Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ 

கன்னி¸ துலாம்  

ராசிக்கான பலன்கள் – 

பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர். 
இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்
திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

பராசக்தியின் வாகனமான சிம்மத்தின் அருள்பெற்ற சிம்மராசி நேயர்களே! எந்த ஒரு செயலையும் தீவிர ஆற்றலுடன் செய்பவர்கள்¸ யாருக்கும் கட்டுப்படாத வசீகரமான உணர்ச்சி வேகத்துடன் ஈடுபடுவதால் எதிரிகள் உண்டு. சமாளிக்கும் திறமையும் உண்டு. கௌரவம் பார்ப்பதால் கவலை அடைபவர்கள். குடும்ப பெருமையை நிலைநாட்டுபவர்கள். அரசியல்¸ காவல்துறை இவர்களுக்கு கைகொடுக்கும். உயர்ந்த இதயம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 10¸4இல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் 21.3.2022 முதல் 9¸3 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 8ம் இடம் பெயர்ந்து 12¸2¸4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 6ல் அமர்ந்து 8¸12¸3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த ஆண்டில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இந்த குருப்பெயர்ச்சி காலம் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளது. குருபகவான் 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்ய வருவதால் பல விதங்களில் உங்களது உடம்பு அலைகழிப்புக்கு உள்ளாகும். மேலும் உங்கள் ராசிக்கு 6ல் சனி இருக்கும் வரை ஏதாவது உடல் தொந்தரவுகள் வந்து சென்று கொண்டே இருக்கும். ஆகவே மனநிலையிலும் உடல்நிலையிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை பொருளாதார ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயத்தில் தனவரவு என்பது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்வு தேவை.

உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை ராகு கேதுக்களின் அமைப்பால் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாய் வார்த்தைகளை விடுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. 

உங்களது குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை குடும்பம் தடையில்லாமல் செல்லும்.குடும்பத்தில் சில சஞ்சலங்கள் இருந்தாலும் குருவின் பார்வை அருளால் அது தீர்க்கப்பட்டுவிடும்.

உங்களது தைரிய ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்து கீர்த்தி தர வந்துள்ளார். உங்கள் உடம்பில் தைரியம் நன்றாகவே இருக்கும். ஆனால் உடல் தைரியத்தை விட மனதைரியமே இக்காலத்தில் மிகவும் சிறந்ததாகும். ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி எதிர்வரும் காரியங்களை தைரியமாக செய்யலாம்.

உங்களது சகோதர பாவத்தை பொருத்தவரை சில சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களிடமிருந்து சற்று விலகி இருந்து கொண்டால் நன்மையே நடக்கும். அதாவது மிகவும் ஒட்டி உறவாட வேண்டாம். தள்ளி இருந்து அளவளாவவும். சகோதர சகோதரி வகையில் வழியில் சுபச்செலவுகளுக்கு நாம் ஆட்பட நேரிடும்.

உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவானின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். தாயின் ஆயுளுக்கு தீர்க்கம் உண்டாகும். தாய்-மக்கள் உறவு முறை சீர்பெறும். உங்களது வீடு¸ மனை அமைப்பானது வரும் ஒரு வருட காலத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இருந்தபோதிலும் உங்கள் ராசிக்கு குரு எட்டில் அமர்வது சிற்சில விரயங்களை ஏற்படுத்தும். அந்த விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள இந்த வீடு¸மனை அமைப்பு உதவும். புதிய வீடு¸ மனை வாங்க இது உகந்த காலம் அல்ல. உங்களது வண்டி வாகனத் தொழிலானது சுமாராகவே இருக்கும். நாம் எதிர்பார்த்த லாபத்தை பெற இயலாது. 

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை குலதெய்வத்தின் அருள் வீட்டில் இல்லாதது போல் தெரிகிறது. ஆகவே குலதெய்வ கோயிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து அபிஷேக தீர்த்தத்தை வீட்டில் தெளித்து வர மங்களம் உண்டாகும்.

உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை புத்திர அதிபதி குருபகவான் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த வருடம் நிச்சயம் பிறக்கும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வி நிலை மிகவும் சுமாராகவே உள்ளது. கவனம் அதிகம் தேவைப்படும். 

உங்களது கடன் ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்துள்ளதால் கடன்கள் கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலருக்கு கடன்கள் தீர கூடிய சமயமாகவும் இருக்கும். ஆகவே வரும் காலத்திலும் தேவைக்கேற்ப பண விஷயங்களை முடிவு செய்து கொள்ளவும். உங்களது உடம்பை பொருத்தவரை சளி¸ வயிறு¸ சு10டு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி¸ பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்படிகமணி வாங்கி உடம்பில் அணியவும்.

