Homeசெய்திகள்ஜெயிலில் அடைக்கப்பட்ட பேராசிரியரின் தந்தை திடீர் சாவு

ஜெயிலில் அடைக்கப்பட்ட பேராசிரியரின் தந்தை திடீர் சாவு

ஜெயிலில் அடைக்கப்பட்ட பேராசிரியரின் தந்தை திடீர் சாவு

கள்ளச்சாராய வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பேராசிரியரின் தந்தையை அடித்துக் கொன்று விட்டதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கன்னி அருகே உள்ளது தட்டரணை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் தங்கமணி (வயது 48). இவருக்கு 2 மகன்¸ 1மகள் உள்ளனர். மூத்த மகன் தினகரன்¸ திருவண்ணாமலை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகள் நர்சாக உள்ளார்.

தங்கமணி மீது கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.  

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி மாலை அந்த கிராமத்துக்கு சென்ற திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார்¸ சாராய வழக்கில் கைது செய்வதாக கூறி தங்கமணியை அழைத்து வந்துள்ளனர். பிறகு வழக்கு பதிவு செய்து அவரை திருவண்ணாமலை சப்-ஜெயிலில் அடைத்தனர். தங்கமணியை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தார்கள். 

இதற்கிடையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட தங்கமணிக்கு நேற்று 27ந் தேதி வலிப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தங்கமணி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அன்று மாலை மீண்டும் அவருக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட பேராசிரியரின் தந்தை திடீர் சாவு

இந்த தகவல் கிடைத்ததும் அவரது பிள்ளைகளும்¸ உறவினர்களும் , கிராம மக்களும் இன்று காலை  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அங்கேயே தரையில் புரண்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பேராசிரியர் தினகரன்

இது சம்பந்தமாக தங்கமணியின் மகன் பேராசிரியர் தினகரன் செய்தியாளரிடம் கூறுகையில் தனது தந்தை மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்றும்¸ அவரை குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க போலீசார் ரூ 2 லட்சம் வரை தங்களிடம் கேட்டதாகவும்¸ அந்த பணத்தை தர மறுத்ததால் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்ததாகவும் கூறினார். ஜெயிலில் தனது தந்தையை அடித்துக் கொன்று விட்டதாக தெரிவித்த அவர் தனது தந்தை இறப்புக்கு நீதி கேட்டு மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிராம மக்களின் போராட்டத்தை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!