பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் கணித்த மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

மேஷம்¸ரிஷபம்¸மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி  பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்கhttps://www.agnimurasu.com/2021/11/blog-post_17.html

துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்களை படிக்க...https://www.agnimurasu.com/2021/11/blog-post_22.html

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு. தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 2ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 6¸8¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் ஜென்மத்தில் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 5¸11ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம். வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களுக்கு ஜென்மச்சனி காலம் ஆகும். ஜென்மகுரு காலம் முடிந்துவிட்டது. உங்கள் உடம்பில் ஒருவிதமான தெளிவுபெறக் கூடிய சூழ்நிலை உண்டு. ஜென்மச்சனி காலமாக இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் என்பதால் கெடுபலன்களை கொடுக்கமாட்டார். இருந்த போதிலும் சில அசௌகரியங்கள் தென்பட வாய்ப்பு உண்டு. அசதி¸ ஞாபகமறதி¸ உறவினர்களால் மன அமைதி கெடுதல் என சில சஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எள் எண்ணெய் தீபம் சனிக்கிழமை தோறும் பைரவருக்கு ஏற்ற சுபம் உண்டு.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பொருளாதார ரீதியான அமைப்புகள் சற்று உயரும் காலம் ஆகும். வரவேண்டிய தொகைகள் வசூலாகும். கொடுக்க வேண்டியதையும் கொடுத்து பிரச்சினைகளை முடித்து வைப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த உட்பூசல்கள் படிப்படியாக விலகும் காலம் இதுவாகும். குடும்பத்தில் கடந்த காலத்தை விட இக்காலத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்கால சேமிப்பிற்கு இக்காலம் தொட்டே முயற்சி செய்வீர்கள். உங்கள் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அடுத்தவர்கள் மீது திணிக்க முயற்சிக்க வேண்டாம். நாமும் பிறர் கருத்தை ஏற்க வேண்டாம்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. இது நல்லதல்ல. உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. ஆனால் இரண்டும் இருப்பது போல் வெளியில் காட்டிக் கொள்வீர்கள். தினமும் காலை எழுந்தவுடன் உங்களது இரு உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை கூடும். உள்ளம்¸ உடல் இரண்டும் வலிமை பெறும். உங்கள் சகோதர-சகோதரி பாவம் அவ்வளவு உயர்வாக இல்லை. அவர்கள் பொருட்டு சில விசயங்களில் நீங்கள் கவலை கொள்ள நேரிடும். தேவையில்லாத கவலை. அவர்கள் பாடு அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று விட்டுவிடுங்கள். நல்லதே நடக்கும்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது. உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். உடல்நிலையில் வயிறு¸ இரத்தம்¸ கை¸ கால் சம்பந்தப்பட்ட அமைப்பில் நோய் தாக்கம் உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை மேம்படும் காலமாகும். தாயால் சிலர் ஆதாயம் அடையமுடியும் என்பதால் அவரை அனுசரித்து செல்வது நல்லது. வீடு¸ மனையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு மனை யோகம்¸ வீடு வாங்கும் யோகம் உருவாகும். உங்களது வண்டி வாகனம் ஓரளவு நல்ல லாபம் தரும் சூழ்நிலையில் இருந்தாலும் விரயச் செலவுகள் அதிகமாக தென்படும். கவனம் தேவை.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்களது பூர்வ புண்ணிய பலம் குறைந்துள்ளது. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனை அல்லது திருப்பணிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுங்கள். பாவ பலன் குறைந்து புண்ணிய பலம் கூடும். உங்களது புத்திர பாக்யம் ராகுவால் தடைபட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வரை தொடரும். அதன்பின் ராகுப்பெயர்ச்சி ஆகிவிடுவார். புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரம் செய்யவும். நிச்சயம் குருவருள் திருவருள் புரிவார். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மந்தமாக இருந்தாலும் செயல்களில் தீரராக இருப்பார்கள்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக் கொடுக்கும் அல்லவா? அப்படிப் பார்த்தல் கடன் கூடும் போல் தெரிகிறதே? ஆமாம் கூடத்தான் செய்யும். அது நீங்கள் உங்களுக்கு வாங்கியது கிடையாது. அடுத்தவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்ததாகும். கடன் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் உடம்பில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் வாரம் ஒருமுறை பச்சை காய்கறி உண்ண பழகுங்கள். அல்லது முருங்கைக்கீரை சூப்¸ தினமும் பருகிவர மேற்கண்ட நோய்கள் விலகும்.

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். உங்களுக்கு தற்சமயம் குருபலம் வந்தாலும் சனிபகவானின் பார்வையால் சிற்சில தடங்கல்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. தடைகளை தகர்த்து திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று பரிஹாரம் செய்து வரவும். திருமணங்கள் இனிதே நடைபெறும். திருமணமான தம்பதியருக்கு நடுவில் சில வாய்வார்த்தை பிரச்சினைகள் ஏற்படும். இருவரும் அமைதியாக இருந்துவிடுவது நல்லது. அல்லது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணகோல முருகரை தரிசனம் செய்வது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். உங்கள் உடம்பில் சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஜூரம்¸ சளி வருவதற்கு வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலமும் வந்துவிட்டது. உங்களின் சத்ரு ஸ்தானம் பலமாக உள்ளது. மிகவும் ஜாக்கிரதையுடன் செயல்படவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக வைக்கவும். பிறர் குறை கூறுவது போல் இருக்கக் கூடாது.

See also  திருவண்ணாமலை கோயிலில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானம் மிக நன்றாக இருக்கும். தந்தையின் ஆயுள் தீர்க்கம் உண்டாகும். தந்தையின் உடம்பில் நரம்பு¸ சதை¸ கை¸ கால் மூட்டுவலி போன்றவைகளில் நோய் தாக்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவுமுறை சீர்பெறும். தந்தையின் சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். தந்தையை ஒருசிலர் மட்டும் விமர்சித்து தனியாக வாழ்வார்கள். உங்களது கல்வியோகம் குருபகவான் அமைப்பால் சிறந்து விளங்கும். ஒரு சிலருக்கு தடைபட்ட கல்வியை தொடரக்கூடிய மனநிலை ஏற்படும். வேறு சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிப்பை தொடர்வார்கள்.

