திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த துணை நடிகையை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(22). தந்தை பெயர் முனியப்பன். சிறுவயதில் இருந்தே சினிமா மீது மோகம் கொண்ட சத்யா பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனது சகோதரி திவ்யா வீட்டில் தங்கி முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அவருக்கு சில படங்களில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அந்த படங்கள் இன்னும் திரையிடப்படவில்லை.
சத்யாவும்¸சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சத்யா சென்றார். அப்போது அங்கு தனியார் ஆம்புலன்ஸ டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. 27வயதாகும் பிரபாகரனின் சொந்த ஊர் இனாம்காரியந்தல் கிராமம் ஆகும். தந்தை பெயர் மாணிக்கம்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சத்யாவை¸ பிரபாகரன் தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது இச்சையை தீர்த்து கொண்டாராம். அடிக்கடி அவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் சத்யாவை திருமணம் செய்து கொள்ள பிரபாகரன் மறுப்பு தெரிவித்தாராம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சத்யா¸ திருமணம் செய்து கொள்வதாக கூறி பிரபாகரன் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.