உங்களது திருமண பாவத்தை பொருத்தவரை தற்சமயம் உங்களுக்கு குருபலம் இல்லை. திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் அடுத்த குருப்பெயர்ச்சி வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பவர்கள் தக்க பரிகாரங்களை செய்துகொண்டு தயாராக இருந்து கொள்ளவும். திருமணமான தம்பதிகளுக்கு மத்தியில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டால் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. குடும்பம் எனும் வண்டியை கணவன்¸ மனைவி என்ற இருவரும் சேர்ந்துதான் இழுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் காலமாகும்.

உங்களது மாங்கல்ய ஸ்தானத்தில் குரு அமர்வது அவ்வளவு சிறப்பு அல்ல. மாங்கல்யத்திற்கு பாதிப்பு இல்லை என்றாலும் தனித்தனியாக பிரிந்து வசிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். “இம்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போம்படி யானதும் என்ற கவிக்கேற்ப உங்களது சத்குரு பாவமானது பலமடைய உள்ளது. இப்போது நாம் பணிய வேண்டிய காலமாகும். அடுத்த குருப்பெயர்ச்சி சமயத்தில் நாம் பாய்வதற்கு தயாராகலாம். 

உங்களது பிதுர் பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்கள் தந்தையாரின் ஆயுளுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது. அதே சமயத்தில் மனநிலையில் பெரிய மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும். அதை உங்களுக்கு சாதகமாக மாற்ற நீங்கள் அவரிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தந்தை-மக்கள் உறவு சுமாராகவே செல்லும். தந்தை வழி சொத்துக்களில் வில்லங்கங்கள் ஏற்படும். 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை சுமாராக இருப்பதால் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். புற சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு அகச் சூழ்நிலையெனும் படிப்பை மறந்துவிட வேண்டாம். போதிய கவனம் இருந்தால் கல்வியை நமக்கு சாதகமாக்கலாம்.

உங்களது தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத்துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத்துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு போதிய தொழில் வரவும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைகொடுத்தலும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேண்டாத தண்ட தீர்வைகளும் கிடைக்கும். 


2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்


உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை சனி ஒருவர்தான் இக்காலத்தில் உங்களுக்கு பணம்¸ குணம் இரண்டிலும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவார். அடுத்ததாக கேதுபகவான் மூன்றில் அமர்ந்து ஓரளவு தைரியத்தை கொடுப்பார். ஆகவே அஷ்டமத்து குரு என்று பயப்பட வேண்டாம். போதுமானவரை இந்த வருடம் உங்களுக்கு அவ்வளவாக பணப்பிரச்சனை இருக்காது. ஆனால் வரும் சனிப்பெயர்ச்சி காலம் முதல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க-வேண்டும் என்பதால் இப்போதே சேமித்துக் கொள்ள பழகிக் கொள்ளவும்.

உங்களது அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனியின் பார்வையும் குருவின் பார்வையும் விழுகின்றது. ஆகவே நன்மை தீமை கலந்த பலன்களே இவ்வருடம் முழுவதும் நடக்கும். சனி¸ கேது ஆகிய இருவரைத் தவிர மற்ற கிரகங்களான ராகு¸ குரு ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளனர். ஆகவே உங்கள் ராசிக்கு கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டாலும் சனிபகவான் அமைப்பினால் அது தகர்க்கப்பட்டுவிடும்.

எல்லாம் வல்ல உங்கள் ராசிநாதன் சூரியனின் அதிதேவதையான ஸ்ரீசூரியநாராயணரை தொழுது வந்தால் சூழ்நிலைகள் சாதகமாக முடியும்.

பரிகாரம் – திருப்பாம்புரம்¸ காளஹஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும். நூல்களில் குரு கவசத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2¸1¸3¸9

அதிர்ஷ்ட ராசிக்கல் : மாணிக்கம்¸ புஷ்பராகம்

திர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்¸ மஞ்சள். வெண்மை¸ இளம் சிவப்பு.

பரிகார யந்திரங்கள் : சிம்மராசி யந்திரம். ஸ்ரீசூரியன் யந்திரம்.