தொழில் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுகின்றது. தொழில் நன்றாக நடந்தாலும் லாபம் என்பது குறைவாகஇருக்கும். விவசாய தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை மாறுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்டத் துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வுகளும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். கேதுபகவான் லாபத்தில் அமர்ந்தால் மனரீதியான¸ ஞான ரீதியான¸ புத்தி ரீதியான லாபங்களை கொடுப்பார். ஒரு சிலருக்கு தொழில் நன்றாக நடந்து¸ வருமானம் குறைவாக இருந்தாலும் தொழிலில் கண்டிப்பாக மேன்மையை தருவார். கையில் காசை தங்கவிட மாட்டார். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யச் சொல்வார். முதலீடு சம்பந்தமாக விரிவான ஆலோசனை செய்தபின் முதலீடு செய்யவும். ஏனெனில் ஜென்மச்சனி காலம் அல்லவா! வரும் காலங்களில் சேமிப்பை ஊக்குவித்து விரயத்தை குறைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களது இந்த ஸ்தானம் மேடு¸ பள்ளம் நிறைந்ததாக இருக்கும். குரு¸ கேது கிரகங்கள் உங்களுக்கு துணை நிற்கும். என்னதான் ஏழரைச்சனி என்றாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிகளவு விரயபலன்களை செய்யமாட்டார். ஆனால் 5ல் உள்ள ராகு சற்று அளவுக்கதிகமான சோதனைகளை கண்டிப்பாக கொடுத்தே தீருவார். எல்லாக் காலங்களும் நமக்கு சாதகமாக இருப்பது இல்லை. அதே சமயம் நாம் நமது குடும்பம்¸ நாம் செல்லும் பாதை போன்றவற்றின் அடிப்படையிலே நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் இராசி அதிபதி சனிபகவான் இஷ்டதெய்வம் அனுமனை வழிபட்டு வாழ்க்கையில் அரணாக இருப்போம்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு பரிஹாரம் செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகுபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ முதியோர்களுக்கு உணவு தானியம் வழங்குவதும் நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

கோபுரத்திற்கு மதிப்பே அதன்மேல் உள்ள கும்பங்களே! அத்தகைய கும்பத்தை அடையாளமாக கொண்ட கும்பராசி நேயர்களே! நடுத்தரமான வட்ட வடிவமான முக அமைப்பு¸ பருத்த உருவம்¸ வசீகரம்¸ தர்ம சிந்தனை¸ வெற்றி தோல்விகளை சமமாக கருதும் தன்மை¸ எடுத்த காரியத்தில் சாதிக்கும் திறமை¸ பிறருக்கு உதவி செய்வதில் சுயநல பாங்கு¸ பல யுக்திகளை கையாண்டு வெற்றி அடைய கூடிய கும்பராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் உங்கள் ராசியில் அமர்ந்து¸ அங்கிருந்து அவர் 5¸7¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 12ல் அமர்ந்து 2¸6¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு¸ கேதுக்கள் 4¸10ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஜென்ம குருவாக வலம் வர உள்ளார். ஆக உங்களது உடல் அமைப்பானது சற்று பின் தங்கும் சூழ்நிலை உண்டு. ஏற்கனவே ஏழரைச்சனியில் விரயச்சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அதிக உளைச்சல்களால் அவதிப்பட நேரிடும். இதனால் நாம் பார்க்கும் வேலை அல்லது செய்தொழிலில் ஒருவித தயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எல்லாவற்றிற்கும் மன அழுத்தம் தான் காரணம். எல்லோருக்கும் புத்திகூறும் நீங்கள் இந்த காலத்தில் அடிசறுக்குவது உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமே.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 3ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே தனவரவில் தடை ஏற்படும் காலமாகும். நாம் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைப்பார். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் ஒரு காசு மிச்சம் பிடிப்பது என்பது சிரமமானதாக இருக்கும். இதனால் உங்கள் குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் தோன்றும். மனைவி உங்களுக்கு அடங்கியவர் என்றால் உங்களை ஏளனமாக பார்ப்பார். மிஞ்சியவர் என்றால் கண்களை உருட்டி பார்ப்பார். எச்சரிக்கை தேவை. உங்கள் வாக்கு ஸ்தானம் பலவீனமாக உள்ளதால் தேவையின்றி பேசுவதை தவிர்க்கவும். பேசினால் பிரச்சினை ஏற்படும்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களது இந்த ஸ்தானம் ஓரளவு வலுப்பெற்று உள்ளது. இயற்கையிலேயே உங்களுக்கு மனதைரியம் அதிகம். ஆனால் உடல் தைரியம் கிடையாது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தை உங்களது மன தைரியத்தால் தான் ஓட்ட முடியும். மேலும் உங்களுக்கு குருபகவானின் 5¸7¸9 பார்வை பலம் அருமையான பலன்களைத் தரும். உங்களின் சகோதர சகோதரி ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதேசமயம் உங்களை ஒருவழி உண்டு பண்ணாமல் விடமாட்டார்கள். அவரவர்கள் அவர்கள் இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு பொதுப் பிரச்சினைக்கு மட்டும் உங்களை நாடுவார். மிக கவனமுடன் செயல்படவும். அதே சமயம் அவர்களை பகைக்கவும் வேண்டாம்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இந்த இடம் சுகஸ்தானம் ஆகும். சுகத்தில் ஒரு அலைக்கழிப்பு நிச்சயம் உண்டு. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் அவரின் மன இயல்புக்கு ஏற்ப உங்களால் நடக்க முடியாது. தாய்-மக்கள் உறவுமுறை அவ்வளவு சரியில்லாத நிலை தென்படுகிறது. அனுசரித்து செல்லவும். உங்களது வீடு¸ மனை சம்பந்தப்பட்ட அமைப்பானது இருப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு வீடுமாற்றம்¸ இடமாற்றம் ஏற்படலாம். வண்டி-வாகனயோகம் தற்சமயம் உங்களுக்கு இல்லை. சற்றுகாலம் பொறுக்கவும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. மிக நல்ல அமைப்பு ஆகும். ஜென்ம குரு¸ ஏழரைச்சனி காலத்தில் இந்த மாதிரியான குருவின் 5ம்பார்வை விழுவது உங்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றும். உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிசேக ஆராதனை செய்து வரவும். புண்ணியம் கூடும்.உங்களது புத்திரபாக்ய ஸ்தானம் நன்றாக உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்யம் நிச்சயம் கிட்டும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிஹாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்வி¸ உடல்நிலை மிக அருமையாக உள்ளது.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே ஒருபுறம் கடன்களுக்கான தீர்வு வழி கிடைக்கும். மறுபுறம் உடல்நலம் கெடும். உங்கள் கடன் ஸ்தானமானது சிக்கல்கள் இன்றி பைசல் செய்யப்படும். நீங்கள் கொடுத்த கடனும் தாமதமின்றி வரப்பெறும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல்நிலையில் நீரால்¸ மனதால்¸ பயத்தால் சில நோய்கள் வந்தே தீரும்¸ நீரால் வருவதை மருத்துவரிடம் சென்று தீர்க்க முடியும். மற்றவைகளை நாம் நமது தன்னம்பிக்கை கொண்டே  தீர்க்க முடியும். தினமும் காலை எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்துவர தன்னம்பிக்கை பிறக்கும்.

