Homeஅரசியல்சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன்- எ.வ.வேலு பிரச்சாரம்

சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன்- எ.வ.வேலு பிரச்சாரம்

சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன்- எ.வ.வேலு பிரச்சாரம்

சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன் ஓட்டு எண்ணும் போது 27¸ 32வது வார்டுகளில் தி.மு.க வெற்றி என வரும் என பிரச்சாரத்தின் போது எ.வ.வேலு கூறினார். 

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 25வது வார்டில் இருந்து அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அங்கு திமுக வேட்பாளர் முனியம்மாள் ஆதரித்து பேசினார்.

26 வார்டில் தி.மு.க வேட்பாளர் பிரகாஷ்சை ஆதரித்து பேசினார். 28வது வார்டில் திமுக வேட்பாளர் கோபி சங்கரை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது¸

சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன்- எ.வ.வேலு பிரச்சாரம்

இங்கு எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளரின் தகுதி என்ன? அவரால் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? அவர் வெற்றி பெற்று என்னிடம் வர முடியுமா? இங்கு நிற்கின்ற திமுக வேட்பாளர் கோபி சங்கர் இப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து இங்கேயே இருப்பவர் தேர்தலுக்காக வந்து இறங்குபவர் அல்ல. வாரம் வாரம்¸ தினம் தினம் கிப்ட் வாங்கி வந்து தாமரை நகர மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கிறீர்களா? இம்மக்கள் இளிச்சவாயர்களா? ஜனநாயகத்தை கிப்ட் கொடுத்து வாங்கி விட முடியுமா? இங்கு இருக்கிற பிரச்சினைகளை தமிழக அரசால் தான் தீர்க்க முடியும். இதற்காக டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியையா பார்க்க முடியும்? அவருக்குத்தான் இப்பிரச்சனையை தீர்க்க அதிகாரம் உள்ளதா? இப்பகுதியிலுள்ள சாலை¸ கால்வாய்¸ பத்திரப்பதிவு பிரச்சினைகளை தமிழக முதல்வர் தான் தீர்க்க முடியும். பிரதமருக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டில் தாமரை மலர முடியாது. வேண்டுமென்றால் பக்கத்திலுள்ள தாமரை குளத்தில் முளைக்கலாம். எதற்கு வேஸ்ட் ஆக செலவு செய்து மக்கள் மனதை கெடுக்கிறீர்கள். தாமரை நகர் உதயசூரியனின் கோட்டை. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வார்டில் திமுகவிற்கு பா.ஜ.க சார்பில் போட்டியிடும் சந்திரசேகரன் கடும் சவாலை தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிறகு தேனிமலையில் 27வது வார்டு திமுக வேட்பாளர் கீதா முருகன்¸ 32வது வார்டு திமுக வேட்பாளர் ஏழுமலை ஆகியோரை ஆதரித்து பேசினார் அவர் பேசியதாவது¸

தேனி மலையில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்பகுதிக்கு என்ன செய்யப்பட்டது? சுடுகாடு பிரச்சனையில் போலீசார் அழைத்துச் சென்றவர்களை வழக்கு இல்லாமல் விடுதலை செய்ய ஏற்பாடு செய்தேன். இங்கு எதிர்கட்சியில் நிற்பவர் வந்தாரா? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள்.அதுபோல் தேனி மலைக்கு ஏதாவது ஒன்று என்றால் என் தசை ஆடும். 

