Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி

கும்பம்¸  மீனம்  ராசிக்கான பலன்கள் – பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர்.  இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார்

2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்
திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200
2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

கோபுரத்திற்கு மதிப்பே அதன்மேல் உள்ள கும்பங்களே! அத்தகைய கும்பத்தை அடையாளமாக கொண்ட கும்பராசி நேயர்களே! நடுத்தரமான வட்ட வடிவமான முகஅமைப்பு¸ பருத்த உருவம்¸ வசீகரம்¸ தர்ம சிந்தனை¸ வெற்றி தோல்விகளை சமமாக கருதும் தன்மை¸ எடுத்த காரியத்தில் சாதிக்கும் திறமை¸ பிறருக்கு உதவி செய்வதில் சுயநல பாங்கு¸ பல யுக்திகளை கையாண்டு வெற்றி அடைய கூடிய கும்பராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4¸10இல் சஞ்சரித்த ராகு கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 3¸9 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் 2மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 6¸8¸10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 12ல் அமர்ந்து 2¸6¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம். வாருங்கள்!

உங்கள் உடல்நலத்தை பொருத்தவரை இங்கு இருந்த குருபகவான் விலகி அடுத்த ராசிக்கு பெயர்ந்து விட்டார். ஆகவே மனதில் குடிகொண்டிருந்த சஞ்சலம் மற்றும் சங்கடங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துவிட்டது என்றே கூற முடியும். உடம்பில் தெம்பும் மனதில் தைரியமும் கைகூடும்.

உங்கள் தன ஸ்தானத்தைப் பொருத்தவரை இவ்விடத்தில் அமர்ந்த குருபகவான் தாராள பணவரவை ஏற்படுத்துவார். ஆகவே இந்த வருடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் பொருளாதார ரீதியாக கச்சிதமாக காய் நகர்த்தவும்.

உங்கள் வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் பேசும் பேச்சு வேதவாக்காக வெளியில் வரும். அதுபோக உங்கள் சொல்லுக்கு இப்போது மதிப்பும் மரியாதையும் கூடும் காலமாகும். குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகி சந்தோசங்கள் தாண்டவம் ஆடும்.

உங்கள் தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை மூன்றில் ராகு அமர்வது மிகுந்த நல்ல பலன்களை தரும்.ஏதோ ஒரு குருட்டு தைரியம் உங்கள் உடம்பில் புகுந்துகொள்ளும். அதேசமயம் எச்சரிக்கையும் தேவை. ராகு கொடுப்பது போல் கொடுத்து எடுத்தும் விடுவார். உங்கள் சகோதர பாவமானது நல்ல சூழ்நிலையில் உள்ளதால் அவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நல்ல விதமான பரிமாற்றங்கள் நடைபெறக்கூடிய காலமாகும். அவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது.

உங்களது சுக ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் தாயின் ஆயுள் பாவம் மிக நன்றாக இருக்கும். தாய்க்கும் உங்களுக்கும் நடுவில் சில பனிப்போர் ஏற்படும் காலமாகும். உங்களால் அவர் மனதையும் அவரால் உங்கள் மனதையும் புரிந்துகொள்ள முடியாது. தாய்க்கு வயிறு¸ மறைவிட உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட வகையில் நோய் தாக்குதல் ஏற்படும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. உங்களது வீடு¸ மனையானது விருத்தி பெறக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால் புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். அதேசமயம் 9ல் இருக்கும் கேதுபகவான் சில இடையூறுகளை எழுத்துபூர்வமாக ஏற்படுத்துவார். எச்சரிக்கையுடன் பார்த்து செய்யவும்.

உங்களது வண்டி¸ வாகன ஸ்தானம் ஆனது பரிபூரண நிலையில் இருப்பதால் வாகன தொழில் சிறப்பு பெறும் காலமாகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை பலம் மிகுந்து காணப்படுவதால் எந்த ஒரு பிரச்சனையும் நீங்கள் செய்யும் குலதெய்வ வழிபாட்டால் பலமிழந்து போகும். நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் காலமாகும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்தபரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்விநிலை¸ உடல்நிலை திருப்திகரமாக உள்ளது.

உங்களது கடன் ஸ்தானத்திற்கு குருபார்வையும்¸ சனி பார்வையும் சேர்ந்தே விழுகின்றது. ஆகவே ஒருபுறம் கடன்கள் கட்டுக்குள் வந்தாலும்¸ மறுபுறம் பிரிதொரு கடன் முளைக்க ஆரம்பிக்கும். சமயோஜித புத்தி கொண்டு நிர்வாகிக்கவும். உங்களது¸ ரோக ஸ்தானத்தை பொருத்தவரை நீர் சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும்¸ நரம்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும் பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும்.

