Homeசெய்திகள்கடனுக்காக கல்லூரி பேராசிரியர் கடத்தலா?

கடனுக்காக கல்லூரி பேராசிரியர் கடத்தலா?

திருவண்ணாமலை அருகே கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியர் ஒருவர் 2 மாதமாகியும் வீடு திரும்பவில்லை என மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பள்ளமிஷின் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி (வயது38). மனைவி பெயர் சவுமியா (33). இவர்களுக்கு ஜோகித்,வருண்நித்தா என என 2 பிள்ளைகள் உள்ளனர்.

கடனுக்காக கல்லூரி பேராசிரியர் கடத்தலா?
பாலாஜி

பாலாஜி கடந்த 13 வருடங்களாக நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ந் தேதி கல்லூரிக்கு சென்ற பாலாஜி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் வேலை செய்யவில்லை.

இதையடுத்து அவரது மனைவி சவுமியா, கணவரை கண்டுபிடித்து தருமாறு கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வருகிறார்.

காணாமல் போன பாலாஜி, சென்னையை சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி தரும்படி சிவக்குமார், அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

See also  தி.மலை பஜாரில் இனி ஒரு புறம் மட்டுமே பார்க்கிங்

எனவே கடனுக்காக பாலாஜி கடத்திச் செல்லப்பட்டாரா அல்லது அவர் காணாமல் போனதற்கு வேறு ஏதாவது காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!