See also  கொடியேற்றம், ஆருத்ரா, பவுர்ணமி- களை கட்டிய திருவண்ணாமலை

திருமணம்¸ கணவன் மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே உங்களுக்கு குருபலம் இல்லையென்றாலும் குருபார்வை பலத்தால் சில திருமணங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. இருந்த போதிலும் ஜெனன ஜாதகத்தில் சரியான திசா புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கே இது பொருந்தும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையில் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் களைவதற்கான நேரம் இதுவாகும். எவ்வித செயல்களிலும் கடைசியில் விட்டுக்கொடுத்து போகும் நீங்கள் இதிலும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள திருமணக்கோல ஸ்ரீநாராயணபெருமாளை தரிசிக்க நல்லதே நடக்கும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானம் உங்கள் ராசிநாதன் அமைப்பால் சரியாக உள்ளது. உங்கள் ஆயுள்பாவம் சனியருளால் தீர்க்கம் பெறுகிறது. உடல் நிலையில் அவ்வப்போது சில இடர்பாடுகள் காணப்பட்டாலும் அவைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். மன அழுத்தமே உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். உங்களது மாங்கல்ய ஸ்தானம் குருவருளால் தீர்க்கமாக உள்ளது. கணவன்-மனைவி இடையே சில விரிசல்கள் இருந்தாலும் அவற்றை பேசி சரிசெய்து விடுவீர்கள். உங்கள் சத்ரு ஸ்தானம் உங்களது எதிரிகளால் ஏற்படுவது இல்லை. நீங்கள் நம்பிக்கை வைக்கும் சிலரால் ஏற்படும் விரோதமானது உங்களை மலைக்க வைக்கும்.

தந்தை¸ கல்விஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு¸ குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. இந்த ஸ்தானத்திற்கு ஏற்ற¸ இறக்கமான பலன்களே நடைபெறும். உங்கள் தந்தையின் ஆயுள் பாவம் தீர்க்கமாக இருந்தாலும் வயதானவர்கள் இருந்தால் சற்று கவனிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உண்டு. தந்தைக்கும் உங்களுக்கும் போதிய மன ஒற்றுமை இருக்காது. இதனால் இருவருக்கும் இடையில் சில உரசல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்களது கல்வி ஸ்தானம் குருபார்வையால் புனிதம் பெறும். விடுபட்ட கல்வியை தொடர வாய்ப்புக்கள் உண்டு. உங்களின் உயர்கல்வி அமைப்பானது விருப்பமான பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப அமையும் என்பதில் ஐயமில்லை.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகையால் இந்த ஸ்தானத்திற்கு சற்று தடைகள் உருவாகும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தடங்கல்களான அமைப்பும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானம் சஞ்சலம் உள்ளதாக இருக்கும். குருவின் பார்வையால் வருமானம் சரிவர இருந்தாலும் விரயங்கள் தொடர்ந்து வந்து கொண்டே வரும். எதை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் எதையும் விட்டு வைக்க முடியாது அல்லவா? சந்தித்துதான் ஆகவேண்டும். சாதிக்க வேண்டுமென்றால் உங்கள் மனது ஒருநிலைப்பட வேண்டும். உங்கள் மனது ஒருநிலைப்பட உங்கள் சுற்றமும் நட்பும் விடாது. பின் என்ன செய்ய? நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்று முதலில் நம்புங்கள். அவன் பார்த்துக் கொள்வான்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானம் இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கும். எந்த ஒரு பெரிய கிரகங்களும் சாதகமான சூழ்நிலையில் இல்லை. இருந்தாலும் குரு பார்வை ஒன்றே இத்தருணத்தில் உங்களை காப்பாற்றும். எந்த சமயத்திலும் நீங்கள் கலங்க வேண்டாம். உங்களால் எந்த ஒரு பிரச்சினையும் ஆரம்பம் ஆகாது. ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏதாவது ஒரு இன்னல் வந்து கொண்டே இருக்கும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். இதனைத் தவிர்க்க முயல வேண்டும். உங்கள் ராசி அதிபதி சனிபகவான் இஷ்டதேவதை விநாயகர் இவர்களை வழிபட்டு வர விக்னங்கள் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குருபகவானை தரிசனம் செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு-கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ பொன்னிறம்¸ மஞ்சள். அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல் பரிகார யந்திரங்கள் : கும்ப ராசி யந்திரம். ஸ்ரீஅனுமன் யந்திரம். 

