Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸ 

தனுசு¸ மகரம் 

ராசிக்கான பலன்கள் – 

பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர்.  இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்
திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

 

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அந்தக் குமரனையே ராசி அதிதேவதையாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! திடகாத்திரமான தேக அமைப்பும்¸ வசீகரமான முகமும்¸ பிடிவாதம்¸ முன்கோபம்¸ முரட்டு சுபாவம் உடைய¸ மன உறுதிமிக்க¸ வாக்கில் நாணயம் மிகுந்த¸ சண்டை என்று வந்துவிட்டால் எதிரியை ஒரு வழி பண்ணக் கூடிய¸ உழைத்து செல்வம் சேர்ப்பதில் நிம்மதி உடைய விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7¸1ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 6¸12 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 5ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 9¸11¸1 இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 3ல் அமர்ந்து 5¸9¸12 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களைத் தரும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கிருந்த கேது பகவான் விலகிவிட்டார். நீண்ட நாட்களாக நம் உடம்பில் இருந்து வந்த பாரமானது இக்காலத்தில் இறக்கி வைக்கப்படும். மேலும் உங்கள் ராசிக்கு குருபகவானின் பார்வை விழுந்துள்ளது. உடல்நலத்தில் நல்லதொரு மாற்றங்களை காணமுடியும். முகத்தில் பிரகாசம் தென்படும். மனதில் தைரியமும்¸ தெம்பும் கூடும். 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை பொருளாதார ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் களையப்படும் நேரமாகும். பணத்தேவைகள் அதிகம் இருப்பினும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பொருளாதாரத்தை சீர்படுத்திக் கொள்ளவும். 

உங்களது வாக்கு ஸ்தானமானது மிகவும் நன்றாக உள்ளது. நான்கு பேருக்கு மத்தியில் செல்வாக்கு உயரும். சொல்வாக்கு வேதவாக்காக மாறும் காலமாகும். குடும்பத்தை பொருத்த வரை சஞ்சலமான சூழ்நிலை மாறி சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். குடும்ப ஸ்தானம் வலுவான நிலையை அடைய உள்ளது. எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். 

உங்கள் தைரிய ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளதால் தைரியம் கூடும் காலமாகும். அதே சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையும் தேவை. அடுத்த வருடம் சனி அர்த்தாஷ்டமச் சனியாக மாற உள்ளார் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது சகோதர பாவமானது நல்ல நிலையில் உள்ளது. அவர்களால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே அவர்களை அரவணைத்துச் செல்லவும். அவர்களிடம் தேவையில்லாத வீண் வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டாம். நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்களது சுக ஸ்தானத்தைப் பொருத்தவரை உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கமாக உள்ளது. தாய்-மக்கள் உறவுமுறை சீராக இருக்கும். தாயாரால் சில ஆதாயங்கள் அடையும் காலமாகும். அதே சமயம் தாயாரின் உடல்நிலையில் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து செல்லும். உங்கள் வீடு¸மனையை பொருத்தவரை மிகவும் நல்லதொரு சூழ்நிலை இந்த ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும். ஆகவே புதிய மனை அல்லது வீடு வாங்குவதற்கு இது மிகவும் ஏற்ற காலமாகும். அடுத்த ஓராண்டில் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் பிறக்க உள்ளது. அதற்குள் உங்களுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும். உங்களது வண்டி¸ வாகன ஸ்தானமானது நல்ல நிலையில் உள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். வாகனங்களால் ஆதாயம் அடைய முடியும். 

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பூர்வ புண்ணிய பலம் அபரிதமாக உள்ளது. இருந்தாலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டுவர வேண்டும். நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். புத்திரகாரகன் குருபகவான் ஆட்சியாக அமர்ந்திருந்து உங்களுக்கு தேவையான குழந்தை செல்வத்தை கொடுப்பார். புத்திரதோஷம் குருபகவானை வழிபட்டு வரவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ இருப்பதால் மிகச் சிறந்ததொரு கல்வியினை அவர்களால் தரமுடியும். 