See also  கொட்டும் மழையில் விடிய, விடிய தேரோட்டம்

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை 2ல் குரு இருப்பதால் குருபலம் மிகுந்த நேரம் ஆகும். ஆகவே திருமணங்களை தடபுடலாக நடத்திக் கொள்ள முடியும். ஜாதகத்தில் களத்திர தோசம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலமாக திருமண பிராப்தியை தக்க வைத்துக் கொள்ள முடியும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையப்படும் காலமாகும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் நேரமாகும்.

உங்களது மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவானின் சப்தம பார்வை விழுவதால் மாங்கல்ய பலம் அதிகமாகும். உங்களது சத்ரு பாவமானது பலமாகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் எதிரிகள் உங்களுடன். இணைந்தே காணப்படுவார்கள். அவர்களை இனம்கண்டு புறம் தள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களால் நீங்கள் மாட்டிக்கொள்ள நேரிடும்.

உங்களது பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். ஆகவே உங்கள் தந்தையார் உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அவருக்கு சூடு மற்றும் விஷ ஜுரம் போன்றவைகளால் ஏதாவது பிணி¸ பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தைக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகும். அவர் சார்ந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உங்கள் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை மந்தநிலை தென்படுகிறது. ஆகவே அகத்திலும்¸ புறத்திலும் உங்களது மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனத்தை செலுத்தி வந்தால் கல்வி ஸ்தானம் உயரும். ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை தொழுதுவர நல்லதே நடக்கும்.

உங்களின் ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவான் பார்வை இவ்விடத்திற்கு விழுந்துள்ளது. விவசாயத்துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தநிலை நீங்குவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இணக்கமான சூழ்நிலையும்¸ சுயதொழில் புரிவோருக்கு சூழ்நிலை சாதகமாகவும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கொடுத்தலும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை குரு மற்றும் ராகு கிரகங்கள் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். லாபம் என்பது பணத்தில் மட்டும் கிடையாது. வாழ்க்கையில் நிம்மதி என்பதும் ஒருவிதமான லாபமே ஆகும். பணத்தேவைகள் உறுதி செய்யப்பட்டாலும் எதையோ இழந்தது போன்ற ஒரு சூழ்நிலையும் தொடரும்.

உங்களது அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்து விரயச்சனியாக உள்ளார். ஆகவே உங்களிடம் இருக்கும் முதலீட்டை ஏதாவது சொத்துக்கள் அல்லது நிலையான முதலீடுகளில் முதலீடு செய்யவும் கையில் காசு வைத்திருந்தால் தண்டச் செலவுகள் உருவாகும். அடுத்து வரக்கூடிய ஜென்மச்சனி காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்தும் சேமிப்பு உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி சனிபகவானின் அருள் தேவதையான ஸ்ரீஅனுமனை வணங்கிவர ஆனந்தம் பொங்கிவரும். நல்லதே நடக்கும்.

பரிகாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரி குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளம் ஊர்களிலுள்ள கேதுபகவானுக்கு பரிகாரம் செய்வதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ கால்நடை மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6¸

அதிர்ஷ்ட ராசிக்கல் : நீலக்கல்

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்¸ வெளிர்நிலம்¸ பொன்னிறம்¸ மஞ்சள்.

பரிகார யந்திரங்கள் : கும்ப ராசி யந்திரம். ஸ்ரீஅனுமன் யந்திரம்.

 

2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் வசிக்கும் சமுத்திர ராஜனின் அடையாளமான மீனின் அடையாளம் கொண்ட மீன ராசி நேயர்களே! நீண்டு நெடிய தேகம் கொண்ட நீதி¸ நேர்மை தவறாத¸ சாஸ்திர சம்பிரதாயங்களில் விருப்பம் கொண்ட¸ மதப்பற்று அதிகம் உள்ள¸ உழைப்பை நம்பிய¸ பெண்ணாசை கொண்ட¸ உறவினர்கள் மீது அதிக பாசம் கொண்ட¸ தியாக மனப்பான்மை கொண்ட மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3¸9இல் சஞ்சரித்த ராகு கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 2¸8 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13-14.4.2022 முதல் ஜென்ம ராசிக்கு பெயர்ந்து அங்கிருந்து அவர் 5¸7¸9 ஆகிய இடங்களை பார்வையிடுகின்றார். சனிபகவான் 11ல் அமர்ந்து 1¸5¸8 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

See also  ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 8 கோயில் கும்பாபிஷேகம்

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசியில் குருபகவான் அமர சனி பகவான் பார்வையிடுகிறார். ஆகவே உங்கள் உடல் நிலையில் மனரீதியான சில கலக்கங்கள் ஏற்படும் காலமாகும். மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டால் உடல்நிலையும் பாதிக்கும் என்பதால் சற்று எச்சரிக்கை தேவை.

