பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

Date:

திருவண்ணாமலைக்கு 300 சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

ஐம்பெரும் பூதத்தலங்களுள் நடுநாயகமாக விளங்கும் திருத்தலம் திருவண்ணாமலையாகும். நினைக்க முத்தி, சித்தி தரும் இத்தலத்தில் பத்தியுடன் பணிவார்க்கு நித்திய நற்பேறு தரும். ஞானத்திரளாய் நின்று நல்ல அன்பர்களுடைய ஊனத் திரளை நீக்கும் பரம்பொருளாகிய அண்ணாமலைப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

படைப்புக் காலந்தொட்டுச் சிறப்புற்று விளங்கும் இந்த புனித தலத்திற்கு எண்ணில்லாத ஞானத் தபோதனர்கள் வந்திருக்கின்றனர். இன்றும் நாடி வருகின்றனர். ‘சோணாசலத்தின் மிக்க புண்ணிய ஸ்தலமில்லை, சோமவாரத்தின் மிக்க விரதமில்லை’ என்னும் பழமொழியும் திருவண்ணாமலையை பற்றியே எழுந்துள்ளது.

விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பது வரலாறாகும். திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைந்தால் பாவங்கள் தீரும், வேண்டுதல் நிறைவேறும் என்பதை நம்பிக்கையாக கொண்டு பவுர்ணமி, மகாதீப நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை தலத்தை நாடி வருகின்றனர்.

See also  கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சிவனடியார்கள் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். திருவண்ணாமலை பகுதியிலிருந்து திருப்பதிக்குத் தான் பெரும்பான்மையான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக சிவனடியார்கள் திருவண்ணாமலைக்கு புரட்டாசி மாத பிறப்பன்று பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பன்று, திண்டிவனத்தில் ஒன்று கூடிய 300 சிவனடியார்கள், திந்திரிணீஸ்வரர் கோயில் முன்பிருந்து பாதயாத்திரையை தொடங்கினார்கள். 69 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்த அவர்களுக்கு வழியில் பொதுமக்கள், குடிதண்ணீர், உணவு வழங்கி உபசரித்தனர். வழி நெடுகிலும் சிவனடியார்கள், திருமுறைகளை ஓதியபடி வந்தனர்.

நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்த அவர்கள், மண்டபத்தில் காத்திருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அண்ணாமலையாரை தரிசித்தனர்.

பாதயாத்திரையாக வந்து சிவனடியார்கள்,அண்ணாமலையார் தரிசனம்

இது குறித்து சிவனடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்களுடன் வந்த சிவனடியார்களுக்கு பலவித வேண்டுதல்கள் இருக்கும். ஆனால் எங்களுடைய பொதுவான நோக்கம் சைவத்தை வளர்ப்பது ஆகும். இதற்காகத்தான் திருமுறைகளை ஓதியபடியும், அதனுடைய பொருள்களை விளக்கியபடியும், 63 நாயன்மார்கள் வழியில் நடக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தியும் 16வது ஆண்டாக பாதயாத்திரையாக வந்திருக்கிறோம் என்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

கலன் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக நடக்கும் என்கவுன்டர் குறித்த கதை அம்சத்துடன்...

திருவண்ணாமலையில் முதன்முதலாக 6 வழிச்சாலை

திருவண்ணாமலையில் முதன்முதலாக 6 வழிச்சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று...

திருப்பதி லட்டு-திருவண்ணாமலையில் சூரை தேங்காய் உடைப்பு

திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பை கலந்தவர்கள் மீது தக்க தண்டனை வழங்க...

கிரிவலப்பாதை அமைக்கும் முன்பே வீடுகள் அமைந்து விட்டது

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் வீடுகள் அமைந்து விட்டதாக ஆக்கிரமிப்புகளை...

200 வருடம் பழமையான கோயிலை இடிக்க எதிர்ப்பு

சேத்துப்பட்டில் 200 வருட பழமையான விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து...

போளூர் பாலம் விவகாரம்-எ.வ.வேலு,அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோதல்

ஜனவரி மாதம் போளூர் பாலம் திறக்கவில்லை என்றால் எ.வ.வேலு தலை மீது...
error: Content is protected !!