Homeஅரசு அறிவிப்புகள்சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

திருவண்ணாமலையில் அரசு சார்பில் நடத்தப்படும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க 13ந் தேதி கடைசி நாளாகும். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸  

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் (Sub Inspector ) பணியிடங்களுக்கான போட்டி தேர்வு ஜுன் 2022-ஆம் மாதத்தில் நடைபெற உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண்,  திருநங்கைகள் இத்தேர்வை எழுதலாம். 

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 18.04.2022 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள்¸ புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் வரும் 13.04.2022-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண்ணில் 04175-233381-ல் தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தெரிவித்துள்ளார்.    

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!