Homeஆன்மீகம்17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

17ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் போலியோமைலிட்டிஸ் எனும் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும் போது நிரந்தரமான தசை வாதமும்¸ இடுப்பு¸ கணுக்கால்¸ மற்றும் பாதங்களின் குறைபாடுகளும்¸ ஊனமும் ஏற்படுகிறது. 

இந்தியாவில் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை அறவே ஒழிக்கும் பொருட்டு 1995 முதல் கடந்த 25 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது¸ கடைசியாக கடந்த ஆண்டு 19.01.2020 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. தற்போது தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 26-வது ஆண்டாக 17.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. 

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று  7.1.2021 திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் 17.01.2021 அன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி¸ இணை இயக்குநர் (நலப் பணிகள்) கண்ணகி¸ துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

See also  முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

இது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது¸ 

இம்முகாம் மூலம் இந்திய நாட்டில் பெருமளவில் போலியோ நோய் தாக்கம் குறைக்கப்பட்டு தற்சமயம் அந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம். ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்து இருப்பினும் 17.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. கொரானா காலம் என்பதால்¸ போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 2 லட்சத்து 19 ஆயிரத்தி 952 பேர் உள்ளனர். மாவட்டம் முழுவதிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் 7814  பணியாளர்களுடன்¸ 2031 முகாம்கள் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மேலும்¸ மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு¸ வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள். இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள்¸ அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

17ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

மேலும்¸ முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் புகைவண்டி நிலையம்¸ பேருந்து நிலையம்¸ திரையரங்குகள்¸ தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் ‘நடமாடும் முகாம்” மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர தொலை தூரத்தில் உள்ள எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாது அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

See also  போலீசார்-பக்தர்களிடையே தள்ளு முள்ளு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!