மகரம்¸ கும்பம்¸ மீனம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் வசிக்கும் சமுத்திர ராஜனின் அடையாளமான மீனின் அடையாளம் கொண்ட மீன ராசி நேயர்களே! நீண்டு நெடிய தேகம் கொண்ட நீதி¸ நேர்மை தவறாத¸ சாஸ்திர சம்பிரதாயங்களில் விருப்பம் கொண்ட¸ மதப்பற்று அதிகம் உள்ள¸ உழைப்பை நம்பிய¸ பெண்ணாசை கொண்ட உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்ட¸ தியாக மனப்பான்மை கொண்ட மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 12ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து – அவர் 4¸6¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 11ல் அமர்ந்து 1¸5¸8 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 3¸9ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுகின்றது. ஆகவே உடம்பு விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இந்த அமைப்பானது குறைந்த காலத்திற்குத்தான். அதன்பின் சரியாகிவிடும். உள்ளுக்குள் ஒருவிதமான மனபயம் இருந்துகொண்டே இருக்கும். எடுக்கும் காரியங்களில் பதற்றம் ஏற்படும். இது தேவையில்லாத ஒன்று. உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கி¸ நீங்களும்¸ உங்கள் குடும்பத்தையும் அல்லாட வைப்பீர்கள். உங்களிடம் உள்ள சுய தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்தால் அனைத்தும் சுபமாகவே நடக்கும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் 11ல் இருக்கும்வரை தனவரவில் தடை ஏதும் ஏற்படாது. ஏதாவது ஒருவகையில் பொருளாதாரம் சீர்  செய்யப்படும். ஆனால் குருபகவான் விரயஸ்தானத்தில் அமர்வதால் சற்று சுபவிரயங்களுக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தில் சுபீட்சமான சூழ்நிலை தென்படும். குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருந்தாலும் அனைவரின் உள்ளங்களில் ஒருவிதமான மிரட்சி தென்பட்டுக் கொண்டே இருக்கும். குடும்பத்துடன் “சிவகுடும்பம்” தரிசனம் செய்து வரவும். உங்கள் வாக்குஸ்தானம் பலமிழந்து உள்ளது. எதைப் பேசினாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும். கவனம் தேவை.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஏதோ ஒரு குருட்டு தைரியம் உங்களை வழிநடத்திக் கொண்டுள்ளது. சுய தைரியத்திற்கு நீங்கள் முயல வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அடுத்தவர்களின் சொற்களை நம்பி உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் சகோதர சகோதரி ஸ்தானம் மிக பலமாக உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயல்வார்கள். ஆனால் இடையில் பேச்சால் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது. அவர்களால் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

See also  15 அடி உயரத்தில் காட்சியளிக்கும் கலைநயமிக்க சிவலிங்கம்

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். ஆனால் உடல்நிலையில்¸ நரம்பு¸ இடுப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் ஏதாவது நோய்கள் ஏற்படும் காலமாகும். உங்கள் வீடு¸ மனை அமைப்பில் பெரிய நன்மைகள் ஏற்படும் காலமாகும். குருவால் விரயச் செலவுகள் உண்டு என்றாலும் அதை வீடு வாங்குவதற்கான சுபவிரயச் செலவாக மாற்ற வேண்டும் அல்லது தொழிலில் மூலதனமாக போட வேண்டும். உங்களது வண்டி வாகன ஸ்தானம் ஓரளவுதான் சுபபலம் ஏற்படும். விரயச் செலவுகள் ஏற்படும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. இது நல்லதல்ல. ஆகவே உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது ஏதாவது திருப்பணி வேலைகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் புண்ணிய பலம் கூடி பாவபலன்கள் குறைவாகும். உங்கள் புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சுமாரான காலம் ஆகும். குழந்தை இல்லாதவர்கள் ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால் தக்க பரிஹாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வியில் முன்னேற்றம் உண்டு.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். குருபார்வை கூட்டிக்கொடுக்கும் அல்லவா! ஆகவே உங்களுக்கு கடன் ஸ்தானமும்¸ உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வலுப்பெறும் காலமாகும். ஆகவே கடன் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஒருமுறைக்கு இருமுறை யோசித்தபின் எந்த ஒரு செயலையும் செய்யவும். உங்கள் உடல்நிலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். சூடு சம்பந்தமாக தோல் நோய்களும்¸ இரத்தம்¸ நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை தக்க நேரத்தில் எடுக்கவும்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவற்றதாக உள்ளது. உங்களுக்கு போதிய குருபலம் கிடையாது. மேலும் உங்களுக்கு சுப விரய குருபலம் வந்துள்ளதால் சிலருக்கு திருமணம் நடைபெறும் சூழ்நிலை உண்டு. ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொண்டால் திருமண வேலைகளை வரும் சித்திரை முதல் பார்த்துக் கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதிகளுக்கு நடுவில் சில பிரச்சினைகள் குடும்ப ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. உற்றார்¸ உறவினர்¸ நண்பர்கள் போன்றவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். ஸ்ரீநாராயணனை நம்புங்கள்¸ நல்லதே நடக்கும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனி¸ குரு ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இரண்டும் கெட்டான் சூழ்நிலை இந்த ஸ்தானத்திற்கு விழுந்துள்ளது. குரு பார்வையால் உங்களது ஆயுள் பாவம் தீர்க்கமாக இருக்கும். உடலில் சிற்சில நோய்களின் தாக்கம் ஏற்பட்டு நீங்கும். உங்களின் மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் கணவனோ¸ மனைவியோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் சத்ரு பாவமானது உயர்ந்து பின் தாழும். உங்களுக்கு ஏற்படும் அனுபவம் மூலம் யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்பதை உணருவீர்கள்.

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே தந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டிய திருக்கும். ஆயுள் பாவம் பரவாயில்லை. தந்தை-மக்கள் உறவுமுறை சீராக அமையாது. உங்களது கருத்துக்களையும்¸ செய்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே சமயம் அவர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தங்களுக்கு வரும் பங்கினை உறுதி செய்வார். உங்களது கல்வியோகம் சுமாராக உள்ளது. தடைபட்ட கல்வியை தொடர்வதற்கு சற்று அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும். உயர்கல்வி யோகம் ஒரு சிலருக்கு மட்டுமே உருவாகும். மற்றவர்கள் ஏதாவது தொழிலை செய்து கொண்டே கல்வியறிவு பெறுவர்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானமானது ராகுவின் அமைப்பால் மட்டுமே சிறப்பு பெறும். விவசாயத் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத் துறையினருக்கு மந்தம் நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உதவிகளும்¸ சுயதொழில் புரிவோருக்கு புதிய மூலதன முதலீடுகளும்¸ கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் கனிவதும்¸ அரசு தனியார் துறையில் உள்ளவர்களுக்கு இருப்பிட மாற்றமும்¸ வேலையில்லாதவர்களுக்கு சிரமமான வேலைகளும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் லாபஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். மிக நல்ல அமைப்பு ஆகும். வருமானத்திற்கு ஏதும் பஞ்சம் ஏற்படாது. அதே சமயம் எதிர்பாராத இனங்களால் நமக்கு தேவையான நேரத்திற்கு பொருளாதாரம் புரட்ட முடியும். உங்களின் இருக்கும் ஒரே பலவீனம் என்னவெனில் கைதூக்கி விட்டவர்களை நீங்கள் நம்ப மறுப்பதுதான். கொஞ்சம் நீங்கள் யோசித்துப் பார்த்தால் நாம் கடந்து வந்த பாதை எப்படி? இப்போது எப்படி இருக்கிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் குணம் என்றுமே மாறாது. நிறை குடம் தளும்பாது.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். அவர் உங்கள் ராசி அதிபதி ஆவார். ஆகவே உங்களுக்கு அசுப விரய பலன்களை நிச்சயம் கொடுக்க மாட்டார். சுப விரயங்கள் நிச்சயம் உண்டு. இக்காலத்தில் நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு சமயோஜிதமாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாத கற்பனைகளை செய்யக்கூடாது. அவரவர் விதிகளை ஆண்டவன் நிர்ணயிப்பார். இந்த உலகமும்¸ காலமும் நிலையானது அல்ல. உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெற்றே ஆகும். உங்கள் ராசி அதிபதி குரு அதிதேவதை தட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் எல்லாம் விலகும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுபகவானுக்கு அர்ச்சனை செய்வதும்¸ முதியோர்களுக்கு அன்னதானம்¸ கால்நடைகளுக்கு தீவன தானம் செய்வதும்¸ நூல்களில் துர்க்கா அஷ்டகம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸2¸9. பரிகார யந்திரங்கள் : மீன ராசி யந்திரம்¸ ஸ்ரீகுருபகவான் யந்திரம். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸ பொன்னிறம்¸ இளம்சிவப்பு¸ வயலட். அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் கனகபுஷ்பராகம்