உங்களது கடன் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ராகு ஆறில் அமர்ந்தால் பணப் பரிவர்த்தனைகள் பலவிதமாக ஏற்படும். இருந்தபோதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ‘ராகு கொடுப்பது போல் கொடுத்து¸ கொடுத்ததை எடுத்து விடுவார் என்பதால் விழிப்புணர்வு தேவை. கடன்கள் கட்டுக்குள் வரும் காலமாகும். உங்களின் ரோக ஸ்தானத்தை பொருத்தவரை ரத்தம்¸ சதை¸ எலும்பு போன்றவற்றில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகுந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்களின் திருமண ஸ்தானத்தை பொருத்தவரை குரு பலம் நன்றாக உள்ளதால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான காலம் ஆகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்துகொண்டு திருமணத்திற்கு தயாராகவும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையக்கூடிய நேரமாகும். பிரிந்தவர்கள் ஒன்று கூடும் காலமாகும். கணவன்-மனைவி உறவு சீரும் சிறப்புமாக இருக்கும். 

உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு பலம் அதிகமாக உள்ளது. ஆகவே நீங்கள் நினைத்ததை நடத்திக்கொள்ள வாழ்க்கை துணையோடு சேர்ந்து நல்ல முடிவை எடுக்கவும். உங்கள் சத்ரு பாவமானது பலவீனப்பட்ட நிலையில் உள்ளதால் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரை எடுத்தெறிந்து பேசுகிறீர்களோ அவர்களே நாளை உங்களுக்கு தேவைப்படுவார்கள். கவனம் தேவை. 

உங்களது பாக்ய ஸ்தானத்தை பொருத்தவரை குரு¸ சனி ஆகியோரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே தந்தையாரின் ஆயுள் தீர்க்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவு மேம்படும். தந்தையாரால் சில ஆதாயங்களை அடையக் கூடிய நேரம் ஆகும். ஆகவே அவரை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தந்தையாருக்கு நீர் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி பீடைகள் ஏற்படும். தக்க மருத்துவ கவனம் தேவை. 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை சற்று ஏற்ற இறக்கம் உண்டாகும். இருந்தாலும் உங்களுக்கு குருவருள் திருவருளை கூட்டுவிக்கும். கவலைப்பட வேண்டாம். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

உங்களின் தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத்துறையினருக்கு விளைச்சல் நிதானமாகவும்¸ மருத்துவத்துறையினருக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு இன்னல்கள் விலகுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கைமேல் பலன் கொடுப்பதும். அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவானின் ஏழாம் பார்வை விழுவதால் மிகவும் நல்லதொரு பொருளாதார வளத்தினை எதிர்பார்க்க முடியும். இந்த வருடம் நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு பணமும்¸ குணமும் அடுத்து வரக்கூடிய அர்த்தாஷ்டம சனி காலத்திற்கு பயன்படும். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் லாபத்தை கையாள வேண்டும். உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர்ந்து சனிபகவான் பார்வையிடுகிறார். என்னதான் குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் சனிபகவான் பார்வை சற்று மனக்குமுறலை ஏற்படுத்தும். கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால் அதில் திருப்தி இருக்காது. இது போன்ற குழப்பங்கள் இந்த ஒரு வருட காலம் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் உருவாகும். உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் அதிதேவதையான ஸ்ரீசுப்பிரமணியரை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ கீழப்பெரும்பள்ளம்¸ காளகஸ்தி ஊர்களில் உள்ள கேதுபகவானை தரிசனம் செய்வதும்¸ நூல்களில் துர்கா கவசத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ பசுக்களுக்கு அகத்திக்கீரை தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1¸9¸2¸3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு¸ இளஞ்சிவப்பு¸ ரோஸ்¸ வெண்மை கலந்த நிறங்கள்.

அதிர்ஷ்ட ராசிக்கல் : பவளம்.