உங்களது தனஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்து இருப்பது பொருளாதாரத்தில் சற்று தேக்க நிலையை ஏற்படுத்தும். ஆகவே பணவிஷயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்கவும். இல்லையெனில் அடுத்து வரும் ஏழரைச் சனியில் ஏற்படும் பண ரீதியான தாக்கங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை வாயைக் கட்டி வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் வெளிவிடும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு எதிரியாக அமைவதால் வெளிவிடும் வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சில குழப்பங்கள் நிச்சயம் உருவாகும். இது ஜென்ம குருவால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகும். இது தற்காலிகம் தான். நிலையானது கிடையாது.

உங்கள் தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை மன தைரியம் என்பது கானல் நீர் போல் உள்ளது. ஆகவே தைரியம் கைகூட ஸ்ரீசுப்பிரமணியரை அனுதினமும் ஆராதித்து வரவும். உங்கள் சகோதர பாவமானது பலமிழந்த சூழ்நிலையில் உள்ளது. அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உண்டு. தேவையற்ற வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வதந்தியாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அவர்களை அனுசரித்து செல்ல பழகிக் கொள்ளவும் இருக்கும்.

உங்களின் சுகஸ்தானத்தை பொருத்தவரை இங்கு எவ்வித கிரக பார்வையும் விழவில்லை. ஆகவே உங்கள் தாயாரின் ஆயுளுக்கு எவ்வித பங்கமும் கிடையாது. தாய்-மக்கள் உறவுமுறை சீராக இருக்கும். தாயாரால் சில பேர் ஆதாயமடைவார்கள். அதே சமயம் அவர்களுக்கு மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். தகுந்த கவனம் தேவை. உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக்கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு இடமாற்றம்¸ வீடு மாற்றம் ஏற்படலாம். புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு ஏற்ற காலம் அல்ல. வண்டி வாகன ஸ்தானத்தை பொருத்தவரை சுமாரான பலன்களே காணப்படும். வாகன தொழிலால் பெரிய லாபங்களை எதிர்பார்க்க இயலாது.

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை கலந்தே விழுகின்றது. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் வளம் பெற முடியும். உங்களது புத்திர பாக்கியத்தை பொருத்தவரை குருபகவான் அருளால் புத்திரப் பிராப்தி ஏற்படும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் உடன் வரும். ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் கல்விநிலை¸ உடல்நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல்படவும்.

உங்கள் கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் கட்டுக்குள் வரக்கூடிய நேரமாக இருந்தாலும் பணவிஷயத்தில் ஜாக்கிரதை தேவை. கொடுக்கல்¸ வாங்கல்களில் தகுந்த முன்னெச்சரிக்கை தேவை. இல்லையெனில் பண ரீதியாக உறவுகளிடம் பகை ஏற்படும்.

உங்களது ரோக ஸ்தானத்தை பொருத்தவரை உடல்நிலையில் சொரி¸ சிரங்கு மற்றும் தோல் நோய்கள் ஏற்படும். மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உண்டு. தகுந்த மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்களின் திருமண ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு குருபலம் இல்லை என்றாலும் குருவின் பார்வை பலத்தால் சிலருக்கு திருமண யோகம் ஏற்படும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்துகொள்ளவும். திருமணமான தம்பதியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உருவாகும். “ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்” என்ற கவிக்கேற்ப கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் வேலை நிமித்தமாகவோ அல்லது மனக்கசப்புகள் மூலமாகவோ பிரியும் சூழ்நிலை இந்த நிலை ஒரு வருட காலத்திற்கு உண்டு. எச்சரிக்கையுடன் செயல்படவும்.

உங்களது மாங்கல்ய ஸ்தானத்தில் கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். ஆகவே மாங்கல்ய ஸ்தானம் சற்று பலம் குறைந்துள்ளது. குலதெய்வத்தை வழிபட்டுவர இந்த குறைகளை தீர்க்க முடியும். உங்கள் சத்ரு பாவமானது வீட்டிற்கு வெளியில் இருப்பவர்களால் எதுவும் ஏற்படாது. ஆனால் உடன் இருப்பவர்களால் ஏதாவது வில்லங்கம் ஏற்படும். ஆகவே உறவுகளிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை.

See also  12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் தனது பரிபூரண பார்வையை செலுத்துவதால் தகப்பனாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தந்தைக்கும் உங்களுக்கும் நடுவில் ஒற்றுமை ஓங்கும். தந்தையாரின் சொத்துக்கள் நல்ல நிலையில் பிரித்துக் கொடுக்கப்படும்.

2022 குருபெயர்ச்சி- கும்பம்¸ மீனம் ராசிக்கான பலன்கள்

உங்கள் கல்வி ஸ்தானமானது வலுவான சூழ்நிலையில் உள்ளதால் தடைபட்டிருந்த கல்வியை தொடர முடியும். ஒரு சிலருக்கு வெளிதேச வாசமோ¸ உயர் படிப்புகளோ கல்வியின் மூலம் ஏற்படும்¸ நல்ல பலம் உள்ள இடமாகும்.