2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்


திருமோகூரில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலின் அம்சம் பொருந்திய கன்னி ராசி நேயர்
களே! கல்வியில் மேன்மையாக¸ அன்பாக பழகக் கூடிய. இனிமையான பேச்சாற்றல் கூடிய¸ பிறருக்கு உதவி செய்யக்கூடிய¸ ஆராய்ச்சி தன்மை அதிகம் தொடர்புடைய அரசியல்வாதியாக¸ கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் அல்லல்படும் கன்னிராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3.9 சஞ்சரித்த ராகு கேதுக்கள் வரும் 21.3.2022ல் முதல் 2¸8ம் இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் 13-14.4.2022 முதல் 7ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 11¸1¸3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 5ல் அமர்ந்து 7¸11¸2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்க உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவானின் பார்வைபடுகிறது. ஆகவே கடந்த காலங்களில் அனேக துன்பங்களை அனுபவித்த உங்கள் உடல்¸ மனதானது அதிவிரைவில் துன்பங்களில் இருந்து விடுதலை பெற இந்த குருப்பெயர்ச்சி காலம் உதவும். மேலும் உடம்பில் புத்துணர்ச்சியும்¸ மனதில் தைரியமும் பிறக்கும். 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை சனி பார்வை விழுந்து கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தன வரவில் நிலையான தன்மை அடைய சற்று காலம் வரை பொறுத்திருக்க வேண்டும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. இவ்விடத்தில் கேதுபகவான் அமர்வது உங்கள் ஜாதகத்திற்கு தற்காலிகமாக தோஷத்தை ஏற்படுத்தும் காலமாகும். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை வாய் வார்த்தைகளை வெளியிடுவதில் மிகுந்த கவனம் தேவை. சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

உங்களது குடும்ப ஸ்தானத்திற்கு மேற்கண்ட அமைப்பானது சற்று கவலை தரக் கூடியதாக இருந்தாலும் குருபகவான் அமர்ந்த இடம் பலமுள்ளதாக இருப்பதால் எதற்கும் கவலைப்பட தேவையில்லை.

உங்களது தைரிய ஸ்தானத்திற்கு குருபகவான் பார்வை விழுந்துள்ளது. ஆகவே நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த தைரியம் என்பது இப்போது உங்கள் உடம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். மனதில் தெம்பு பிறக்கும். எதிர்வரும் செயல்களை செவ்வனே செய்து முடிக்க முடியும்.

உங்களது சகோதர பாவத்தை பொருத்தவரை செவ்வாயின் அருளால் சுபமே நிகழும். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்ட முன்வருவார்கள். அவர்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு நீங்கள் செல்லவும். உங்கள் வீட்டு சுப காரியங்களுக்கு அவர்கள் வரவும் என்று ஒரே குதூகலமாக இருக்கும்.

உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். தாயின் உடல்நிலையில் அவ்வப்போது சிற்சில பிரச்சனைகள் ஏற்பட்டு தீரும். அதேபோல் மனநிலையிலும் சில நேரங்களில் சஞ்சலங்கள் உருவாகும். தாய்-மக்கள் உறவு சீராக இருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை குரு 7ல் அமர்ந்தாலும் ராகு¸ கேதுக்களின் ஆதிக்கம் சரியில்லாத காரணத்தால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். ஒரு சிலருக்கு வீடு பழுது செலவுகளை பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். புதிய வீடு. மனை வாங்குவதற்கு ஜாதகத்தில் திசா¸ புத்தி சரியாக இருந்தால் வாங்கிக் கொள்ளவும். உங்களது வண்டி¸ வாகனமானது ஓரளவு சாதகமான சூழ்நிலையில் செல்லும். அதே சமயம் புதிய வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்து பரிபாலனம் செய்ய வருகிறார். சனி 5ல் அமர்வதால் பூர்வபுண்ணிய கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே நீங்கள் உங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து வந்தால் பாவபலம் குறைந்து புண்ணிய பலம் அதிகமாகும்.

உங்களது புத்திர ஸ்தானமானது பலவீனப்பட்ட நிலையில் இருப்பதால் புத்திரப்பேறு இல்லாதவர்கள் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்துகொள்ளவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்விநிலை மந்தமான சூழ்நிலையில் இருக்கும். போதிய கவனம் தேவை. 