பரிகார யந்திரங்கள் : விருச்சக ராசி யந்திரம்¸ ஸ்ரீபாலசுப்பிரமணியர் யந்திரம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உயர்ந்த நெற்றி¸ ஆழ்ந்த சிந்தனை¸ கம்பீரமான தோற்றம்¸ ஒளிவு மறைவு இல்லாத பேச்சு¸ கல்வியில் மிகுந்த ஆற்றல்¸ தன்னம்பிக்கை¸ உண்மை நிலை¸ குடும்பத்தினர் மீது அதிக பாசம்¸ இதனால் அவ்வப்போது பிரச்சினைகள் கிளம்பி அடக்கி ஆளும் தன்மையுடைய தனுசுராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6¸12இல் சஞ்சரித்த ராகு கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 5¸11 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 4மிடம் பெயர்ந்து 8¸10¸12 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 2ல் அமர்ந்து 4¸8¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடத்தில் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை இப்போது இருக்கும் சூழ்நிலையே இந்த ஒரு வருட காலம் தொடரும். ஆனால் மன அழுத்தம் சற்று அதிகமாகும். மன அழுத்தத்தால் இருதயத்தில் சற்று வலி ஏற்பட்டு நீங்கும். குருபகவான் 4ம் இடத்தில் அமர்வது அர்த்தாஷ்டம குருவாகும். ஆகவே உடல்நிலையில் போதிய விழிப்புணர்வு தேவை. உங்கள் தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்துள்ளார். தனவரவு என்பது தாராளமாக இருந்தாலும் இந்த ஒரு வருட காலத்தை சற்று சிரமத்துடன் தான் கழிக்க வேண்டும். ஆனால் ஏதாவது நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை வார்த்தைகளை வெளியிடும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. “தவளையும் தன் வாயால் கெடும்” என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது தைரிய பாவமானது பலமிழந்து காணப்படும். ஆகையால் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். நம்மை ஏசுவோர் பலர் இருந்தாலும் அவர்களை புறம் தள்ளிவிட்டு நாம் செய்யும் செயல்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களது சகோதர பாவமானது பலமிழந்த சூழ்நிலையில் உள்ளதால் சகோதர சகோதரி வகையில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். நாம் அவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது கெடுதலாகவே முடியும் என்பதால் போதுமான வரை அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். அவர்கள் வழி சொந்தபந்தங்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

உங்களது சுகஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். ஆனால் உடல்நிலையில் சற்று சங்கடங்கள் உருவாகும். மன அமைதி என்பது இருக்காது. தாய்-மக்கள் இடையே உறவுமுறை சீராக இருக்காது. தாய்வழி சொந்தங்களால் சில அவதிகள் ஏற்படும் காலமாகும். உங்களது வீடு¸ மனை அமைப்பை பொருத்தவரை குருபகவான் இந்த இடத்திற்கு வருவது சற்று கவலை தரக்கூடிய சூழ்நிலையாகும். ஆகவே இருப்பதை வைத்து அப்படியே தொடர்வது நல்லது. உங்களது வண்டி¸ வாகன ஸ்தானம் சுமாரான பலன்களையே கொடுக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு காலம் நமக்கு கை கொடுக்காது. எச்சரிக்கை தேவை. 

உங்களது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இங்கு புண்ணிய பலம் குறைவாக உள்ளது. ஆகவே உங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து புண்ணிய பலத்தை கூட்டிக் கொள்ளவும். உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை ராகு தோஷம் உள்ளதால் ராகுபகவானுக்கு தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். குழந்தைப்பேறு ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்விநிலைமந்த கதியில் செல்லும். போதிய கவனம் தேவை. 

உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை போதிய கவனம் தேவைப்படும். கொடுக்கல்¸ வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பொருளாதாரத்தில் தகுந்த கவனம் தேவை. உங்கள் உடம்பை பொருத்தவரை சூடு¸ மறைவிட சம்பந்தப்பட்ட உறுப்புகளில் பிணி¸ பீடைகள் ஏற்பட மேற்கொள்ளவும். நீராகாரங்களை ஸ்படிகமணி மாலையை உடம்பில் அணியவும். வாய்ப்பு உள்ளதால் தக்க மருத்துவ ஆலோசனைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும். இது உடல் சூட்டைத் தணிக்கும்.

உங்களது திருமண ஸ்தானத்தைப் பொருத்தவரை உங்களுக்கு தற்சமயம் குருபலம் என்பது இல்லை. ஆகவே திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பவர்கள் தக்க பரிகாரங்களை செய்துகொண்டு தயாராக இருக்கவும். 2023ல் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சில முரண்பாடுகள் வந்து செல்லும். ஒரு சிலருக்கு உங்கள் வாழ்க்கைத் துணைவரின் பேச்சைக் கேட்டு தனிக்குடித்தனம் போக எத்தனிப்பார்கள். ஆகவே தகுந்த முன்யோசனை தேவை. 

உங்கள் மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆகிய இரண்டு கிரகங்களின் பார்வை பலம் விழுகிறது. ஆகவே மாங்கல்யத்திற்கு எவ்வித குறையும் இருக்காது. 

அதேபோல் உங்கள் சத்ரு ஸ்தானத்தை பொருத்தவரை நீங்களாக ஏற்படுத்திக்கொள்ளும் பகைவர்களை தவிர மற்றபடி வேறு யாரும் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும். உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை சுப பலன்கள் நடப்பதற்கு சற்று காலம் ஆகும். தந்தையாரின் ஆயுள் நிலை நன்றாகவே இருக்கும். ஆனால் தந்தை-மக்கள் உறவுமுறை சீராக இருக்காது. ஏதாவது ஒருவிதத்தில் மனப்பாகுபாடு வந்து செல்லும். இதை பெரிதாக்க வேண்டாம். நீங்கள் உங்களை திருத்திக் கொண்டாலே போதும். 

