Homeசெய்திகள்திருவண்ணாமலை: போலீஸ்காரர் விபத்தில் பலி

திருவண்ணாமலை: போலீஸ்காரர் விபத்தில் பலி

பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போலீஸ்காரர் விபத்தில் பலியானார்.

திருவண்ணாமலை: போலீஸ்காரர் விபத்தில் பலி
தேவா

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரைச் சேர்ந்தவர் தேவா(வயது 29). திருமணம் ஆகாதவர். தந்தை பெயர் தேசிங்கு.

தேவா, பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

திருவண்ணாமலையில் ஆயுதப்படை பிரிவுக்கு 2 நாட்கள் பணி நிமித்தமாக தேவா வந்திருந்தார். பணி முடிந்ததும் இன்று மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான களம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் வாகனத்திருந்து தூக்கியெறிப்பட்ட தேவா, படுகாயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தகவல் கிடைத்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆக வேண்டிய வயதில் தேவா, விபத்தில் இறந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!