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்.

Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸ 

தனுசு¸ மகரம் 

ராசிக்கான பலன்கள் – 

பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர்.  இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்
திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

 

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அந்தக் குமரனையே ராசி அதிதேவதையாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! திடகாத்திரமான தேக அமைப்பும்¸ வசீகரமான முகமும்¸ பிடிவாதம்¸ முன்கோபம்¸ முரட்டு சுபாவம் உடைய¸ மன உறுதிமிக்க¸ வாக்கில் நாணயம் மிகுந்த¸ சண்டை என்று வந்துவிட்டால் எதிரியை ஒரு வழி பண்ணக் கூடிய¸ உழைத்து செல்வம் சேர்ப்பதில் நிம்மதி உடைய விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7¸1ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 6¸12 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 5ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 9¸11¸1 இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 3ல் அமர்ந்து 5¸9¸12 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களைத் தரும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கிருந்த கேது பகவான் விலகிவிட்டார். நீண்ட நாட்களாக நம் உடம்பில் இருந்து வந்த பாரமானது இக்காலத்தில் இறக்கி வைக்கப்படும். மேலும் உங்கள் ராசிக்கு குருபகவானின் பார்வை விழுந்துள்ளது. உடல்நலத்தில் நல்லதொரு மாற்றங்களை காணமுடியும். முகத்தில் பிரகாசம் தென்படும். மனதில் தைரியமும்¸ தெம்பும் கூடும். 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை பொருளாதார ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் களையப்படும் நேரமாகும். பணத்தேவைகள் அதிகம் இருப்பினும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பொருளாதாரத்தை சீர்படுத்திக் கொள்ளவும். 

உங்களது வாக்கு ஸ்தானமானது மிகவும் நன்றாக உள்ளது. நான்கு பேருக்கு மத்தியில் செல்வாக்கு உயரும். சொல்வாக்கு வேதவாக்காக மாறும் காலமாகும். குடும்பத்தை பொருத்த வரை சஞ்சலமான சூழ்நிலை மாறி சந்தோஷப்பட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். குடும்ப ஸ்தானம் வலுவான நிலையை அடைய உள்ளது. எதையும் நினைத்து கவலைப்பட வேண்டாம். 

உங்கள் தைரிய ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளதால் தைரியம் கூடும் காலமாகும். அதே சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையும் தேவை. அடுத்த வருடம் சனி அர்த்தாஷ்டமச் சனியாக மாற உள்ளார் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது சகோதர பாவமானது நல்ல நிலையில் உள்ளது. அவர்களால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே அவர்களை அரவணைத்துச் செல்லவும். அவர்களிடம் தேவையில்லாத வீண் வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டாம். நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்களது சுக ஸ்தானத்தைப் பொருத்தவரை உங்கள் தாயாரின் ஆயுள் தீர்க்கமாக உள்ளது. தாய்-மக்கள் உறவுமுறை சீராக இருக்கும். தாயாரால் சில ஆதாயங்கள் அடையும் காலமாகும். அதே சமயம் தாயாரின் உடல்நிலையில் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து செல்லும். உங்கள் வீடு¸மனையை பொருத்தவரை மிகவும் நல்லதொரு சூழ்நிலை இந்த ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும். ஆகவே புதிய மனை அல்லது வீடு வாங்குவதற்கு இது மிகவும் ஏற்ற காலமாகும். அடுத்த ஓராண்டில் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் பிறக்க உள்ளது. அதற்குள் உங்களுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும். உங்களது வண்டி¸ வாகன ஸ்தானமானது நல்ல நிலையில் உள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். வாகனங்களால் ஆதாயம் அடைய முடியும். 

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். உங்களது பூர்வ புண்ணிய பலம் அபரிதமாக உள்ளது. இருந்தாலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டுவர வேண்டும். நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். புத்திரகாரகன் குருபகவான் ஆட்சியாக அமர்ந்திருந்து உங்களுக்கு தேவையான குழந்தை செல்வத்தை கொடுப்பார். புத்திரதோஷம் குருபகவானை வழிபட்டு வரவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ இருப்பதால் மிகச் சிறந்ததொரு கல்வியினை அவர்களால் தரமுடியும். 

உங்களது கடன் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ராகு ஆறில் அமர்ந்தால் பணப் பரிவர்த்தனைகள் பலவிதமாக ஏற்படும். இருந்தபோதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ‘ராகு கொடுப்பது போல் கொடுத்து¸ கொடுத்ததை எடுத்து விடுவார் என்பதால் விழிப்புணர்வு தேவை. கடன்கள் கட்டுக்குள் வரும் காலமாகும். உங்களின் ரோக ஸ்தானத்தை பொருத்தவரை ரத்தம்¸ சதை¸ எலும்பு போன்றவற்றில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகுந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்களின் திருமண ஸ்தானத்தை பொருத்தவரை குரு பலம் நன்றாக உள்ளதால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான காலம் ஆகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்துகொண்டு திருமணத்திற்கு தயாராகவும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையக்கூடிய நேரமாகும். பிரிந்தவர்கள் ஒன்று கூடும் காலமாகும். கணவன்-மனைவி உறவு சீரும் சிறப்புமாக இருக்கும். 

உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு பலம் அதிகமாக உள்ளது. ஆகவே நீங்கள் நினைத்ததை நடத்திக்கொள்ள வாழ்க்கை துணையோடு சேர்ந்து நல்ல முடிவை எடுக்கவும். உங்கள் சத்ரு பாவமானது பலவீனப்பட்ட நிலையில் உள்ளதால் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரை எடுத்தெறிந்து பேசுகிறீர்களோ அவர்களே நாளை உங்களுக்கு தேவைப்படுவார்கள். கவனம் தேவை. 

உங்களது பாக்ய ஸ்தானத்தை பொருத்தவரை குரு¸ சனி ஆகியோரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே தந்தையாரின் ஆயுள் தீர்க்கம் ஏற்படும். தந்தை-மக்கள் உறவு மேம்படும். தந்தையாரால் சில ஆதாயங்களை அடையக் கூடிய நேரம் ஆகும். ஆகவே அவரை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தந்தையாருக்கு நீர் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி பீடைகள் ஏற்படும். தக்க மருத்துவ கவனம் தேவை. 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை சற்று ஏற்ற இறக்கம் உண்டாகும். இருந்தாலும் உங்களுக்கு குருவருள் திருவருளை கூட்டுவிக்கும். கவலைப்பட வேண்டாம். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

உங்களின் தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத்துறையினருக்கு விளைச்சல் நிதானமாகவும்¸ மருத்துவத்துறையினருக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு இன்னல்கள் விலகுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கைமேல் பலன் கொடுப்பதும். அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவானின் ஏழாம் பார்வை விழுவதால் மிகவும் நல்லதொரு பொருளாதார வளத்தினை எதிர்பார்க்க முடியும். இந்த வருடம் நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு பணமும்¸ குணமும் அடுத்து வரக்கூடிய அர்த்தாஷ்டம சனி காலத்திற்கு பயன்படும். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் லாபத்தை கையாள வேண்டும். உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர்ந்து சனிபகவான் பார்வையிடுகிறார். என்னதான் குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் சனிபகவான் பார்வை சற்று மனக்குமுறலை ஏற்படுத்தும். கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால் அதில் திருப்தி இருக்காது. இது போன்ற குழப்பங்கள் இந்த ஒரு வருட காலம் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் உருவாகும். உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் அதிதேவதையான ஸ்ரீசுப்பிரமணியரை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ கீழப்பெரும்பள்ளம்¸ காளகஸ்தி ஊர்களில் உள்ள கேதுபகவானை தரிசனம் செய்வதும்¸ நூல்களில் துர்கா கவசத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ பசுக்களுக்கு அகத்திக்கீரை தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1¸9¸2¸3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு¸ இளஞ்சிவப்பு¸ ரோஸ்¸ வெண்மை கலந்த நிறங்கள்.

அதிர்ஷ்ட ராசிக்கல் : பவளம்.

பரிகார யந்திரங்கள் : விருச்சக ராசி யந்திரம்¸ ஸ்ரீபாலசுப்பிரமணியர் யந்திரம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உயர்ந்த நெற்றி¸ ஆழ்ந்த சிந்தனை¸ கம்பீரமான தோற்றம்¸ ஒளிவு மறைவு இல்லாத பேச்சு¸ கல்வியில் மிகுந்த ஆற்றல்¸ தன்னம்பிக்கை¸ உண்மை நிலை¸ குடும்பத்தினர் மீது அதிக பாசம்¸ இதனால் அவ்வப்போது பிரச்சினைகள் கிளம்பி அடக்கி ஆளும் தன்மையுடைய தனுசுராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6¸12இல் சஞ்சரித்த ராகு கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 5¸11 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 4மிடம் பெயர்ந்து 8¸10¸12 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 2ல் அமர்ந்து 4¸8¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடத்தில் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை இப்போது இருக்கும் சூழ்நிலையே இந்த ஒரு வருட காலம் தொடரும். ஆனால் மன அழுத்தம் சற்று அதிகமாகும். மன அழுத்தத்தால் இருதயத்தில் சற்று வலி ஏற்பட்டு நீங்கும். குருபகவான் 4ம் இடத்தில் அமர்வது அர்த்தாஷ்டம குருவாகும். ஆகவே உடல்நிலையில் போதிய விழிப்புணர்வு தேவை. உங்கள் தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்துள்ளார். தனவரவு என்பது தாராளமாக இருந்தாலும் இந்த ஒரு வருட காலத்தை சற்று சிரமத்துடன் தான் கழிக்க வேண்டும். ஆனால் ஏதாவது நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.

உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை வார்த்தைகளை வெளியிடும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. “தவளையும் தன் வாயால் கெடும்” என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது தைரிய பாவமானது பலமிழந்து காணப்படும். ஆகையால் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். நம்மை ஏசுவோர் பலர் இருந்தாலும் அவர்களை புறம் தள்ளிவிட்டு நாம் செய்யும் செயல்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களது சகோதர பாவமானது பலமிழந்த சூழ்நிலையில் உள்ளதால் சகோதர சகோதரி வகையில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். நாம் அவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது கெடுதலாகவே முடியும் என்பதால் போதுமான வரை அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள். அவர்கள் வழி சொந்தபந்தங்கள் நம் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

உங்களது சுகஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் தாயின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். ஆனால் உடல்நிலையில் சற்று சங்கடங்கள் உருவாகும். மன அமைதி என்பது இருக்காது. தாய்-மக்கள் இடையே உறவுமுறை சீராக இருக்காது. தாய்வழி சொந்தங்களால் சில அவதிகள் ஏற்படும் காலமாகும். உங்களது வீடு¸ மனை அமைப்பை பொருத்தவரை குருபகவான் இந்த இடத்திற்கு வருவது சற்று கவலை தரக்கூடிய சூழ்நிலையாகும். ஆகவே இருப்பதை வைத்து அப்படியே தொடர்வது நல்லது. உங்களது வண்டி¸ வாகன ஸ்தானம் சுமாரான பலன்களையே கொடுக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு காலம் நமக்கு கை கொடுக்காது. எச்சரிக்கை தேவை. 

