Homeசெய்திகள்மீன் பிரியர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி

மீன் பிரியர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி

மீன் பிரியர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி

கட்லா¸ ரோகு உள்ளிட்ட புரத சத்து மிகுந்த 2 லட்சம் மீன்கள் திருவண்ணாமலை உள்பட 7 ஏரிகளில் வளர்க்கும் திட்டம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. 

மீன் உற்பத்தி

2020-2021 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்படி தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி குளங்கள் மற்றும் ஏரிகளில் நன்கு வளர்ந்த மீன்குஞ்சுகள் இருப்பு செய்து¸ அதன் மூலம் மாவட்டத்தின் மீன் உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் ஏரி¸ குளங்கள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.31 கோடியில் 59 ஏரிகளில் பொதுப்பணித்துறை மூலம் புனரமைக்கப்பட்டதால் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. இதே போல் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பி உள்ளது. இதை பயன்படுத்தி ஏரி¸ குளங்களில் மீன் வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. 

2 லட்சம் மீன்கள்

இதன்படி¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளத் துறை மூலம் 40 ஹெக்டேர் பரப்பிற்கு, ஒரு ஹெக்டேருக்கு 5000 எண்ணம் வீதம் மொத்தம் 2¸00¸000 எண்ணிக்கையிலான நன்கு வளர்ந்த இந்திய பெருண்கண்டை ரகம் கட்லா¸ ரோகு¸ மிர்கால் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டம் இன்று (04.01.2021) ஆரணி ஊராட்சி¸ ஒன்றியம்¸ சேவூர் ஊராட்சி¸ இரகுநாதபுரம் ஏரியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில்¸ இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 

மீன் பிரியர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி

இந்நிகழ்ச்சியில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் வ. க. கங்காதரன்¸ அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள்¸ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

See also  விளையாட்டு மைதானம் உருவானால் மருத்துவமனை இருக்காது -அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த 7 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை கீழ்நாத்தூர் ஏரியில் 90 ஆயிரமும்¸ எடப்பாளையம் விண்ணமலை ஏரியில் 20 ஆயிரமும்¸ கீழ்அணைக்கரை கரியான்செட்டி ஏரியில் 5 ஆயிரமும்¸ சேத்துப்பட்டு வட்டத்தில் மரக்குணம் கிராம குளத்தில் 2 ஆயிரமும்¸ வந்தவாசி வட்டத்தில் அரியப்பாடி குளத்தில் 5 ஆயிரம் மீன்களும்¸ வல்லம் குளத்தில் 3 ஆயிரம் மீன்களும்¸ ஆரணி வட்டம் ரகுநாதபுரம் ஏரியில் 75 ஆயிரமும் மீன் குஞ்சுகளும் வளர்க்கப்படுகிறது. 

நியாயமான விலையில்  

ஊராட்சிகளின் வருவாய் அதிகப்படுத்திடவும்¸ கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக பொருளாதார நிலை மேம்பாடு அடையவும் மற்றும் புரத சத்து மிகுந்த மீன் உணவு நியாயமான விலையில் பொது மக்களுக்கு கிடைத்திடவும் இத்திட்டம் வழி வகுக்கும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!