உங்கள் கடன் ஸ்தானமானது வலுவிழந்த சூழ்நிலையில் உள்ளதால் ஒருசிலருக்கு கடன்கள் தீரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் கடன்கள் முழுமையாக அடையாது. ஒரு கடனை அடைக்க பிரிதொரு கடனை வாங்கி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் உடல்நலத்தை பொருத்தவரை வாதம்¸ கபம்¸ பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏதாவது தொந்தரவுகள் ஏற்படும். மிகவும் வயதான இந்த ராசிநேயர்களுக்கு கை¸ கால்களில் வாதநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தகுந்த எச்சரிக்கை தேவை.

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்


உங்களின் திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு அமர்ந்துள்ளார். சனி பார்வையும் 
இங்கு விழுந்துள்ளது. ஆகவே உங்களுக்கு போதிய குருபலம் ஏற்பட்டாலும் சனி பார்வையால் சில தடங்கல்கள் உருவாகும். திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் திருமணஞ்சேரி¸ திருவீழிமிழலை சென்று பரிகாரம் செய்து வந்தால் திருமணம் இனிதே நடந்தேறும். திருமணமான தம்பதியர்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் சிற்சில கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். லட்சுமி நாராயணரை தரிசித்து வரவும். உங்கள் மாங்கல்ய ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இந்த நேரத்திற்கு இது தற்காலிக நாகதோஷம் ஆகும். ஆகவே இதை தவிர்க்க தகுந்த பரிகாரங்களை செய்துகொள்ளவும். மாங்கல்ய பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் மனதளவில் சஞ்சலம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

உங்களது தைரிய ஸ்தானமானது மிகவும் பலவீனமான சூழ்நிலையில் உள்ளதால் நீங்கள் பேசும் பேச்சுகளை தெளிவாக நிதானமாக பேசவும். உங்கள் பாக்கிய ஸ்தானத்திற்கு யாதொரு குறையும் இருக்காது. உங்களது தந்தையாரின் ஆயுள் பாவம் நன்றாக இருக்கும். தந்தை-மக்கள் உறவுமுறை சீராக செல்லும். தகப்பனாரால் சில நல்ல காரியங்கள் உங்களுக்கு ஏற்படும். தகப்பனார் வழி சொத்துக்கள் உரிய நேரத்தில் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் நடக்கும். 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை ஓரளவு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடைபட்ட கல்வியை தொடர்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலருக்கு வெளிதேச வாசம்¸ வெளிதேச படிப்புகள் உருவாகும். சரஸ்வதியை வழிபட்டு வரவும்.

உங்களது தொழில் ஸ்தானத்தைப் பொருத்தவரை சப்தம ஸ்தானத்தில் குரு அமர்வது மிகவும் சிறப்பாகும். விவசாயத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் விலகுவதும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும் நடைபெறும். உங்களது 

லாப ஸ்தானத்தை பொருத்தவரை குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே நன்மை¸ தீமை கலந்த பலன்களே ஏற்படும். பொதுவாக லாபம் என்பது பணத்தை மட்டும் குறிக்காது. குடும்பத்தையும் குறிக்கும். ஆகவே குடும்ப வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் நிச்சயமாக ஏற்படும் காலமாகும். பணத்தேவைகள் நிறைவு பெறுவதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆகவே இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு வழி செய்து கொள்ளவும். 

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை ஓரளவு சாதகமான சாழ்நிலையில் இருந்தாலும் ராகு¸ கேது¸ சனி ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் போதிய பலம் இந்த ராசி நேயர்களுக்கு கிடைக்காது. குரு ஒருவரே உங்களுக்கு சாதகமான அமைப்பில் உள்ளார். ஆகவே வாழ்க்கையில் மிகுந்த சிரத்தையுடன் மேற்கூறிய காரண காரியங்களை ஆராய்ந்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி புதனின் அதிதேவதை ஸ்ரீமந் நாராயணரை வணங்கிவர நல்லதே நடக்கும்.

பரிகாரம்:- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் ஊர்களிலுள்ள ராகு கேதுக்களை வழிபடுவதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பம் ஊர்களிலுள்ள சனிபகவானுக்கு பிரீதி செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

திர்ஷ்ட எண்கள் : 5¸6¸2. 

அதிர்ஷ்ட ராசிக்கல் : மரகதப்பச்சை¸ வைரம். 

