Homeசெய்திகள்சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

தன்னை கழற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண்¸ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்ததில் கார்¸ பைக் தீக்கிரையானது. 

திருவண்ணாமலை நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வருபவர் சுந்தர் வயது 58¸ இவர் தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

திருவண்ணாமலை காஞ்சி சாலையில் வசித்து வரும் சுமதி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரின் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அப்போது  சுந்தர் மற்றும் சுமதி இடையே தொடர்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

சுமதிக்கு நிறைய பணம் மற்றும் பொருட்களை சுந்தர் கொடுத்து வந்துள்ளார். மேலும் அவரது பெயரில் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தருக்கும் கள்ளக்காதலி சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து சுமதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பியுள்ளனர்.

See also  2 சிறுமிகள் படுகொலை-தாய் உயிர் ஊசல்

இதையடுத்து சுமதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் பணம் உள்ளிட்டவைகளை கொடுத்து கள்ள உறவை துண்டித்துள்ளார். அதன்பிறகு சுந்தருக்கு லட்சுமி என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டது.  கணவனை இழந்த லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சுமதி பெயரில் வாங்கியிருந்த காரினை புதிய கள்ள காதலியான லட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததுடன் வீடு¸ இடம் உள்ளிட்டவைகளையும் சுந்தர் வாங்கியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்டதும் சுமதி ஆத்திரமடைந்து சுந்தரை பழிவாங்க திட்டமிட்டார். நேற்று இரவு  சுந்தரின் வீட்டருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய பழைய கள்ளக்காதலி சுமதி கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். பிறகு தான் வாங்கி வந்த பெட்ரோலை; கார்¸ பைக் மீதும்¸ பல்வேறு பகுதிகளிலும் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

இந்த தீ மளமளவென பரவியதில் கார் மற்றும் பைக் எரிந்து சேதமானது. மேலும் முதல் மாடி மேல் மாடி என பல்வேறு இடங்களிலும் தீ பரவியது. படுக்கையில் இருந்த திடுக்கிட்டு எழுந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். சுந்தர் வீட்டில் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் சுமதி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

See also  கீழ்பென்னாத்தூர்: 10டன் கருப்பு கல்லோடு சிக்கிய லாரி

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டா சுந்தர், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை அவரது பழைய காதலி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!