனராசி யந்திரம்¸ ஸ்ரீவெங்கடாஜலபதி  யந்திரம். 

———————————————————-


கடக  ராசிக்கான பலன்கள்- பரிகாரங்கள் வருமாறு:-

👉 சனி¸ ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குருபகவான் உதவுவார். 

பௌர்ணமி சந்திரனின் பூரண அருள் பெற்ற கடகராசி நேயர்களே! கமுக்கமாக இருந்து காரியங்களை சாதிக்கும் திறனுடையவர்கள். பிறர் கருத்துக்களை ஏற்காமல் ஞானிபோல் அலைபவர்கள். உடலில் கவர்ச்சிக்கு முதலிடம் தருபவர்கள். எடுக்கும் முடிவுகளை அடிக்கடி மாற்றம் செய்பவர்கள். வீட்டில் உள்ளவர்களை விட அந்நியரிடத்தில் அதிகம் பாசம் வைக்கும் கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11¸5ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 10¸4 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13- 14.4.2022 முதல் 9ம் இடம் பெயர்ந்து 1¸3¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 7ல் அமர்ந்து 7ல் 9¸1¸4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசியில் சனி மற்றும் குரு ஆகிய இருவரின் பார்வை பலம் கிடைத்துள்ளது. உங்கள் ராசி அதிபதி சந்திரனைப் போல் உங்கள் உடல்நிலையும் வளர்பிறை 15நாள்¸ தேய்பிறை 15நாள் என்று சீரற்ற நிலையில் இருக்கும். மனம் ஒரு நிலைப்படாது. சஞ்சலங்களும் சந்தேகங்களும் மனதில் குடிகொள்ளும். 

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை குருவின் அருளால் ஓரளவிற்கு சாதகமான சூழ்நிலை தென்படுகிறது. “ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு” என்பது போல நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பொருளாதார ரீதியாக ஒரு வளர்ச்சியை காண முடியும். உங்களது வாக்கு ஸ்தானத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் எதுவும் பேச வேண்டாம். 

உங்களது குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை சங்கடங்களில் இருந்து ஓரளவு மீண்டு வர இந்த குருப்பெயர்ச்சி காலம் உதவும். வரும் காலங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும். 

உங்களது தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை விழுவதால் உங்களது உடம்பில்¸ மனதில் தைரியம் என்பது கூடும் காலமாகும். உங்களது சகோதர ஸ்தானமானது வலுவான நிலையில் உள்ளதால் சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு நற்பயன்கள் நிச்சயம் உருவாகும். அவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர்ந்து சனிபகவான் பார்வையிடுகிறார். உங்கள் தாயின் உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வயதானவர்கள் இருப்பின் தகுந்த பராமரிப்பு தேவை. தாய்-மக்கள் உறவுமுறையில் சற்று விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு தாய் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும் காலமாகும். 

உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நல்லது. புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு ஏற்ற காலம் இல்லை. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் காலமாகும். 

உங்களது வண்டி வாகன ஸ்தானமானது சுமாராகவே உள்ளது. வாகனத் தொழிலில் நாம் எதிர்பார்க்கும் லாபத்தை இந்த சூழ்நிலையில் நிறைவாக எதிர்பார்க்க இயலாது. 

உங்களது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் பார்வை விழுவதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய பலத்தை  கூட்டிக்கொள்ளவும். நடப்பு கண்டக சனி காலத்திலும் வரும் அஷ்டமத்து சனி காலத்திலும் நாம் செய்யும் புண்ணியங்களே நம்மை காப்பாற்றும். 

உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை குருவின் அருட்பார்வையால் ஒரு சிலருக்கு “குவா குவா” சத்தம் கேட்கும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களைச் செய்து கொண்டால் புத்திர ப்ராப்தியை பெற முடியும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வி நிலை குருவருளால் சிறப்பு பெறவுள்ளது. 

உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சிரமமான சூழ்நிலையில் உள்ளது. ஆகவே இவ்விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். கடன் வாங்கும் போதும்¸ கொடுக்கும் போதும் தேவையான ஆவணங்கள் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து பரிசீலனை செய்யவும். உங்கள் உடல் நிலையில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படும் தன்மை உள்ளதால் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றவும்¸ கண்டகசனி காலம் என்பதால் வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை.

See also  கிரிவலப் பக்தர்களை சிரமப்படுத்திய கடும் வெயில்¸ மழை

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்து உள்ளார்.இருப்பினும் உங்கள் ராசிக்கு 9ல் குருபகவான் உள்ளதால் குரு பலம் மிகுந்த நேரம் ஆகும். மிகுந்த சிரமத்திற்கு இடையில் சில திருமணங்கள் நடைபெறும் காலமாகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் கடந்த இரண்டு வருடங்களாகவே இருந்து வருகிறது. மேலும் அஷ்டமத்து சனி காலம் முடியும் வரை இது தொடரத்தான் செய்யும். யாராவது ஒருவர் கிரகங்களின் கால நிலையை அறிந்து விட்டுக்கொடுத்து செல்லவும். 

உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும்  இல்லை.இருந்த போதிலும் ஒரு சிலருக்கு வேலையின் பொருட்டு அல்லது பிரச்சனைகளின் பொருட்டு  பிரிந்திருக்கக் கூடிய சூழ்நிலை உண்டு. உங்களது சத்ரு பாவமானது பலம் மிகுந்த சூழ்நிலையில் உள்ளதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவை இல்லாமல் வாய் பேச்சு கொடுக்க வேண்டாம். 

உங்களது பிதூர் பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவான்  அமர்ந்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். இது உங்கள் ராசிக்கு திரிகோணஸ்தானம் ஆகும். ஆகவே சனி¸ ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குருபகவான் உதவுவார். அவரின்  பார்வை பலமும் நன்றாக உள்ளது. உங்கள் தந்தையாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். தந்தை-மக்கள் உறவு முறை சீராகச் செல்லும். தந்தையால் சில லாபங்களை நீங்கள் அடைய முடியும். 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை குருவருளால் சிறப்புப் பெற உள்ளது. ஒரு சிலருக்கு மேல்நிலைக்கல்வி¸ வெளிதேச வாசம் போன்றவை ஏற்படலாம்.

உங்களது தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே நிலையில்லாத தொழில் அமைப்பு தென்படுகிறது. விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு ஓடியாடி உழைப்பதும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு நிம்மதியில்லா நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலையும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க தொந்தரவுகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கனிதலும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும் நடைபெறும். உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை சற்று பின்தங்கிய சூழ்நிலையில் உள்ளது.

இருந்தபோதிலும் குருவருளால் சில நன்மைகள் நடந்தே தீரும். உங்கள் ராசியில் உச்சம் பெறும் குருபகவான் தற்சமயம் 9ல் அமர்வதால் நல்ல பலன்களே நடைபெறும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் காலமாகும். சேமிப்பு என்பது இச்சூழ்நிலையில் எதிர்பார்க்க இயலாது. உங்களது அயனம் சயனம் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசிக்கு குரு ஒருவரே  சாதகமான சூழ்நிலையில் உள்ளார். கண்டகச்சனி¸ சுக ஸ்தானத்தில் கேது¸ தசம ஸ்தானத்தில் ராகு என்று பெரிய கிரகங்கள் யாவும் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளன. குருவருளே திருவருள் என்று வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வந்தால் தடங்கல்கள் விலகும். உங்களது ராசி  அதிபதி  சந்திரனின் அதிதேவதையான ஸ்ரீபராசக்தியை வணங்கி வர பார்புகழும் பாக்கியங்களைப் பெறலாம்.

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீராகு¸ கேதுக்களை வணங்கி வருவதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ நூல்களில் துர்கா கவசத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2¸1¸3¸9 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை¸ வெண்மை¸ பொன்னிறம்¸ வெளிர்மஞ்சள்.

அதிர்ஷ்ட ராசிக்கல் : முத்து 

பரிகார யந்திரங்கள் : கடகராசி யந்திரம்¸ ஸ்ரீசக்கரம்.

(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும்
வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!