இங்கு ஜாதி சான்று¸ உதவித்தொகை¸ சாலை¸ மின்விளக்கு வசதி¸ ரேஷன் கடையை இரண்டாக பிரிப்பது உள்பட 12 கோரிக்கைகளை சொல்லியிருக்கிறீர்கள். திமுக வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் நான் செய்கிறேன். இந்த இரண்டு வார்டுகளிலும் நிற்கும் திமுகவினர் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உதயசூரியனினில் இங்கு நிற்பதற்கு 100 பேருக்கு லைன் கட்டி நின்றனர். அதில் இரண்டு பேரை நிற்க வைத்து மீதி 98 பேரை சமாதானப்படுத்தி உள்ளோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லா இடத்திலும் நிற்பதற்கு திமுக ஒன்றும் ஆளில்லாத கட்சி அல்ல. ஆள் நிரம்ப இருக்கிற கட்சிதான் இந்த கட்சி. தன்னிடம் கோடி கோடியாக பணம் இருப்பதால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிற அந்த ஏமாற்று பேர்வழிக்கு சொல்கிறேன். இது ஒரு நாள் கூத்து. நிரந்தரமாக 5 ஆண்டுகாலம் ஆட்சியை பயன்படுத்திக்கொள்ள மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்கட்சிக்காரன் யாரிடம் சென்று மனு தருவான்? என்னிடம் வந்து கொடுப்பானா? அல்லது முதலமைச்சரை சந்தித்து இந்த வார்டு பிரச்சினை பற்றி பேச முடியுமா?  எதிர்கட்சிகாரன் தன்னிடம் வசதி இருக்கிறது என்ற காரணத்தினால் தன்னிடம் கோடி கோடியாய் பணம் இருக்கிறது என்ற காரணத்தினால் நடத்துகிற ஒரு நாள் கூத்து இது.

சத்தியம் செய்கிறேன்¸ எழுதி தருகிறேன்- எ.வ.வேலு பிரச்சாரம்

மோட்டார் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறுவதை இப்போதே நிறைவேற்று. ஆர்.கே.நகர் மாதிரி ஏமாற்று வேலையா? ஜனநாயகத்தை காசு கொடுத்து வாங்கி விட முடியுமா?  தேனிமலை மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள். நீதான் ஏமாந்து விடுவாய். கீதா முருகன்¸ ஏழுமலை ஆகியோரின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஓட்டு எண்ணும் போது கீதா முருகன்¸ ஏழுமலை ஆகியோர் வெற்றி பெற்றார்கள் என்று தான் வரும். 

சத்தியம் செய்கிறேன். எதிர் கட்சிக்காரன் கூட போகிறானே அவன் எனக்கு ஓட்டுப் போடுகிறானா இல்லையா என பார். நான் எழுதி வேண்டுமானாலும் கொடுக்கிறேன். யார்? யார்? உன்னுடன் இருக்கிறார்கள் என போலீஸ் ரிப்போர்ட் வாங்கியிருக்கிறேன். உன்னுடன் இருப்பவர்களில் பாதிக்குமேல் எங்களுடைய ஆட்கள். ஏதோ பிழைப்பு ஓடட்டும் என நாங்களே அனுப்பி இருக்கிறோம். என்னை மாதிரி கூடலூரில் ஏரோட்டி சம்பாதித்த பணமா? உனக்கு எப்படி பணம் வந்தது என்று தெரியாதா? எப்படி எப்படியோ வந்த பணம் நடக்கட்டும்¸ தேனிமலை மக்கள் சாப்பிடட்டும்.

சாத்தனூர் அணை மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தியும் திருவண்ணாமலைக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது. எனவே 170 கிலோமீட்டர் தூரமுள்ள காவிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூ.5¸700 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து விட்டார். மே மாதம் வந்து அவர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதே போல் ரூ. 15 கோடியில் மாட வீதி முழுவதும் கான்கிரீட் ரோடுகள் போடுவதற்கான டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது. சொன்னதை செய்துள்ளேன் அந்த யோக்கியதை எவனுக்காவது உண்டா?  திருவண்ணாமலை வளர்ச்சி பெற, பலரும் பாராட்டக்கூடிய நகராக உருவாக்கிட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

32வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர் பழனியும்¸ 27வது வார்டில் அவரது மனைவி பத்மாவும் போட்டியிடுகின்றனர். 

See also  ரகசியம் சொல்லவா? திகில் கிளப்பும் சாவல்பூண்டி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!