Homeசெய்திகள்வங்கி மேலாளர் தற்கொலையில் விலகாத மர்ம முடிச்சுகள்

வங்கி மேலாளர் தற்கொலையில் விலகாத மர்ம முடிச்சுகள்

வங்கி மேலாளர் தற்கொலையில் விலகாத மர்ம முடிச்சுகள்

திருவண்ணாமலை அர்பன் வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை பேகோபுரம் 6வது தெருவில் வசித்து வந்தவர் சத்தியநாராயணமூர்த்தி (வயது 50). திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள அர்பன் (நகர்புற கூட்டுறவு) வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகன் பி.இ. பட்டதாரி. மகள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.படித்து வருகிறார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென  வீட்டிலிருந்து வெளியில் சென்ற சத்திய நாராயண மூர்த்தி திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளத்தில் பிணமாக மிதந்தார். அதிகாலையில் சன்னியாசிகள் சிலர் அந்த குளத்திற்கு குளிக்க சென்ற போது சடலம் மிதப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குளத்தில் பிணமாக மிதந்ததவர் சத்திய நாராயண மூர்த்தி என்பதை கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாலை வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் சத்யநாராயண மூர்த்தியின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் சத்யநாராயண மூர்த்தி பிணமாக மிதக்கும் தகவல் கிடைத்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

வங்கி மேலாளர் தற்கொலையில் விலகாத மர்ம முடிச்சுகள்

தீயணைப்பு வீரர்கள் மூலம் குளத்தில் மிதந்த சத்திய நாராயண மூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சத்தியநாராயண மூர்த்தியை யாரோ கொலை செய்து உடலை குளத்தில் வீசி விட்டு சென்றிருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து குளத்திற்கு அருகாமையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அந்த குளத்துக்கு அருகில் சத்திய நாராயண மூர்த்தி நின்றிருப்பது, குளத்தில் குதிப்பது போன்ற சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. தற்கொலை செய்து கொண்ட சத்ய நாராயண மூர்த்திக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் அவரது தற்கொலைக்கு சரியான காரணம் தெரியாமல் உள்ளது.  

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய நாராயணமூர்த்தியின் தற்கொலைக்கு கந்து வட்டி கொடுமை காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி மேலாளர், குளத்தில் சடலாக மிதந்தது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!