உங்களது கல்வி ஸ்தானமானது பல இடையூறுகளுக்கு மத்தியில் சிறந்து விளங்க இருக்கின்றது. ஆகவே தங்களின் கவனத்தை கல்வியில் மட்டும் செலுத்தவும். புற சூழ்நிலைகளுக்கு அடிமையாக வேண்டாம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்களது ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவானின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே விவசாயத்துறையினருக்கு விளைச்சல் அமோகமாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் விலகுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு ஊக்கத்தொகை கிடைத்தலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கடினமான வேலை வாய்ப்புகளும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். ஆகவே பொருளாதாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பணம் எனும் மாய விளையாட்டுக்கு அடிமையாகக்கூடிய சூழ்நிலை உண்டு. நம் கண்ணுக்குத்தெரியும் தூரம் வரை பச்சை பசேலென்று இருக்கும். நெருங்கிப் பார்த்தால் தான் அது தரிசுபூமி என்று தெரியும். ஆகவே கண்ணால் காண்பதையும்¸ காதால் கேட்பதையும் நம்பாமல் தன்னுடைய நிலை என்னவென்று அறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும்.

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தில் குருபகவான் பார்வை விழுந்துள்ளது. எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் குரு பார்வையால் அது நீங்கிவிடும் தன்மை உண்டு. அர்த்தாஷ்டம குரு காலமாக இருந்தாலும் கூட குருவால் ஏற்படும் பாதிப்புகளை நிச்சயம் குருவே தீர்த்து வைத்து விடுவார் என்ற நம்பிக்கையை வைக்கவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி குருபகவானின் அதிதேவதையான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் அனைத்தும் தீரும். நல்லதே நடக்கும்.

பரிகாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ திருநாகேஸ்வரம்¸ காளஹஸ்தியில் உள்ள ராகுபகவானை வழிபடுவதும்¸ நூல்களில் குரு கவசத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குவதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸1¸9 

அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள்நிற கனகபுஷ்பராகம் 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸பொன்நிறம்¸ இளம் சிவப்பு¸ வெளிர்நீலம்¸ வயலட். பரீகார யந்திரங்கள் : தனுசு ராசி யந்திரம். ஸ்ரீகுரு யந்திரம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு¸ தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5¸11இல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 4¸10 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் 13- 14.4.2022 முதல் 3மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 7¸9¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 1ல் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடத்தில் எத்தகைய பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!

உங்கள் உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். தற்சமயம் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி காலமாகும். சனிபகவான் 2023 மார்ச் மாதம் முதல் பாதச் சனியாக மாற இருக்கின்றார். அதுவரை உங்கள் உடல்நிலையில் மந்தத் தன்மையும்¸ தெளிவில்லாத முடிவுகளையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் அசதி¸ மனச்சோர்வு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

உங்கள் தன ஸ்தானத்தை பொருத்தவரை பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அதே சமயம் குருவின் பார்வை பலத்தால் நல்ல பொருளாதாரம் என்பது நிச்சயம் கிடைக்கும். அதை சரிவர பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை யாரிடமும் எதற்காகவும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். இதுவே வரக்கூடிய வருடத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது குடும்பத்தை பொருத்தவரை மனைவி சொல்லே மந்திரம் என்று கேட்டு நடக்கவும். இந்த சூழ்நிலையில் வர இருக்கும் செயல்களை அவர்கள் மனது வைத்தால்தான் செய்து முடிக்க முடியும். தைரியமாக இருக்கவும். 

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்கள் தைரிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்கள் மன தைரியம் என்பது அடுத்தவங்களுக்கு பிரயோஜனமாக இருக்குமே தவிர உங்களுக்கு எள்ளளவும் பயன்படாது. ஆகவே மனதைரியத்தை கூட்ட நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும். உங்களது சகோதர பாவத்தை பொருத்தவரை முரண்பாடுகள் அதிகம் காணப்படும்.  அவர்கள் வழியில் மனச்சோர்வுகள்¸ மன சங்கடங்களும் பண ரீதியான பிரச்சனைகளும் ஏற்படும். அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது மிகவும் நல்லது. அதற்காக ஒரேயடியாக ஒதுக்க வேண்டாம். அவர்களின் ஆதரவு பிற்காலத்தில் நமக்கு தேவை என்பதை புரிந்து நடந்து கொள்ளவும்.