உங்களது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இங்கு புண்ணிய பலம் குறைவாக உள்ளது. ஆகவே உங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து புண்ணிய பலத்தை கூட்டிக் கொள்ளவும். உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை ராகு தோஷம் உள்ளதால் ராகுபகவானுக்கு தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். குழந்தைப்பேறு ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்விநிலைமந்த கதியில் செல்லும். போதிய கவனம் தேவை. 

உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை போதிய கவனம் தேவைப்படும். கொடுக்கல்¸ வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பொருளாதாரத்தில் தகுந்த கவனம் தேவை. உங்கள் உடம்பை பொருத்தவரை சூடு¸ மறைவிட சம்பந்தப்பட்ட உறுப்புகளில் பிணி¸ பீடைகள் ஏற்பட மேற்கொள்ளவும். நீராகாரங்களை ஸ்படிகமணி மாலையை உடம்பில் அணியவும். வாய்ப்பு உள்ளதால் தக்க மருத்துவ ஆலோசனைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும். இது உடல் சூட்டைத் தணிக்கும்.

உங்களது திருமண ஸ்தானத்தைப் பொருத்தவரை உங்களுக்கு தற்சமயம் குருபலம் என்பது இல்லை. ஆகவே திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பவர்கள் தக்க பரிகாரங்களை செய்துகொண்டு தயாராக இருக்கவும். 2023ல் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சில முரண்பாடுகள் வந்து செல்லும். ஒரு சிலருக்கு உங்கள் வாழ்க்கைத் துணைவரின் பேச்சைக் கேட்டு தனிக்குடித்தனம் போக எத்தனிப்பார்கள். ஆகவே தகுந்த முன்யோசனை தேவை. 

உங்கள் மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆகிய இரண்டு கிரகங்களின் பார்வை பலம் விழுகிறது. ஆகவே மாங்கல்யத்திற்கு எவ்வித குறையும் இருக்காது. 

அதேபோல் உங்கள் சத்ரு ஸ்தானத்தை பொருத்தவரை நீங்களாக ஏற்படுத்திக்கொள்ளும் பகைவர்களை தவிர மற்றபடி வேறு யாரும் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவும். உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை சுப பலன்கள் நடப்பதற்கு சற்று காலம் ஆகும். தந்தையாரின் ஆயுள் நிலை நன்றாகவே இருக்கும். ஆனால் தந்தை-மக்கள் உறவுமுறை சீராக இருக்காது. ஏதாவது ஒருவிதத்தில் மனப்பாகுபாடு வந்து செல்லும். இதை பெரிதாக்க வேண்டாம். நீங்கள் உங்களை திருத்திக் கொண்டாலே போதும். 

உங்களது கல்வி ஸ்தானமானது பல இடையூறுகளுக்கு மத்தியில் சிறந்து விளங்க இருக்கின்றது. ஆகவே தங்களின் கவனத்தை கல்வியில் மட்டும் செலுத்தவும். புற சூழ்நிலைகளுக்கு அடிமையாக வேண்டாம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்களது ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவானின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே விவசாயத்துறையினருக்கு விளைச்சல் அமோகமாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் விலகுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு ஊக்கத்தொகை கிடைத்தலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கடினமான வேலை வாய்ப்புகளும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். ஆகவே பொருளாதாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பணம் எனும் மாய விளையாட்டுக்கு அடிமையாகக்கூடிய சூழ்நிலை உண்டு. நம் கண்ணுக்குத்தெரியும் தூரம் வரை பச்சை பசேலென்று இருக்கும். நெருங்கிப் பார்த்தால் தான் அது தரிசுபூமி என்று தெரியும். ஆகவே கண்ணால் காண்பதையும்¸ காதால் கேட்பதையும் நம்பாமல் தன்னுடைய நிலை என்னவென்று அறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும்.

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தில் குருபகவான் பார்வை விழுந்துள்ளது. எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் குரு பார்வையால் அது நீங்கிவிடும் தன்மை உண்டு. அர்த்தாஷ்டம குரு காலமாக இருந்தாலும் கூட குருவால் ஏற்படும் பாதிப்புகளை நிச்சயம் குருவே தீர்த்து வைத்து விடுவார் என்ற நம்பிக்கையை வைக்கவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி குருபகவானின் அதிதேவதையான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கிவர தடங்கல்கள் அனைத்தும் தீரும். நல்லதே நடக்கும்.

பரிகாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ திருநாகேஸ்வரம்¸ காளஹஸ்தியில் உள்ள ராகுபகவானை வழிபடுவதும்¸ நூல்களில் குரு கவசத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குவதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸1¸9 

அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள்நிற கனகபுஷ்பராகம் 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸பொன்நிறம்¸ இளம் சிவப்பு¸ வெளிர்நீலம்¸ வயலட். பரீகார யந்திரங்கள் : தனுசு ராசி யந்திரம். ஸ்ரீகுரு யந்திரம்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

மந்தனுக்கு மாண்பு செய்ய வந்த மகர ராசி நேயர்களே! நீங்கள் கடல் வற்றினாலும் கவலைப்பட மாட்டீர்கள். உழைத்து அதன் மூலம் சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர். சுமாரான அழகு. அதிகமான பேச்சு உடையவர்கள். தனிமையில் இனிமை காண்பவர்கள். குடும்ப பாசம் உண்டு. நல்ல பேச்சாற்றல்¸ பலவீனமான கல்வி உங்களுக்கு உண்டு¸ தொழிலில் சாதனை படைக்க வந்த மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 5¸11இல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 4¸10 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் 13- 14.4.2022 முதல் 3மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 7¸9¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 1ல் அமர்ந்து 3¸7¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடத்தில் எத்தகைய பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!