அதிர்ஷ்ட நிறம் : சீல்வர். சாம்பல்¸ பச்சை¸


2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்


வள்ளுவன் வாக்கிற்கிணங்க துலாக் கோல் போல் 
நீதி நேர்மை கடைப்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே! வாக்கு தவறாத கடமை¸ கண்ணியம்¸ கட்டுப்பாடுடைய¸ பிறரும் அது போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய¸ உள் ஒன்று வைத்து புறம் பேசாத¸ வசீகரம் உடைய¸ கலை ஆர்வம் மிக்க¸ தர்ம சிந்தனை உடைய¸ பெண்கள் தொடர்பு அதிகம் உடைய துலா ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2¸8ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 1¸7க்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 6மிடம் பெயர்ந்து அங்கிருந்து 10¸12¸2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 4ல் அமர்ந்து 6¸10¸1 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். ஆகவே உங்களது உடம்பை பொருத்தவரை உடல்நிலைக்கு பதிலாக மனநிலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். மனநிலை பாதித்தாலே உடல்நிலையும் பாதிக்கப்படும். ஆகவே மனநிலையை திடப்படுத்த யோகா-தியானம் போன்றவற்றில் விடுபடவும். உங்களது ராசிக்கு சனி பார்வை விழுவது உங்களை ஒரு பாடு படுத்திவிடும் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு யோக கிரகமாவதால் நிதானமாகவே பலன்களை வழங்குவார். 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவானின் பார்வை பெறுவது மிகவும் நல்லது. ஆகவே தன விஷயத்தில் நல்லதொரு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் பொருளாதார ரீதியாக வலுவான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் சிறப்பு பெறுவதால் குடும்ப வாழ்க்கையும் ஓரளவிற்கு சாதகமான சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லப்படும். குடும்பத்தில் சில சஞ்சலங்கள் இருந்தாலும் அதை குரு பார்வையானது நீக்கிவிடும். உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் உங்கள் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். ஆகவே வாய் வார்த்தைகளை வெளியிடும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. 

உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை ஏற்கனவே நீங்கள் அர்த்தாஷ்டமத்து சனியின் பிடியில் அகப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததால் தைரியம் என்பது காணாமல் போய்விடும். மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். 

உங்களது சகோதர பாவமானது தாமரை இலையில் ஒட்டிய தண்ணீரைப் போன்று இருக்கும். பட்டும் படாமலும் இருந்து வருவார்கள். அதற்கு தகுந்தாற் போல் நீங்களும் நடந்து கொள்ளுங்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இன்னும் ஒரு வருட காலத்திற்குப் பின் அவர்களே உங்களை நோக்கி திரும்ப ஆரம்பிப்பார்கள். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்துள்ளார். உங்களுக்கு அர்த்தாஷ்டமத்து சனிகாலம் வரக்கூடிய ஒரு வருட காலம் தொடரும். ஆகவே தாயின் ஆயுளுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. தாய்-மக்கள் உறவுமுறை சீராக இருக்காது. தாயாரால் சிலர் சஞ்சலப்பட நேரிடும் காலமாகும். உங்களது வீடு¸ மனை அமைப்பை பொருத்தவரை இருப்பதை அப்படியே தொடர்வது நல்லது. இப்போதைக்கு எதையும் செய்ய வேண்டாம். புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். உங்கள் வண்டி வாகனத்தை பொருத்தவரை சுமாரான பலன்களே நடைபெறும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு தற்காலம் உகந்ததாக் இருக்காது. வாகன பழுது செலவுகள் அதிகம் காணப்படும். தகுந்த எச்சரிக்கை தேவை. 

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை பலம் குறைந்து காணப்படுவதால் குலதெய்வத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளை செய்து வரவும். அப்படி செய்தால் கிரகங்களின் தீமைகள் களையப்பட்டு நல்லது நடக்கும். உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை புத்திர காரகனாகிய குருபகவான் ஆறில் மறைவு பெறுகிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் அடுத்த குருப்பெயர்ச்சி வரை காத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் புத்திர தோஷம் இருப்பின் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்களது குழந்தைகளின் உடல்நிலை¸ கல்விநிலை சுமாராகவே இருக்கும். உங்களது ருண ரோக ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது சிறப்பு பெறாது. இருந்தபோதிலும் குரு அமரும் இடம் ஆட்சி வீடாக இருப்பதால் ஓரளவுக்கு கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை போதிய அவகாசம் கொடுத்து உங்களை காப்பாற்ற முடியும் ஆனால் நிச்சயம் கடன்களை அடைக்க முடியாது. அதேசமயம் ஒரு கடனை அடைக்க பிரிதொரு கடனை வாங்க வேண்டாம். உங்கள் உடம்பை பொருத்தவரை சளி¸ ஜுரம் மற்றும் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும். தன்வந்திரி பகவானை வழிபட்டுவர தரித்திரங்கள் நீங்கி நன்மை பிறக்கும்.

