Homeஆன்மீகம்2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

 

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ 

கடக ராசிக்கான பலன்கள் – 

பரிகாரங்கள் 

வகிரகங்களில் சுபகிரகமான குருபகவான் சென்ற 14ந் தேதி வியாழக்கிழமை மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பர். 
இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மைகள் செய்யும்? எந்த ராசிக்கு தீமைகள் செய்யும் என்பதை கணித்து உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் 

திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும்
வாமனா வாஸ்து¸ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அவர்கள். தொடர்பு எண் – 9942911200

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்


மிதுன ராசிக்கான பலன்கள்- பரிகாரங்கள் வருமாறு:-

👉 மிதுன ராசியினர் குருவருள் திருவருள் புரிய வியாழ பகவானை வழிபடுவது அவசியம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கேற்ப புதனை ராசியதிபதியாக கொண்ட மிதுன ராசி நேயர்களே! பேச்சு சாமர்த்தியம்¸ ஆண்¸ பெண் கலந்த முகம் கொண்டவரும்¸ மனதில் வலிமை கொண்டு செயலில் பலவீனம் கொண்டவரும்¸ கல்வியில் தேர்ச்சியும்¸ அனுபவ பாடங்கள்  கற்ற வரும்¸ சுற்றத்தார்களுக்காக தன் நிலையை மாற்றிக் கொள்பவரும்¸ சுயநலம் கொண்டவரும்¸ இரண்டுபட்ட மனதுடைய மிதுனராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12¸6ல் சஞ்சரித்து வந்த ஸ்ரீராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 11¸5 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான்  வரும் 13-14.4.2022 முதல் 10ம்மிடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் 2¸4¸6 ஆகிய இடங்களை பார்வை யிடுகிறார். சனி பகவான் 8ல் அமர்ந்து 12¸2¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தைப் பொருத்தவரை குருபகவான் 10ல் அமர்வது அவ்வளவு சிறப்பு பெறாது. உங்கள் ராசிக்கு ராகுபகவான் ஒருவரே சிறப்பான சூழ்நிலையில் உள்ளார். மற்ற கிரகங்கள் எவரும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. ஆகவே உடல்- நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பலவீனம்¸ தடுமாற்றம்¸ தடங்கல்கள் நிச்சயம் நிகழும். இது தற்காலிகமானதே தவிர பயப்படத் தேவையில்லை. 

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு மற்றும் சனி ஆகியோரின் பார்வை சேர்ந்து  விழுகின்றது. ஆகவே உங்கள் பொருளாதார சூழ்நிலையானது அந்தரத்தில் ஆடும் காலமாகும். நீங்கள் அஷ்டம சனி காலத்தில் உள்ளதால் தனவரவில் நிறைவு பெற இயலாது. உங்களது வாக்கு  ஸ்தானம் பலவீனப்பட்டுள்ளது. எதற்காகவும்¸ எந்த சமயத்திலும் பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். தவளை தன் வாயால் கெடும் என்பதை நினைவில் கொள்ளவும். 

உங்களது குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை குடும்பம் சற்று சஞ்சலங்களை சந்தித்தாலும் குரு பார்வை என்பது சஞ்சலங்களிலிருந்து நிச்சயம் மீள உதவும். ஆகவே குருவருள் திருவருள் புரிய வியாழ பகவானை வேண்டிக் கொள்வோம். உங்களது தைரியமானது உடலளவில் இல்லா விட்டாலும்¸ மனதளவில் வைரம் பாய்ந்த நெஞ்சுறுதி¸ மனோதிடம் நிச்சயம் இருக்கும். அதை வைத்து இந்த குருப்பெயர்ச்சி காலத்தை கடந்துவிட முடியும். உங்களது சகோதர பாவமானது பலமிழந்து  இருப்பதால் அவர்கள் வழியில் ஏதாவது பிரச்சனைகளோ அல்லது விரயச் செலவுகளோ வரும் காலமாகும். மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களை எதிர்க்காமல் அரவணைத்துச் செல்வது மிகவும் நல்லது.