உங்கள் உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு உங்கள் ராசி அதிபதி சனிபகவான் அமர்ந்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். தற்சமயம் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி காலமாகும். சனிபகவான் 2023 மார்ச் மாதம் முதல் பாதச் சனியாக மாற இருக்கின்றார். அதுவரை உங்கள் உடல்நிலையில் மந்தத் தன்மையும்¸ தெளிவில்லாத முடிவுகளையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் அசதி¸ மனச்சோர்வு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

உங்கள் தன ஸ்தானத்தை பொருத்தவரை பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அதே சமயம் குருவின் பார்வை பலத்தால் நல்ல பொருளாதாரம் என்பது நிச்சயம் கிடைக்கும். அதை சரிவர பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை யாரிடமும் எதற்காகவும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். இதுவே வரக்கூடிய வருடத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது குடும்பத்தை பொருத்தவரை மனைவி சொல்லே மந்திரம் என்று கேட்டு நடக்கவும். இந்த சூழ்நிலையில் வர இருக்கும் செயல்களை அவர்கள் மனது வைத்தால்தான் செய்து முடிக்க முடியும். தைரியமாக இருக்கவும். 

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

உங்கள் தைரிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்கள் மன தைரியம் என்பது அடுத்தவங்களுக்கு பிரயோஜனமாக இருக்குமே தவிர உங்களுக்கு எள்ளளவும் பயன்படாது. ஆகவே மனதைரியத்தை கூட்ட நீங்கள் உங்களைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும். உங்களது சகோதர பாவத்தை பொருத்தவரை முரண்பாடுகள் அதிகம் காணப்படும்.  அவர்கள் வழியில் மனச்சோர்வுகள்¸ மன சங்கடங்களும் பண ரீதியான பிரச்சனைகளும் ஏற்படும். அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது மிகவும் நல்லது. அதற்காக ஒரேயடியாக ஒதுக்க வேண்டாம். அவர்களின் ஆதரவு பிற்காலத்தில் நமக்கு தேவை என்பதை புரிந்து நடந்து கொள்ளவும்.

உங்களது சுக ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். உங்கள் தாயாரின் உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் உடல்நிலையில் ரத்தம்¸ சதை¸ நுண்ணுயிர் தொற்றுகளால் ஏதாவது பிணிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை நன்றாக இருக்காது. தாய்க்கும் உங்களுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை ராகு அமர்ந்திருப்பதால் புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும். உங்களது வண்டி¸ வாகன ஸ்தானமானது சற்று சிரமமான சூழ்நிலையில் இருப்பதால் இருப்பதை வைத்து பிழைப்பை நடத்திக் கொள்ள வேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும். 

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை எந்த ஒரு கிரகமும் பார்வையிடவில்லை. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக¸ ஆராதனைகளை செய்து புண்ணிய பலத்தைக் கூட்டி¸ பாவ பலத்தை குறைத்துக் கொள்ளவும். 

உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை குழந்தை பேறு இல்லாதவர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்களுடைய குழந்தைகளின் கல்விநிலை¸ உடல்நிலை சுமாராகவே இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

உங்கள் கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். ஒரு கடனை அடைக்க பிரிதொரு கடன் வாங்க வேண்டாம். இருப்பதை வைத்து வாழ்க்கையை நடத்த கற்றுக் கொள்ளவும். 

உங்களது ரோக ஸ்தானத்தை பொருத்தவரை வாதம் மற்றும் கபம் சம்பந்தப்பட்ட அமைப்புகளினால் பிணிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தினமும் காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தால் நோய்கள் கட்டுக்குள் வரும்.

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி மற்றும் குருவின் பார்வை பலம் கிடைத்துள்ளது. ஆகவே ஒருசிலருக்கு மிகுந்த பிரயத்தனத்தின் பேரில் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது சற்று சிரமமான காரியமே ஆகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தக்க பரிகாரங்களை செய்து தயாராக இருந்து கொள்ளவும். அடுத்த வருடம் தாலி பாக்கியம் நிச்சயம் ஏற்படும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றுவிட்டால் நடப்பது அனைத்தும் சுபமாகவே இருக்கும். 

மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை மாங்கல்ய பலம் தீர்க்கமாக உள்ளது. அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் சத்ரு பாவமானது சற்று பலம் வாய்ந்ததாக இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் பார்த்து பழகவும். உங்களைப் பொருத்தவரை யார் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களே உங்களை முதுகில் குத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவும். 

உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை தந்தையாரின் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். தந்தை-மக்கள் உறவுமுறை சீராகச் செல்லும். இவ்விடத்திற்கு குருபார்வை விழுவதால் தந்தை சார்ந்த சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் தீர்க்கப்படும். தந்தையாரை அனுசரித்துச் செல்லவும். 

உங்கள் கல்வி ஸ்தானமானது வலுவான நிலையில் இருப்பதால் விரும்பக் கூடிய படிப்புகளை தைரியமாக படிக்கலாம். அதற்கான யோகமும்¸ காலமும் நமக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

உங்களது ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். விவசாயத் துறையினருக்கு விளைச்சல் நிதானமாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடர்பாடுகள் ஏற்படுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு மூலதன பற்றாக்குறையும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும். 

உங்கள் லாப ஸ்தானத்திற்கு குருபகவானின் பரிபூரண அருள் கிடைத்துள்ளதால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் தனவரவு என்பது நாம் நினைத்த நேரத்திற்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அதற்காக அதிக அளவு ஆசைகளை வளர்க்க வேண்டாம். நமக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் ஸ்திர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும். 2023 முதல் உங்களுக்கு பாதச்சனி காலம் ஆரம்பிக்க உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை பெரிய கிரகங்கள் யாவும் சாதகமான சூழ்நிலையில் இல்லை.ஆனால் குரு பார்வை பலம் மட்டுமே உங்களுக்கு பெரிய யோகத்தை கொடுக்கும். ஆகவே வாழ்க்கையில் எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். நின்று நிதானித்து எந்த முடிவுகளையும் எடுக்கவும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரித்து உங்கள் வாழ்க்கையை நடத்தவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி சனிபகவானின் அதிதேவதை ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்கிவர விக்னங்கள் தீர்ந்து விருப்பங்கள் நிறைவேறும். நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- விருச்சகம்¸தனுசு¸மகரம் ராசிக்கான பலன்கள்

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்களில் உள்ள ராகு கேதுக்களை வழிபட்டு வருவதும்¸ திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களிலுள்ள குருவுக்கு பிரீதி செய்வதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை. செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திரதானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிகார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6¸5.

அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல்

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நீலம்¸ மஞ்சள்¸ பொன்னிறம்.

பரிகார யந்திரங்கள் : மகர ராசி யந்திரம்.

(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )
See also  அரக்கனை மிதித்து குஞ்சிதபாதத்தோடு நடராஜர் ஆனந்த நடனம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!