திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரம செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்துள்ள குரு பெயர்ச்சி பலன்கள் வருமாறு,
நவக்கிரகங்களில் ஸ்ரீ குருபகவான் சுபக்கிரகம் ஆவார். வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான தனம் (பணம்) எனும் செல்வத்தை தருபவர். திருமணம், கல்வி, மாங்கல்யம், குழந்தை செல்வம், அறிவாற்றல், பொன் போன்றவற்றை தருபவர் ஸ்ரீ குருபகவானே. எப்படிப்பட்ட தோஷங்களையும், தடைகளையும் தன்னுடைய பலத்தாலும், பார்வையாலும் நிவர்த்தி செய்யும் சக்தி குருபகவானுக்கே உண்டு.
22-04-2023 சனிக்கிழமை, சித்திரை-09 ஆம் நன்னாளன்று இரவு 11-27 மணி அளவில் ஸ்ரீ குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள தண்டபாணி ஆசிரமத்தில் 22ந் தேதி 25ம் ஆண்டு வெள்ளி விழா குருபெயர்ச்சி யாகம் நடக்கிறது. அந்த ஆசிரமத்தின் செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் சீனிவாசன் கணித்துள்ள குரு பெயர்ச்சி பலன்கள் வருமாறு,
(இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்)
(மன சஞ்சலம் தரும் ஜென்ம குரு)
ஸ்ரீ குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தான் வருகிறார். ஜென்ம குருவால் மனசஞ்சலம், வீண் அலைச்சல், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.தொழிலில் போட்டியும், பின்னடைவும் ஏற்படும். மேலதிகாரிகளின் பகை விரும்பத்தகாத இடமாற்றம், எதிலும் டென்சன் ஏற்படும். கடன் தொல்லை, உடல் சோர்வு, தொலை தூர பயணம் ஏற்படும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். சனிபகவானின் சஞ்சாரம் தங்களுக்கு சாதகமாக உள்ளது. கவலை வேண்டாம். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(சுப செலவுகளை தரும் குரு)
12-ஆம் இடமான விரைய (செலவு) ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். விரைய குருவால் உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உங்கள் வீட்டில் திருமண வைபோகமோ, வீடு கட்டுதலோ, வாகனம் வாங்குதலோ போன்ற நல்ல காரியங்களுக்கு செலவுகள் செய்ய நேரிடும். அதே சமயம் தொழிலில் பின்னடைவு, கடன் வாங்குதல், எதிரிகளின் தொல்லை, நோயின் தொல்லை, மருத்துவ செலவு வீண் சண்டை சச்சரவு, கோர்ட்டு கேஸ் வம்பு வழக்கு போன்ற தீய பலன்களும் ஏற்படும். ஒருசிலர் வெளிநாடு செல்லக்கூடும். எது எப்படி இருந்தாலும் பணம் உங்கள் கையை விட்டு கரையும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரம் அல்லது ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.
(லாப குரு)
11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் தேவகுரு சஞ்சரிக்கிறார். தனக்காரனான குருபகவான் லாபம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் தனலாபம், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் வெற்றி, நல்ல லாபம் கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்குவீர்கள்.பதவி உயர்வு, சம்பளஉயர்வு ஏற்படும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதலில் வெற்றியும், திருமண யோகமும் அமையும். புத்திர சம்பத்து, வீடு மனை வாகன யோகம் அமையும். புகழ் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். கடன் அடைபடும். மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியில் பலவித லாபங்களுடன் நன்மைகளும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பன்மடங்கு பெறுகும்.
(பதவியை பறிக்கும் குரு)
பத்திலே குரு பதவியை பறிக்கும் என்ற ஜோதிட சொல்லுக்கு ஏற்ப தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்படும். தொழிலில் நஷ்டம், பின்னடைவு ஏற்படும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும். மொத்தத்தில் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணமுடக்கம், வீண் விரையம், வீடு, வாகனத்தால் செலவு, மருத்துவச் செலவு ஏற்படும். காதலில் தோல்வி, திருமணம் தள்ளி போகுதல் நடைபெறும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டி இருக்கும். பெண்களுக்கு அவப்பெயர் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவு வரும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(பாக்கியம் தரும் குரு)
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்து குரு என்பார்கள். இந்த ஒன்பதாமிடத்தில் குருபகவான் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கப் போகிறார். இந்த ஒரு வருடம் தங்களுக்கு பொற்காலமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம், லாபம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பொன், பொருள், வாகனம் சேரும். சிலர் வீடு மனை வாங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் கைகூடும். காதலில் வெற்றி, புத்திர சம்பத்து ஏற்படும். வேலையில்லாவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு, தெய்வ தரிசனம் கிடைக்கும். நோய் கட்டுக்குள் அடங்கி இருக்கும். இருப்பினும் தங்களுக்கு 7-ல் சனி பகவான் இருப்பதால் உடலில் சோர்வும், மன உலைச்சலும் அவ்வப்போது வரும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பல பெருகும்.