உங்களது தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத்துறையினருக்கு விளைச்சல் அமோகமாகவும்¸ மருத்துவத்துறையினருக்கு மாற்றங்கள் ஏற்படுவதும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஏற்றமான காலமாகவும்¸ சுயதொழில் புரிவோருக்கு சூழ்நிலை சாதகமாகவும்¸ கலை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கையில் காசு நிற்பதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு தேவையான இடமாற்றமும்¸ வேலை இல்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை சனிபகவான் அமர்ந்துள்ளார். இவர் இங்கு இருக்கும் வரை லாபத்திற்கு குறைவிருக்காது. ஆகவே நீங்கள் குடும்பம் எனும் வண்டியை நிம்மதியாக ஓட்ட முடியும். அதேசமயம் பணவிஷயத்தில் கறாராக நடந்து கொள்ளவும். இல்லையெனில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட நேரிடும்.

உங்களது அயன¸ சயன ஸ்தானத்தை பொருத்தவரை சனி ஒருவரே உங்களுக்கு சாதகமாக உள்ளார். அடுத்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம் கூடிய காலமாகும். இந்த வருடம் குரு பார்வையால் சில சங்கடங்கள் தவிர்க்கப்படும். உங்கள் மனநிலையை தீர்க்கமாக வைத்துக்கொள்ளவும். எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி குருபகவானின் அதிதேவதையான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வர தடங்கல்கள் விலகி நல்வழி பிறக்கும். நல்லதே நடக்கும்.

பரிகாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலம் ஊர்களிலுள்ள குருபகவானுக்கு ஆராதனை செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் ஊர்களிலுள்ள ராகு கேதுக்களை வழிபட்டு வருவதும்¸ நூல்களில் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம்¸ அன்னதானம் வழங்குவதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸2¸9.

அதிர்ஷ்ட நீறம் : மஞ்சள்¸ பொன்னிறம்¸ இளம்சிவப்பு¸ வயலட்

அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் கனகபுஷ்பராகம்

பரிகார யந்திரங்கள் : மீன ராசி யந்திரம்¸ ஸ்ரீகுருபகவான் யந்திரம்.

பிரமீடு வடிவிலான அற்புத இராசி பரிஹார திருக்கோயில்

ஜோதிடம் மற்றும் யந்திரங்கள் சம்பந்தமான துறையில் சேவைகளை செய்து கொண்டிருக்கிறோம். இந்த 20 வருடங்களில் நாங்கள் சந்தித்த பொதுமக்களின் பிரச்சினைகளை அனுபவரீதியாக ஓரளவு தீர்த்து வைத்துள்ளோம். ஆனால் பல நபர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிவதில்லை. காரணம் என்னவெனில் உரிய காலத்தில் செய்யாத பரிஹாரங்கள் ஜோதிடர்கள் கூறிய முறையில் நாங்கள் பரிஹாரம் செய்தோம், ஆனால் பிரச்சினைகள் தீரவில்லை என்று கூறுகிறார்கள். இன்று பணம் என்ற ஒன்று நம்மை கட்டுக்குள் வைத்துள்ளது. பணம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பரிஹாரம் செய்பவர்களும், பரிஹாரம் செய்து வைப்பவர்களும் மேற்கூறிய சூழலில் அகப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனைத் தவிர்க்க நியாயமான முறையில் சரியான பரிஹாரம் செய்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 9 வருடங்களாக ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு இராசிக்கும் பிரமீடு வடிவிலான கோவில் அமைத்து அதில் ஒரு நாழிகை நேரம் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்து வந்தால் பிரச்சினைகளின் தீவிரம் குறைகிறது என்பதை கண்டறிந்தோம். புண்ணியம் தேட கடந்த குருப்பெயர்ச்சி பரிஹார ஹோமத்தின்போது இந்த கருத்தை தெரிவித்து பக்தர்களின் அனுமதியை கேட்டோம். அனைவரும் ஒருமித்த மனதுடன் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி ஒரு சதுரஅடி ரூ.500 என்ற வகையில் தாங்கள் கொடையாக வழங்கி இந்த புண்ணிய காரியத்தில் தாங்கள் குடும்பம் மற்றும் வாரிசுகளுக்கு புண்ணியம் தேட அழைக்கின்றோம்.  இதில் நம்பிக்கையுடையவர்கள் மட்டும் இணைந்து கொள்ளலாம். யாரையும் நிர்பந்தப்படுத்தவில்லை. இராமபிரானுக்கு அணில் தன்னால் முடிந்த உதவியை செய்தது போல புண்ணிய தங்களால் முடிந்த கொடையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு 94438 11200 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

– கே.வி.ரெகுநாதன் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!