Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 65 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.  ஆட்டோக்களுக்கு ரூ.50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

15.04.2022 மற்றும் 16.04.2022 அன்று நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோ ரிக்ஷா தனி நபர் கட்டணம் கீழ்கண்ட  வகையில்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

தனிநபர் கட்டணம் ரூ.50 மட்டும்

ஆட்டோ  ரிக்ஷா  செல்லும் வழித்தடம்

1.அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்)

2.அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை

திருக்கோயிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை

தனிநபர் கட்டணம் ரூ.30 மட்டும்

ஆட்டோ ரிக்ஷா செல்லும் வழித்தடம்

4.வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை

5.திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை

6.மணலூர் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோயில் வரை

7.அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோயில் வரை

8.திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை

9.திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம்  முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6வது குறுக்கு தெரு வரை

10.நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரை

11.பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை

12.தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை 

13.SRGDS பள்ளி முதல் அவலூர்பேட்டை ரயில்வே கேட் வரை

மேற்கண்ட கட்டண நிர்ணயம் 2022ம் ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு மட்டுமே பொருந்தும்.  

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

 கட்டணமில்லா பேருந்து வசதி

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணமில்லா பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளனர்.  பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்நகரை சுற்றி அமைக்கப்பெறும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து முக்கியமான இடங்களுக்கு செல்ல 50 கட்டணமில்லா தனியார் பேருந்து சேவை மற்றும் 16 கட்டணமில்லா தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு இலவச பஸ்கள்

  ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு கட்டுப்பாடு 

தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு பக்தர்கள் பயணிக்க ஆட்டோ ரிக்ஷா தனி நபர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 950 உள்ளுர் ஆட்டோகளுக்கு ஆவணங்கள் சரிபாக்கப்பட்டு¸ எந்தெந்த வழித்தடத்திற்கு  எவ்வளவு தனி நபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும்

மேலும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்டோக்கள் கட்டணம் பற்றி விவரங்கள் டிஜிட்டல் பேனர்கள் மூலம்  தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில்  எளிதாக பொதுமக்கள் பார்வையில் தென்படும் வகையில் அமைக்கப்படும். ஆட்டோ கட்டணம் குறித்து ஆட்டோக்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். 

மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 04175 232266  என்ற எண்ணிற்கு  தெரியப்படுத்தும் வகையில் டிஜிட்டல் பேனர்கள்¸ மற்றும் ஸ்டிக்கரில் பொறிக்கப்பட்டு  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.  

வருவாய் துறை¸ போக்குவரத்து காவல் துறை மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் இணைந்து சித்ரா பௌர்ணமி அன்று பொதுமக்கள்  இடையூறின்றி கிரிவலப் பாதையில் சென்று வர  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்புப்பணியில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையத்திலும் பணியமர்த்தப்படுவார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  திருவண்ணாமலை: 2 ½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!