உங்கள் தாய் ஸ்தானமானது குருவின் அருளால் பலம் பொருந்தியதாக இருக்கும். தாயின் ஆயுளுக்கு தீர்க்கம் உண்டு. தாயின் உடல்நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிணி பீடைகள் வந்து  வந்து செல்லும். தாய்-மக்கள் உறவு சீராக இருக்கும். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை  இப்போது இருப்பதை அப்படியே தொடர்வது நல்லது. ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் இடம் விட்டு  இடம் பெயர்ந்து செல்வதற்கு வாய்ப்பு உண்டு. வீடு கட்டக்கூடிய அமைப்பு இன்னும் ஒரு வருட காலத்திற்கு கிடையாது. உங்கள் வண்டி வாகன ஸ்தானம் சுமாராக இருப்பதால் பழுது செலவுகளும் விரக்தியான சூழ்நிலையும் தென்படும். இன்னும் ஒரு வருட காலம் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின் சரியாகும்.

See also  இறைவன் ஒருவனே தத்துவத்தை விளக்கும் பரணி தீபம்

உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுபகவான் அமர சனிபகவான் பார்வையிடுகிறார். உங்களது குலதெய்வ வழிபாட்டை விருத்தி செய்வதன் மூலமாக பாவ பலத்தை குறைத்து புண்ணிய பலத்தை அதிகமாக்கிக் கொள்ள முடியும். 

உங்களது புத்திர ஸ்தானமானது வலுவிழந்த  சூழ்நிலையில் உள்ளதால் புத்திரப்பேறு இல்லாதவர்கள் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.  ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள்  குழந்தைகளின் உடல்¸ கல்விநிலை சுமாராகவே உள்ளது. உங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.

 உங்களது கடன் ஸ்தானத்திற்கு குருபார்வை விழுந்துள்ளது. குரு பார்வை  என்பது கூட்டிக் கொடுக்கும் என்பதால் கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் நிலையான அமைப்பு தென்படுவதற்கு அஷ்டமத்து சனி முடியவேண்டும். உங்களது உடல்நிலையில் தோல்¸ ரத்தம் மற்றும் சதை சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதால் தகுந்த  மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்களது தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவான் அமர்ந்துள்ளார். “ஈசனொரு பத்திலே தலையோட்டிலே இரந்து ண்டதும்” என்ற கவி நிச்சயம் உங்களுக்கும் பொருந்தும். விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்த நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் ஏற்படுவதும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் ஏற்படுதலும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளுவுடன் கூடிய ஊதிய உயர்வும் கிடைக்கும். 

உங்களது லாப ஸ்தானத்தைப் பொருத்தவரை இங்கு ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் உங்கள் தேவைக்கேற்ப பணவரவு என்பது ஏதாவது ஒரு  விதத்தில் வந்துகொண்டே இருக்கும். அதற்காக அடுத்தவர்கள் பணத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்  தேவைகளுக்கு எடுக்க வேண்டாம். இது மிகவும் எச்சரிக்கையான காலமாகும்.

உங்களது அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை ராகுபகவானை தவிர மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாமல் இருக்கிறது. இருப்பினும் குருபார்வை உங்களது தன¸ குடும்ப ஸ்தானத்திற்கும்¸ சுக ஸ்தானத்திற்கும் விழுவதால் ஓரளவு இந்த குருப்பெயர்ச்சியில் நிலைமையை சீர்செய்துகொள்ள முடியும். கடந்த ஐந்து வருட காலமாக நீங்கள் தவிக்கும் தவிப்பு எங்களுக்கு புரிகிறது. சிறிது காலம் பொறுத்திருங்கள்¸ காலம் கனிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல உங்கள் ராசி அதிபதி புதனின் அதிதேவதையான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி வந்தால் நல்லதே நடக்கும்.

