Homeஆன்மீகம்கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு 17.11.2023 அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 26.11.2023 அன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவை கான பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளை துவக்கும் வகையில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. இதையொட்டி கோயிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து கோயிலில் இருந்து பந்தக்கால் கொண்டு வரப்பட்டு விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 8.25 மணிக்கு துலா லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், வக்கீல்கள் அருள்குமரன், கார்த்திகேயன், தொழிலதிபர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து சாமி மாடவீதி உலா வரும் விமானங்களும்,திருத்தேர்களும் பழுது பார்க்கப்பட்டு வண்ணங்கள் பூசும் பணி நடைபெறும்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!