Homeஅரசு அறிவிப்புகள்கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையா?

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையா?

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் பெறுவது எப்படி? என கலெக்டர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in  இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1¸665 மனுக்கள் பெறப்பட்டு 1¸366 இனங்களுக்கு ரூ.50¸000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  மேலும்¸ 115 மனுக்கள் “இருமுறை பெறப்பட்ட மனு” என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.  இந்நிலையில்¸ மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழக்கு எண் .I.A.No.40111/2022 in M. A. No. 1805/2021in W.P No.539/2021 நாள்:20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பின் விவரம் கீழ்கண்டவாறு.

1.    20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

2. 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

3. சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தபட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வுகாண வேண்டும்.

4. மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.  இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையா?

எனவே¸ கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி¸ உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

See also  செங்கல் சூளைகளுக்கு ரூ.60 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!