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை தற்போது தற்சமயம் குருபலம் இல்லை. ஆதலால் திருமண நிகழ்வுகள் என்பது தள்ளிப்போகும் காலமாகும். ஜாதகத்தில் ஏதாவது திருமண தோஷம் இருப்பின் தக்க பரிகாரங்களை செய்து தயாராக இருக்கவும். அடுத்த குருப்பெயர்ச்சியில் திருமணம் நிச்சயம் நடைபெறும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். இந்த அஷ்டமத்து சனி காலத்தில் இவ்வளவு காலம் வாழ்க்கையை  நடத்தி வந்ததே பெரிய விஷயம்தான். சற்று பொறுத்திருக்கவும். காலம் கனியட்டும். உங்களது  மாங்கல்ய ஸ்தானத்தில் சனிபகவான் இருப்பதால் கணவனோ¸ மனைவியோ யாராவது ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். வாய்ப்பேச்சில் எச்சரிக்கை தேவை. மற்றபடி மாங்கல்யத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. உங்கள் சத்ரு பாவம் பலவீனப்பட்டுள்ளதால் ஒரு வருட காலம் பதுங்கிதான் ஆகவேண்டும். பாய்வதற்கு சற்று காலம் தேவைப்படும். 

உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை தகப்பனாரின் ஆயுள் நன்றாக இருக்கும். தந்தை  மக்களிடையே ஒருமித்த கருத்து நிலவாது. இருவருக்கும் இடையில் சற்று கசப்புணர்வுகள் இருக்கத்தான் செய்யும். விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் தீர அனுமன்  வழிபாடு செய்யவும். 

உங்களது கல்வி ஸ்தானம் சுமாராக உள்ளது. மிகுந்த கவனம் தேவை.  அனுதினமும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் அல்லது சரஸ்வதி தேவி காயத்ரியை பாராயணம் செய்துவர படிப்பு நன்றாக இருக்கும்.

பரிகாரம் :- திட்டை¸ ஆலங்குடி¸ பட்டமங்கலத்தில் உள்ள குருபகவானுக்கு பிரீதி செய்வதும்¸திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பம் ஊர்களிலுள்ள சனிபகவானுக்கு தல தீபம் ஏற்றுவதும்¸திருப்பாம்புரம்¸ கீழப்பெரும்பள்ளம்¸ காளகஸ்தி தலங்களில் உள்ள கேது பகவானை வழிபட்டுவருவதும்¸ நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் அளிப்பதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

See also  அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர தீ மிதி விழா

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6. 

அதிர்ஷ்ட ராசிக்கல் : மரகத பச்சை¸ வைரம் 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை¸ வெளிர்நீல நிறம்¸ வெளிர்நிறங்கள். 

பரிகார யந்திரங்கள் : மிதுனராசி யந்திரம்¸ ஸ்ரீவெங்கடாஜலபதி  யந்திரம். 

———————————————————-


கடக  ராசிக்கான பலன்கள்- பரிகாரங்கள் வருமாறு:-

👉 சனி¸ ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குருபகவான் உதவுவார். 

பௌர்ணமி சந்திரனின் பூரண அருள் பெற்ற கடகராசி நேயர்களே! கமுக்கமாக இருந்து காரியங்களை சாதிக்கும் திறனுடையவர்கள். பிறர் கருத்துக்களை ஏற்காமல் ஞானிபோல் அலைபவர்கள். உடலில் கவர்ச்சிக்கு முதலிடம் தருபவர்கள். எடுக்கும் முடிவுகளை அடிக்கடி மாற்றம் செய்பவர்கள். வீட்டில் உள்ளவர்களை விட அந்நியரிடத்தில் அதிகம் பாசம் வைக்கும் கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11¸5ல் சஞ்சரித்த ராகு¸ கேதுக்கள் வரும் 21.3.2022 முதல் 10¸4 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். குருபகவான் வரும் 13- 14.4.2022 முதல் 9ம் இடம் பெயர்ந்து 1¸3¸5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 7ல் அமர்ந்து 7ல் 9¸1¸4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த வருடம் உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசியில் சனி மற்றும் குரு ஆகிய இருவரின் பார்வை பலம் கிடைத்துள்ளது. உங்கள் ராசி அதிபதி சந்திரனைப் போல் உங்கள் உடல்நிலையும் வளர்பிறை 15நாள்¸ தேய்பிறை 15நாள் என்று சீரற்ற நிலையில் இருக்கும். மனம் ஒரு நிலைப்படாது. சஞ்சலங்களும் சந்தேகங்களும் மனதில் குடிகொள்ளும். 