உங்களது சுக ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். உங்கள் தாயாரின் உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் உடல்நிலையில் ரத்தம்¸ சதை¸ நுண்ணுயிர் தொற்றுகளால் ஏதாவது பிணிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை நன்றாக இருக்காது. தாய்க்கும் உங்களுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை ராகு அமர்ந்திருப்பதால் புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். உங்களது வண்டி¸ வாகன ஸ்தானமானது சற்று சிரமமான சூழ்நிலையில் இருப்பதால் இருப்பதை வைத்து பிழைப்பை நடத்திக் கொள்ள வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும். 

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை எந்த ஒரு கிரகமும் பார்வையிடவில்லை. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து புண்ணிய பலத்தைக் கூட்டி¸ பாவ பலத்தை குறைத்துக் கொள்ளவும். 

உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை குழந்தை பேறு இல்லாதவர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்களுடைய குழந்தைகளின் கல்விநிலை¸ உடல்நிலை சுமாராகவே இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

உங்கள் கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். ஒரு கடனை அடைக்க பிரிதொரு கடன் வாங்க வேண்டாம். இருப்பதை வைத்து வாழ்க்கையை நடத்த கற்றுக் கொள்ளவும். 

உங்களது ரோக ஸ்தானத்தை பொருத்தவரை வாதம் மற்றும் கபம் சம்பந்தப்பட்ட அமைப்புகளினால் பிணிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தினமும் காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தால் நோய்கள் கட்டுக்குள் வரும்.

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி மற்றும் குருவின் பார்வை பலம் கிடைத்துள்ளது. ஆகவே ஒருசிலருக்கு மிகுந்த பிரயத்தனத்தின் பேரில் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது சற்று சிரமமான காரியமே ஆகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிகாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் தாலி பாக்கியம் நிச்சயம் ஏற்படும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றுவிட்டால் நடப்பது அனைத்தும் சுபமாகவே இருக்கும். 

மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை மாங்கல்ய பலம் தீர்க்கமாக உள்ளது. அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் சத்ரு பாவமானது சற்று பலம் வாய்ந்ததாக இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் பார்த்து பழகவும். உங்களைப் பொருத்தவரை யார் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களே உங்களை முதுகில் குத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும். 

உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை தந்தையாரின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். தந்தை-மக்கள் உறவுமுறை சீராகச் செல்லும். இவ்விடத்திற்கு குருபார்வை விழுவதால் தந்தை சார்ந்த சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் தீர்க்கப்படும். தந்தையாரை அனுசரித்துச் செல்லவும். 

உங்கள் கல்வி ஸ்தானமானது வலுவான நிலையில் இருப்பதால் விரும்பக் கூடிய படிப்புகளை தைரியமாக படிக்கலாம். அதற்கான யோகமும்¸ காலமும் நமக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

உங்களது ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். விவசாயத் துறையினருக்கு விளைச்சல் நிதானமாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடர்பாடுகள் ஏற்படுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு மூலதன பற்றாக்குறையும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்திற்கு குருபகவானின் பரிபூரண அருள் கிடைத்துள்ளதால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் தனவரவு என்பது நாம் நினைத்த நேரத்திற்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அதற்காக அதிக அளவு ஆசைகளை வளர்க்க வேண்டாம். நமக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் ஸ்திர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும். 2023 முதல் உங்களுக்கு பாதச்சனி காலம் ஆரம்பிக்க உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை பெரிய கிரகங்கள் யாவும் சாதகமான சூழ்நிலையில் இல்லை.ஆனால் குரு பார்வை பலம் மட்டுமே உங்களுக்கு பெரிய யோகத்தை கொடுக்கும். ஆகவே வாழ்க்கையில் எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். நின்று நிதானித்து எந்த முடிவுகளையும் எடுக்கவும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரித்து உங்கள் வாழ்க்கையை நடத்தவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி சனிபகவானின் அதிதேவதை ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்கிவர விக்னங்கள் தீர்ந்து விருப்பங்கள் நிறைவேறும். நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்களில் உள்ள ராகு கேதுக்களை வழிபட்டு வருவதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களிலுள்ள குருவுக்கு பிரீதி செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை. செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திரதானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6¸5.

அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல்

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ மஞ்சள்¸ பொன்னிறம்.

பரிகார யந்திரங்கள் : மகர ராசி யந்திரம்.

(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!