Homeஅரசு அறிவிப்புகள்பரணி, மகாதீப டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறும் முறை

பரணி, மகாதீப டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறும் முறை

பரணி, மகாதீப டிக்கெட்டுகள் ஆன்லைனில் 4ந் தேதி முதல் பதிவு செய்யப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

பரணி, மகாதீப டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறும் முறை

ஆதார் அட்டை அவசியம்

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா நாளான 06.12.2022 அன்று காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம்காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும்  https://annamalaiyar.hrce.tn.gov.in   என்ற திருக்கோயில் இணையதள வழியாக பின் வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 4.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

கட்டணச் சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கட்டணச் சீட்டுபதிவு செய்தவுடன், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண்
OTP  குறுஞ் செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணிற்கு வரும்.
கட்டணச் சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக
கட்டணச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அம்மணி அம்மன் கோபுரம்

ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6.12.2022 அன்று அதிகாலை 2 மணிமுதல் 3 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி, மகாதீப டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறும் முறை

ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகாதீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 6.12.2022 அன்று மாலை 2.30 முதல் 3.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காண வரும் பக்தர்கள் அசல் கட்டணச் சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இத்திருக்கோயில் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.

Online வழியாக கட்டணச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகை தர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலுக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிற ஏற்பாடுகள் :

பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக Toll Free No. 1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருக்கோயில்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள QR Code பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை Online மூலம் செலுத்தி அருள்மிகு அண்ணாமலையார் அருள் பெற வேண்டுகிறோம்.

மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை ராஜகோபுரம் (கிழக்குகோபுரம்) அருகில் உள்ள திட்டி வாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் நெய் குடத்திற்கான காணிக்கை கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!