Homeசெய்திகள்கடனுக்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலாளி தற்கொலை

கடனுக்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலாளி தற்கொலை

கடனுக்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலாளி தற்கொலை

கடனுக்காக கடத்திச் செல்லப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால் தாயில்லாத குழந்தைகள் நிர்கதியாக நிற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள நாகப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணியரசு(48). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் இறந்து விட்டார். இவர்களுக்கு பஞ்சவர்ணம்(11) என்ற மகளும்¸ தமிழ் முருகன்(6) என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில் மணியரசு¸ புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.40ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடனுக்கு மணியரசு ரூ.80 ஆயிரம் வரை வட்டி கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அசல் தொகையை மணியரசால் தர முடியவில்லை. ரூ.40ஆயிரத்தை கேட்டு சங்கர் தொல்லை கொடுத்து வந்தாராம். 

பணம் திரும்ப கிடைக்காத ஆத்திரத்தில் சம்பவத்தன்று சங்கர் தனது நண்பர் சதீஷ்சை அழைத்துக் கொண்டு நாகப்பாடி பகுதியில் உள்ள மணியரசு வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிறகு மணியரசுவை வலுகட்டாயமாக இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சங்கர் மிரட்டிதாக சொல்லப்படுகிறது. பிறகு மணியரசுவை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு சங்கரும்¸ சதீஷ்சும் வெளியே சென்று விட்டனர். 

அந்த சமயத்தில் மணியரசு¸ இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி விட்டு வெளியில் வந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் வீட்டில் இருந்தவர்கள்¸ சங்கருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு சங்கர் வீட்டிற்கு திரும்ப வந்த மணியரசு அங்கு மயங்கி கீழே விழுந்தார். அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

சங்கரின் குடும்பத்தினர் அவரை புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மணியரசு மேல் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

சங்கர்
சதீஷ்

இது குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் 
மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

ஏற்கனவே தாயை இழந்த மணியரசுவின் மகள் பஞ்சவர்ணமும்¸ மகன் தமிழ் முருகனும் தற்போது தந்தையையும் இழந்து நிர்கதியாக நிற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

கந்து வட்டி கும்பலின் அராஜகத்தால் உயிரிழுப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொண்டு  அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

See also  வியாபாரி துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!