Homeஅரசியல்பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?

பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?

பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?
அண்ணாமலையாரை தரிசித்த பிறகு டிடிவி.தினகரன் பேட்டி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு டிடிவி.தினகரன், தனது மனைவியோடு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக இணைந்த பிறகு முதன்முறையாக டிடிவி.தினகரன், தனது மனைவியோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இன்று மாலை வருகை தந்தார். விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், லிங்கோத்பவர் சன்னதிகளில் அவர் மனமுருக வேண்டினார்.

அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?

பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறீர்கள்? எத்தனை சீட் கேட்டிருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருக்கிறது. இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வெற்றி பெற்று வருவார். கடந்த பத்து ஆண்டுகளாக எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாக நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தரவும். 3வது முறையாக பதவியேற்கிற நரேந்திர மோடி, இந்தியாவை உலகத்திலேயே ஒரு தலைசிறந்த நாடாக, வல்லரசு நாடாக உயர்த்துவார், தொடர்ந்து அவர் வெற்றி பெற வேண்டும், இந்தியா உயர்ந்த நாடாக வர வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!