உங்களது திருமண பாவத்தை பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்வது தற்காலிக நாக தோஷத்தை ஏற்படுத்துகிறார். நாகதோஷம் என்பது வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் ஆகும். உங்களுக்கு இப்போது போதிய குருபலம் இல்லை. திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் சற்றுகாலம் பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பவர்கள் தக்க பரிகாரங்களை செய்து- கொள்ளவும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சற்று முரண்பாடான கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இதை பெரிதுபடுத்த வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று- விட்டால் பிரச்சனை சரியாகிவிடும். வீம்பு செய்ய வேண்டாம். உங்களது மாங்கல்ய ஸ்தானமானது மிகவும் பலமாக உள்ளது. ஆகவே மாங்கல்யத்திற்கு எவ்விதமான தடைகளேதும் ஏற்படாது. உங்களது சத்ரு பாவமானது பலம் மிகுந்ததாக இருப்பதால் எதிரிகள் அதிகம் தோன்றுவார்கள். இருந்தபோதிலும் அவர்களை கண்டும் காணாமல் இருந்துவிடுவது மிகவும் நல்லது. சத்ரு தொந்தரவுகள் அதிகமாக இருப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கிவர சுபிட்சம் கிடைக்கும். 

உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் தகப்பனாரின் ஆயுள்பாவம் நன்றாக உள்ளது. ஆனால் அவருக்கும் உங்களுக்கும் இடையில் சில மனக்கசப்புகள் ஏற்படும் நேரமாகையால் மிகவும் உஷாராக இருந்து கொள்ளவும். தந்தைவழிச் சொத்துக்களில் ஏதாவது வில்லங்கங்கள் உருவாகும். ஆகவே மிகவும் விழிப்புடன் இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளவும். 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை சற்று தடை ஏற்படக்கூடிய காலமாகும். கிடைக்காத பாடம் ஒன்றை விட கிடைத்த பாடம் ஒன்றை பயன்படுத்திக் கொள்வது கல்வியில் சிறப்பைத் தரும். கல்வி ஸ்தானத்தை மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்.

உங்களது தொழில் ஸ்தானத்திற்கு குரு¸ சனி இவர்களின் பார்வை கிடைத்துள்ளது. ஆகவே இந்த இடமானது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். விவசாயத்துறையினருக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குலும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் களையபடுவதும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேண்டாத தண்ட தீர்வுகளும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடி அலையும் சூழ்நிலையும் ஏற்படும். 

உங்கள் லாப ஸ்தானத்திற்கு குருபார்வை ஒன்றே பக்க பலமாக உள்ளது. பணவரவில் எதிர்பார்த்த தொகையானது நிச்சயம் நமக்கு கிடைக்காது. அதே சூழ்நிலையில் குடும்ப ரீதியாக அறிமுகமற்றவர்களின் தொடர்பால் சில லாபங்களை நீங்கள் அடைய முடியும். ஆகவே எதையும் எதிர்பாராமல் கிடைத்த லாபத்தை பெற முயற்சி செய்யுங்கள். 

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை குரு¸ சனி¸ ராகு¸ கேது ஆகியோரின் சஞ்சாரம் சரியில்லை. பெரிய கிரகங்கள் யாவும் சாதகமற்ற சூழ்நிலையில் இருந்தாலும் குருவின் பார்வையானது 2¸10¸12 ஆகிய இடங்களுக்கு விழுவதால் வாழ்க்கையை நிதானமாக நடத்திக் கொள்ள முடியும். கிரகங்கள் நமக்கு தரும் சுப பலன்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அஷ்டமத்து சனி காலத்தை கடக்க முடியும். உங்கள் ராசி அதிபதி சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமியை வழிபட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெறுவோம்!

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- சிம்மம்¸ கன்னி¸ துலாம் ராசிக்கான பலன்கள்


பரிஹாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஊர்களிலுள்ள ராகு¸ கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களிலுள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும்¸ குச்சனூர்¸ திருநள்ளாறு¸ ஏரி குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு பிரார்த்தனை செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6.

பரிகார யந்திரங்கள் : துலாம் ராசி யந்திரம்¸ ஸ்ரீமகாலட்சுமி யந்திரம்.

அதிர்ஷ்ட ராசிக்கல் : வைரம்.

திர்ஷ்ட நிறம் : வெண்மை¸ வெளிர் நிறம்.

(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!