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை குருவின் அருளால் ஓரளவிற்கு சாதகமான சூழ்நிலை தென்படுகிறது. “ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு” என்பது போல நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பொருளாதார ரீதியாக ஒரு வளர்ச்சியை காண முடியும். உங்களது வாக்கு ஸ்தானத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் எதுவும் பேச வேண்டாம். 

உங்களது குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை சங்கடங்களில் இருந்து ஓரளவு மீண்டு வர இந்த குருப்பெயர்ச்சி காலம் உதவும். வரும் காலங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும். 

உங்களது தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை விழுவதால் உங்களது உடம்பில்¸ மனதில் தைரியம் என்பது கூடும் காலமாகும். உங்களது சகோதர ஸ்தானமானது வலுவான நிலையில் உள்ளதால் சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு நற்பயன்கள் நிச்சயம் உருவாகும். அவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேதுபகவான் அமர்ந்து சனிபகவான் பார்வையிடுகிறார். உங்கள் தாயின் உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வயதானவர்கள் இருப்பின் தகுந்த பராமரிப்பு தேவை. தாய்-மக்கள் உறவுமுறையில் சற்று விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு தாய் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும் காலமாகும். 

உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நல்லது. புதிய வீடு¸ மனை வாங்குவதற்கு ஏற்ற காலம் இல்லை. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் காலமாகும். 

உங்களது வண்டி வாகன ஸ்தானமானது சுமாராகவே உள்ளது. வாகனத் தொழிலில் நாம் எதிர்பார்க்கும் லாபத்தை இந்த சூழ்நிலையில் நிறைவாக எதிர்பார்க்க இயலாது. 

உங்களது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் பார்வை விழுவதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று புண்ணிய பலத்தை  கூட்டிக்கொள்ளவும். நடப்பு கண்டக சனி காலத்திலும் வரும் அஷ்டமத்து சனி காலத்திலும் நாம் செய்யும் புண்ணியங்களே நம்மை காப்பாற்றும். 

உங்களது புத்திர ஸ்தானத்தை பொருத்தவரை குருவின் அருட்பார்வையால் ஒரு சிலருக்கு “குவா குவா” சத்தம் கேட்கும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களைச் செய்து கொண்டால் புத்திர ப்ராப்தியை பெற முடியும். உங்கள் குழந்தைகளின் உடல்நிலை¸ கல்வி நிலை குருவருளால் சிறப்பு பெறவுள்ளது. 

உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை சற்று சிரமமான சூழ்நிலையில் உள்ளது. ஆகவே இவ்விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். கடன் வாங்கும் போதும்¸ கொடுக்கும் போதும் தேவையான ஆவணங்கள் சரியாக இருக்கின்றதா என்று பார்த்து பரிசீலனை செய்யவும். உங்கள் உடல் நிலையில் வாதம்¸ கபம்¸ பித்தம் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படும் தன்மை உள்ளதால் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றவும்¸ கண்டகசனி காலம் என்பதால் வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை.

See also  தென்கைலாயம் எனப்படும் பருவதமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

உங்களது திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனிபகவான் அமர்ந்து உள்ளார்.இருப்பினும் உங்கள் ராசிக்கு 9ல் குருபகவான் உள்ளதால் குரு பலம் மிகுந்த நேரம் ஆகும். மிகுந்த சிரமத்திற்கு இடையில் சில திருமணங்கள் நடைபெறும் காலமாகும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் கடந்த இரண்டு வருடங்களாகவே இருந்து வருகிறது. மேலும் அஷ்டமத்து சனி காலம் முடியும் வரை இது தொடரத்தான் செய்யும். யாராவது ஒருவர் கிரகங்களின் கால நிலையை அறிந்து விட்டுக்கொடுத்து செல்லவும். 

உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்வித பாதிப்பும்  இல்லை.இருந்த போதிலும் ஒரு சிலருக்கு வேலையின் பொருட்டு அல்லது பிரச்சனைகளின் பொருட்டு  பிரிந்திருக்கக் கூடிய சூழ்நிலை உண்டு. உங்களது சத்ரு பாவமானது பலம் மிகுந்த சூழ்நிலையில் உள்ளதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவை இல்லாமல் வாய் பேச்சு கொடுக்க வேண்டாம். 

உங்களது பிதூர் பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருபகவான்  அமர்ந்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். இது உங்கள் ராசிக்கு திரிகோணஸ்தானம் ஆகும். ஆகவே சனி¸ ராகு-கேதுவால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குருபகவான் உதவுவார். அவரின்  பார்வை பலமும் நன்றாக உள்ளது. உங்கள் தந்தையாரின் ஆயுள் தீர்க்கம் பெறும். தந்தை-மக்கள் உறவு முறை சீராகச் செல்லும். தந்தையால் சில லாபங்களை நீங்கள் அடைய முடியும். 

உங்களது கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை குருவருளால் சிறப்புப் பெற உள்ளது. ஒரு சிலருக்கு மேல்நிலைக்கல்வி¸ வெளிதேச வாசம் போன்றவை ஏற்படலாம்.

உங்களது தொழில் ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். ஆகவே நிலையில்லாத தொழில் அமைப்பு தென்படுகிறது. விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு ஓடியாடி உழைப்பதும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு நிம்மதியில்லா நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலையும்¸ சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க தொந்தரவுகளும்¸ கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கனிதலும்¸ அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாதலும் நடைபெறும். உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை சற்று பின்தங்கிய சூழ்நிலையில் உள்ளது.

இருந்தபோதிலும் குருவருளால் சில நன்மைகள் நடந்தே தீரும். உங்கள் ராசியில் உச்சம் பெறும் குருபகவான் தற்சமயம் 9ல் அமர்வதால் நல்ல பலன்களே நடைபெறும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் காலமாகும். சேமிப்பு என்பது இச்சூழ்நிலையில் எதிர்பார்க்க இயலாது. உங்களது அயனம் சயனம் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசிக்கு குரு ஒருவரே  சாதகமான சூழ்நிலையில் உள்ளார். கண்டகச்சனி¸ சுக ஸ்தானத்தில் கேது¸ தசம ஸ்தானத்தில் ராகு என்று பெரிய கிரகங்கள் யாவும் சாதகமற்ற சூழ்நிலையில் உள்ளன. குருவருளே திருவருள் என்று வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வந்தால் தடங்கல்கள் விலகும். உங்களது ராசி  அதிபதி  சந்திரனின் அதிதேவதையான ஸ்ரீபராசக்தியை வணங்கி வர பார்புகழும் பாக்கியங்களைப் பெறலாம்.

பரிகாரம் :- திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீராகு¸ கேதுக்களை வணங்கி வருவதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ நூல்களில் துர்கா கவசத்தை பாராயணம் செய்வதும்¸ ஊனமுற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதும்¸ நாங்கள் 1.5.2022ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2¸1¸3¸9 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை¸ வெண்மை¸ பொன்னிறம்¸ வெளிர்மஞ்சள்.

அதிர்ஷ்ட ராசிக்கல் : முத்து 

பரிகார யந்திரங்கள் : கடகராசி யந்திரம்¸ ஸ்ரீசக்கரம்.

(இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன
ஜாதகப்படி¸ திசாபுத்தி ஆகியவற்றின்படி பலா பலன்கள் கூடவும்¸ குறையவும்
வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம் – K.V. ரெகுநாதன் )

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

2022 குருபெயர்ச்சி- மிதுனம்¸ கடக ராசிக்கான பலன்கள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!