(தோல்வி, கஷ்டம் தரும் அஷ்டம குரு)
8-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது நல்லதல்ல. எதிலும் கவனம் தேவை. எடுத்த செயல் எல்லாம் தோல்வியில் முடியும். எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள். சோம்பல், தூக்கம், நோய் நொடி உங்களை ஆட்கொள்ளும். மனதை தளரவிடாதீர். உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்லமுடியும். தொழிலில் மட்டுமல்ல, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் இழுபறிதான். வீடு, வாகனம் என அனைத்திலும் வீண் செலவு ஏற்படும். உடல் நிலை கோளாரால் மருத்துவ செலவு ஏற்படும். கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். புதிய தொழிலுக்கு இப்போது ஏதும் முயற்சிக்க வேண்டாம். ஸ்ரீ சனிபகவானின் சஞ்சாரத்தால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். ஸ்ரீ நவக்கிரக எந்திரம் அல்லது ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(வெற்றி மேல் வெற்றி தரும் குரு)
7-ஆம் இடமான களத்திரம், கூட்டுத்தொழில், மக்கள் சக்தி, திருமணம், காமம் ஆகிய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார்.குருபகவானின் பார்வை உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது மிகவும் விசேஷமாகும். குருபகவானின் பார்வையில் அனைத்திலும் முன்னேற்றமும், வெற்றியும் உண்டாகும். குரு கூட்டுத் தொழில் சிறக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஏற்படும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். கணவன், மனைவி உறவு சிறக்கும். காதலில் வெற்றி உண்டாகும். திருமணம் கை கூடும். வீடு, வாகனம், பொன், பொருள், பணம் சேரும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். கோர்ட்டு கேஸ் உங்களுக்கு சாதகமாக முடியும். எல்லா முயற்சிகளும் வெற்றியை தரும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பெருகும்…
(கடன், எதிர்ப்பு, நோய் மற்றும் தோல்விகளை தரும் குரு)
6-ஆம் இடமான கடன், எதிர்ப்பு, நோய் ஆகிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்வது அவயோகத்தை தரும். எதிலும் எதிர்ப்பு ஏற்படும். கடன் தொல்லை, நோயின் தொல்லை, தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வரும். பணம் இழப்பு ஏற்படும். தொழிலில் பின்னடைவு, நஷ்டம் ஏற்படும். வீடு வாகனத்தால் செலவு, மருத்துவ செலவு, பிள்ளைகள் வகையில் செலவு என கையில் வைத்திருக்கும் காசை கரைத்துவிடும். புதிதாக கடன் வாங்க வேண்டி வரும். வேலை செய்யுமிடத்தில் பகை, எதிர்ப்பு உண்டாகும். அர்த்தாஷ்டம சனி பகவானால் மேலும் பல தொல்லைகள் ஏற்படும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
(அதிர்ஷ்டம் தரும் குரு)
தங்கள் ராசி நாதனான ஸ்ரீ குருபகவான் அதிர்ஷ்டம் தரும். 5-ஆம் இடத்திலிருந்து உங்களை பார்வையிடுகிறார். எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டலட்சுமி உங்களிடம் குடிக்கொள்வாள். பொன், பொருள், பணம், வீடு, வாகனம், மனை என சேரும். தொழிலில் நல்ல இலாபமும், வெற்றியும் கிடைக்கும்.சிலர் புதிதாக தொழில் துவங்க நேரிடும். கடன் அடைப்படும். கோர்டு கேஸ் வழக்குகளில் வெற்றி உண்டாகும். திருமணம் கைகூடும். காதலில் வெற்றி, குழந்தை பாக்கியம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேன்மேலும் பெருகும்.
(நடு நிலை தரும் குரு)
4-ஆம் இடமான வீடு, நிலம், மனை, வாகனம் ஆகிய சுகஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். 4-ஆம் இடம் குருபகவானுக்கு கோட்சாரப்படி ஏற்ற இடம் இல்லை என்றாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். அதே சமயம் நல்லதையும் செய்யமாட்டார். பண வரவில் மந்த நிலை, தொழிலில் மந்த நிலை என அனைத்து முயற்சிகளிலும் மந்தநிலை இருக்கும். வீடு, வாகனம், நிலம், மனை போன்றவற்றில் செலவுகள் ஏற்படும். ஒரு சிலர் இவற்றை விற்கவும் செய்வீர்கள். புதிய பொன் ஆபரணங்கள் வாங்குவது கடினம். திருமணம் தள்ளிப் போகும். தாயிடம் மனவேற்றுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு இழுபறியில் இருக்கும். தொலைதூர பயணம் ஏற்படும். 71/2 ஆண்டு பாத சனிபகவானின் தொல்லையும் இருக்கும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர மந்த நிலை நீங்கி சில நன்மைகள் நடக்கும்.
(தைரியம், சகோதரம், வீரிய ஸ்தானம்)
சகோதரம், வீரியம் ஆகிய ஸ்தானத்திற்கு குருபகவான் வருகிறார். 3-ஆமிடம் என்பது குருபகவானுக்கு ஏற்ற இடம் இல்லை. எதிலும் கவனம் தேவை. எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். தொழிலில் மந்த நிலை இருக்கும். பண வரவு தடைபடும். நோயின் தொல்லை, கடன் தொல்லை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். திருமணம் தள்ளி போகும். கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஏற்படும். உடலில், மனதில் சோர்வு ஏற்படும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்படும். 71/2 ஆண்டு ஜென்ம சனிபகவானின் தொல்லையும் இருக்கும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.
(பொற்காலம் தரும் குரு)
2-ஆம் இடமான தனம், குடும்பம், வாக்கு, லட்சியம் ஆகிய ஸ்தானத்தில் தங்கள் ராசிநாதனான பொன்னவன் குருபகவான் சஞ்சரிக்கிறார். இந்த குருபெயர்ச்சியால் நீங்கள் பட்டு வரும் கஷ்டங்கள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு, திருமண யோகம், புத்திரபேறு ஏற்படும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். பணம், பொன், பொருள், வாகனம் சேரும். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். கடன் அடைபடும். சனிபகவானால் பல தடைகள் இருப்பினும் ஸ்ரீ குருபகவானால் பல நன்மைகள் ஒராண்டிற்கு கிடைக்கும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பெறுகும்.
குறிப்பு- இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் பலமாகவோ, யோகம் தரும் இடத்தில் அமர்ந்து இருந்தாலோ தீய பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவும்.