Homeசெய்திகள்ஏ.டி.எம் கொள்ளையில் ஏ1 குற்றவாளி கைது

ஏ.டி.எம் கொள்ளையில் ஏ1 குற்றவாளி கைது

திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மலைப்பகுதியில் பாழடைந்த பங்களாவில் மறைந்திருந்த ஏ1 குற்றவாளியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐஜி என்.கண்ணன் உத்தரவுவின்படி வேலூர் டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கே.கார்த்திகேயன் (திருவண்ணாமலை) எஸ்.ராஜேஷ் கண்ணன் (வேலூர்), கே.எஸ்.பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) டி.வி.கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், இச்சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இச்சம்பவத்தில் கொள்ளையர்கள் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.5 லட்சமும், 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் கைப்பற்றப்பட்டது.

See also  ரகளை செய்த வெளிநாட்டவரை கட்டிப் போட்ட மக்கள்
ஏ.டி.எம் கொள்ளையில் ஏ1 குற்றவாளி கைது
ஆசீப் ஜாவேத் மறைந்திருந்த மலைப்பகுதி

மேலும் ஏ1 கொள்ளையனை கைது செய்ய டெல்லி மற்றும் ஹரியானா பகுதிகளில் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டனர். நேற்று 3ந் தேதி இவர்கள் ஏ1 கொள்ளையனை நெருங்கினர்.

ஏ.டி.எம் கொள்ளையில் ஏ1 குற்றவாளி கைது
துப்பாக்கியுடன் போலீசார்

ஹரியானா, ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தவுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரவல்லி மலைப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ஏ1 கொள்ளையனான ஆசீப் ஜாவேத்தை (வயது 30) துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம், மேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆசீப் ஜாவேத்திடமிருந்து ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் ஆசீப் ஜாவேத்தை மேவாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர்.

ஏ.டி.எம் கொள்ளையில் ஏ1 குற்றவாளி கைது
ஆசீப் ஜாவேத்தை கைது செய்து அழைத்து வரும் போலீசார்

தனிப்படை போலீசாரின் துணிகரமான செயலை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு ரூ.1லட்சம் வெகுமதியை அறிவித்துள்ளார்.


read on

மேவாட் கொள்ளையர்களின் இலக்கு ஏடிஎம்தான்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!