பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

Date:

திருவண்ணாமலைக்கு 300 சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

ஐம்பெரும் பூதத்தலங்களுள் நடுநாயகமாக விளங்கும் திருத்தலம் திருவண்ணாமலையாகும். நினைக்க முத்தி, சித்தி தரும் இத்தலத்தில் பத்தியுடன் பணிவார்க்கு நித்திய நற்பேறு தரும். ஞானத்திரளாய் நின்று நல்ல அன்பர்களுடைய ஊனத் திரளை நீக்கும் பரம்பொருளாகிய அண்ணாமலைப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

படைப்புக் காலந்தொட்டுச் சிறப்புற்று விளங்கும் இந்த புனித தலத்திற்கு எண்ணில்லாத ஞானத் தபோதனர்கள் வந்திருக்கின்றனர். இன்றும் நாடி வருகின்றனர். ‘சோணாசலத்தின் மிக்க புண்ணிய ஸ்தலமில்லை, சோமவாரத்தின் மிக்க விரதமில்லை’ என்னும் பழமொழியும் திருவண்ணாமலையை பற்றியே எழுந்துள்ளது.

விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பது வரலாறாகும். திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைந்தால் பாவங்கள் தீரும், வேண்டுதல் நிறைவேறும் என்பதை நம்பிக்கையாக கொண்டு பவுர்ணமி, மகாதீப நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை தலத்தை நாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். திருவண்ணாமலை பகுதியிலிருந்து திருப்பதிக்குத் தான் பெரும்பான்மையான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக சிவனடியார்கள் திருவண்ணாமலைக்கு புரட்டாசி மாத பிறப்பன்று பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பன்று, திண்டிவனத்தில் ஒன்று கூடிய 300 சிவனடியார்கள், திந்திரிணீஸ்வரர் கோயில் முன்பிருந்து பாதயாத்திரையை தொடங்கினார்கள். 69 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்த அவர்களுக்கு வழியில் பொதுமக்கள், குடிதண்ணீர், உணவு வழங்கி உபசரித்தனர். வழி நெடுகிலும் சிவனடியார்கள், திருமுறைகளை ஓதியபடி வந்தனர்.

நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்த அவர்கள், மண்டபத்தில் காத்திருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இது குறித்து சிவனடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்களுடன் வந்த சிவனடியார்களுக்கு பலவித வேண்டுதல்கள் இருக்கும். ஆனால் எங்களுடைய பொதுவான நோக்கம் சைவத்தை வளர்ப்பது ஆகும். இதற்காகத்தான் திருமுறைகளை ஓதியபடியும், அதனுடைய பொருள்களை விளக்கியபடியும், 63 நாயன்மார்கள் வழியில் நடக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தியும் 16வது ஆண்டாக பாதயாத்திரையாக வந்திருக்கிறோம் என்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிடிஓ உள்பட 24 அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு

பிடிஓ உள்பட 24 அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு விஜிலென்ஸ் அதிரடி...

பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த “இந்தியன்”

இந்தியன் என்ற வாலிபர் பார்ட் டைம் ஜாப் என்பதை நம்பி ரூ.6...

உணவு,தங்குமிடம்,ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம்ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப்...

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பு ஆரணி தாசில்தார் மஞ்சுளா,...

புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு

புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும்...

திருவண்ணாமலை தீ விபத்து- சேதம் ரூ.2 கோடி

திருவண்ணாமலை தீ விபத்து- சேதம் ரூ.2 கோடி பாஜக பிரமுகர் கடையில் இருந்த...
error: Content is protected !!